Saturday, November 12, 2011

Arulmigu sri pasupatheswarar &mangalanayagi tirukkovil ;sittur,edapadi taluk






ஆனந்த வாழ்வளிக்கும்


ஸ்ரீ மங்களநாயகி உடனமர் ஸ்ரீ பசுபதீஷ்வரர் திருக்கோவில்

அமைவிடம் :

சேலம்மாவட்டம் எடப்பாடி வட்டம் ,சித்தூர் கிராமம் மேல் சித்தூர் என்னும் குக்கிராமத்தில் அமைந்துள்ள பழங்கால சிவாலயங்களில் ஒன்றாகும் .பழங்காலமாக சிதிலமடைந்து இருந்த சிவாலயம் பல சிவனடியார்கள் முயற்சியால் பழங்கால கோவில் அமைப்பை மாற்றாமல் சுத்தம் செய்து அழகாய் வடிவமைத்துள்ளார்கள் .


மூலவர் :


ஸ்ரீ பசுபதீஸ்வரர் (லிங்க உருவில் அமைந்துள்ளார்)

அம்பாள் :ஸ்ரீ மங்களநாயகி

திருச்சிற்றம்பலம் :


குற்றம் அறுத்தார் குணத்தின் உள்ளார் கும்பிடுவார் தமக்கு அன்பு செய்வார்
ஒற்றை விடையினர் நெற்றிக் கண்ணார் உறைபதியாகும் செறிகொள் மாடம்
சுற்றிய வாசலின் மாதர் விழாச் சொற்கவிபாட நிதானம் நல்க
பற்றிய கையினர் வாழும் ஆவூர்ப் பசுபதியீச்சரம் பாடு நாவே.

பழங்கால திருக்கோவில் பல சிவனடியார்களால் புதுப்பிக்கப்பட்டு ஆவணி மாதம் 25 ஆம் நாள் 11.09.2011 அன்று புதுப்பிக்கப்பட்டு அழகாய் வடிவமைத்துள்ளனர். எடப்பாடி வட்டத்தில் அமைந்த திருக்கோவில் காவேரி ஆற்றிக்கும் (பூலாம்பட்டி) 7 கி.மீட்டர் தொலைவில் அருகே உள்ளது.

ஸ்ரீ பசுபதீஷ்வரர் திருக்கோவில் கொங்கு சோழர் காலத்தை சேர்ந்த திருக்கோவிலாகும் . திருக்கோவில் பழமை தெரிந்தாலும் ஆண்டுகள் அறியப்பட முடியவில்லை.

கிழக்கு நோக்கி இருக்கிறது திருக்கோவில் அமைப்பு. திருக்கோவில் கருவறை ,விமானம் ,மகா மண்டபங்கள் அழகானது. திருக்கோவில் அம்பாள் ஸ்ரீமங்களநாயகி சிலைகள் அழகானது. விநாயகர் ,முருகன் வள்ளி தெய்வானை ,நந்தீஸ்வரர் ,சண்டிகேஷ்வரர் ,தட்சிணாமூர்த்தி ,லிங்கேத்பவர் ,துர்க்கை,பைரவர் மற்றும் நவகிரககங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் முகப்பில் பழங்கால தெப்பகுளம் ஒன்று உள்ளது. திருக்கோவில் ஸ்தலமரமாக வில்வம் அமைந்துள்ளது.பிரதோஷம் ,மாசி மகா சிவராத்திரி ,சோமவாரப்பூஜைகள் சிறப்பாக நடைபெறுகிறது.

பேருந்தில் செல்ல வழித்தடம் :

சேலம் மாவட்டம் எடப்பாடி வந்து அங்கிருந்து சித்தூர் என்ற ஊருக்கு வந்து மேல் சித்தூர் எனக்கேட்டால் விபரம் சொல்வார்கள் .
பேருந்து எண் :

6,3A, நாகநாதன் ,தண்டபாணி போன்ற பேருந்துகள் உள்ளன, பழங்கால சிவாலயங்களில் தரிசிக்கும் எண்ணம் கொண்டவர்கள் பார்க்க வேண்டிய ஸ்தலமாகும் . பார்த்துவிட்டு கருத்துரையிடுங்கள் .நன்றி.

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...