Monday, November 14, 2011

ஈரோட்டுக்கு வந்த திருப்பதி ஸ்ரீ சீனிவாசப்பெருமான்



ஈரோட்டுக்கு வந்த திருப்பதி ஸ்ரீசீனிவாசப் பெருமாள்

திருப்பதி திருமலை தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீ வாரி சேவா டிரஷ்ட் இணைந்து நடத்திய சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாண உற்சவவிழா 14.11.2011 அன்று ஈரோடு வ.உ.சி விளையாட்டு அரங்கில் இலட்சக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பாக நடத்தப்பட்டது.

திருப்பதி திருமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட திருப்பதியில் உற்சவர் சிலைகளான ஸ்ரீதேவி,பூதேவி ,சீனிவாசப்பெருமாள் பெரிய வாகனங்களில் ஈரோட்டுக்கு கொண்டு வரப்பெற்று சிறப்பு செய்தனர் .திருப்பதியில் பெருமாளுக்காக பூஜை செய்யும் பெரியோர்கள் அனைவரும் இறைவனுக்கு பூஜை செய்தார்கள் .

முதலில் கருங்கல்பாளையம் வந்த சீனிவாசப்பெருமாளின் உற்சவ சிலைகளுக்கு காவிரி ஆற்றங்கரையில் ஸ்ரீ வாரி டிரஸ்ட் மூலம் கேரளா சென்டை மேளம் முழங்க வரவேற்று பெருந்துறை ரோட்டில் உள்ள யு.ஆர்.சி பள்ளியில் பக்தர்கள் தரிசனம் செய்ம வைக்கப்பட்டது. பின்பு ஈரோட்டின் பஸ் நிலையம் அருகிலுள்ள வ.உ.சி மைதானத்தில் அமைந்திருந்த பிரமாண்ட மேடைக்கு சீனிவாசப்பெருமாள் அழைத்து வரப்பெற்றார் .


சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மாலை 06.00 மணிக்கு பக்தர்கள் வெள்ளத்தில் சீனிவாசப்பெருமாள் திருக்கல்யாணம் துவங்கியது. உள்ளே வந்த பக்தர்களுக்கு ஸ்ரீ வாரி டிரஸ்ட் மூலமாக திருப்பதியில் வழங்கப்படும் லட்டுகள்,பிரசாதங்கள் ,துளசி தீர்த்தம் கொடுத்து நாமங்கள் இடப்பட்டன. ஸ்ரீசீனிவாசப்பெருமாளின் பதிகங்கள் தரப்பட்டன.

ஈரோடு தினமலர் குழுமத்தால் இறைவன் புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு பதிப்பு அழகாக வெளியிடப்பட்டது.

திருக்கல்யாண விழாவில் தேவர்களை வரவேற்று பின் சீனிவாசப்பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவிக்கு கங்கணம் கட்டி ,திருமண ஆடை சமர்பித்து ஸ்ரீ பெருமாளிடம் இருந்த ஆடைகள் ஸ்ரீதேவி ,பூதேவிகளுக்கு அணிவிக்கப்பட்டு திருக்கல்யாண சிறப்பாக நடைபெற்றது.

திருப்பதியில் இருந்து வந்திருந்த சுந்தர வரத பட்டாச்சரியர் குழுவினர் சிறப்பாக பக்தர்கள் கண்டு களிக்குமாறு திருக்கல்யாணத்தை நடத்தி முடித்தார்கள் . இரண்டு டிஜிட்டல் திரைகள் மூலம் அனைத்து பக்தர்களும் இறைவன் திருக்கல்யாணம் தெளிவாக ரசிக்கும்படி அமைந்திருந்தது பாராட்டுக்குரியது. விழாவின் கடைசியாக கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது.


"கோவிந்தா கோவிந்தா" என பக்தர்கள் கோஷம் முழங்க வழிபட்டனர் ,மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்த வ.உ.சி மைதானம் பார்க்கையில் திருப்பதியில் இருந்ததைப்போல உணர்வு .

வறுமையின் காரணமாகவும் ,வேலப்பளுவின் காரணமாகவும் திருப்பதி சென்று ஸ்ரீசீனிவாசப் பெருமானை வணங்க முடியாதவர்களுக்கு ஓர் பெரிய வரப்பிரசாதமாக ஸ்ரீசீனிவாசப்பெருமானின் திருக்கல்யாணத்தையே பிரமாண்டமாக நடத்தி எல்லோர்க்கும் இலவச அனுமதி அளித்து அனைவரும் கண்டுகளிக்கும் வரையில் விழாவை ஏற்பாடு செய்த ஸ்ரீ வாரிடிரஸ்ட்க்கும்,திருப்பதி திருமலை தேவஸ்தான சபாவுக்கு நம் வலைத்தளத்தின் மூலம் வாழ்த்துக்கள் .

உப செய்தி : கடந்த 2006 ஆம் ஆண்டு ஸ்ரீ வாரி டிரஸ்டால் ஸ்ரீசீனிவாசப்பெருமாளுக்கு திருக்கல்யாணம் செய்விக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தரிசனம் செய்ய முடியாதவர்கள் வருந்த வேண்டாம் .அடுத்த முறை திருக்கல்யாணம் நம் வலைப்பூவில் முன்பே அறிவிக்கப்படும்

நட்புடன் குரு.பழ.மாதேசு.

2 comments:

''இறைவனடி யுவராஜா'' said...

வாழ்க வளமுடன்

ஜீ வணக்கம் உங்கள் சேவை தொடர ....
இறைவன்தாள்பணியும் தெண்டன்.
நட்புடன்....
யுவராஜா
திருச்சிற்றம்பலம்

palamathesu said...

நன்றி ஜீ உங்கள் கருத்துரைகள் எம்மை உத்வேகப்படுத்துகிறது.வாழ்க வளமுடன்

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...