Tuesday, November 15, 2011

அரசு அருங்காட்சியம் , ஈரோடு





ஈரோட்டில் பார்க்க வேண்டிய இடங்கள் பல இருந்தாலும் பல ஆவணங்களின் கலைக்கூடமாக திகழ்வது அரசு அருங்காட்சியகங்கள் ஆகும் . அருங்காட்சியங்கள் பழங்காலத்தில் வாழ்ந்த மனிதன் உபயோகப்படுத்திய பொருட்கள் புதைபொருள் ஆய்வுகள் மூலமாக கிடைக்கும் பொருட்களை சேகரித்து நிகழ்கால மக்களின் பார்வைக்காக வைக்கப்படுவது,


ஈரோடு மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற அகழ்வராய்ச்சிகளால் ,தொல்பொருள் ஆய்வுகளில் கிடைக்கப்பெற்ற பழங்கால ஆவணங்கள் இங்கு உள்ளது. ஈரோட்டில் வ.உ.சி பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ஈரோடு அரசு அருங்காட்சியகம் அழகாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

பராமரிப்புக்காகவும் ,அனுமதிக்கட்டணமாகவும் ரூ 5 பெற்றுக்கொள்கிறார்கள் . நுழைவாயிலில் பல ஆய்வுகளில் கிடைக்கப்பெற்ற திருக்கோவில் கல்லால் ஆன சிற்பங்கள் உள்ளன.

அருங்காட்சியகத்தில் காணப்படுபவை :

புவியியல் கற்கள், விலங்கியல் மாதிரிகள் , கல்லாகிய எலும்புகள் , வலம்புரி இடம்புரி சங்குகள் ,பவளம்,கடற்பஞ்சு,மரவகைகள் ,செடிகள் ,தொல்லியல் ,நாணயவியல் , பழங்கால ஆவணங்கள் , ஓவியங்கள் ,பாணைகள் , ஜோதிட சுவடிகள் , மரச்சிற்பங்கள் ,குந்தாணி,ஈமத்தாளி. தோல் பதுமைகள் அருங்காட்சியக நூல்கள் ,துகிலியல் படைப்புகள் ,அரிய பழங்கால புகைப்படங்கள்,தமிழ் எழுத்து வளர்ந்த விதங்கள் .போன்ற அரிய ஆவணங்கள் உள்ளன.


பெரிய எதிர்பார்புடன் செல்லாதீர்கள் . ஒரு மணி நேரம் செலவழிக்க பழங்கால ஆவணங்களை அறியலாம் . குழந்தைகளை கூட்டிச்சென்று காண்பிக்க ஏற்ற இடம் . வெளியில் இருக்கும் சுவாமி சிலைகள் மழையால் பாதிக்காமல் பாதுகாத்தால் நன்றாக இருக்கும் .

ஈரோடு பக்கம் வந்தால் பஸ் நிலையம் அருகில் உள்ள வ.உ.சி.பூங்கா நுழைவாயில் எதிரே உள்ள அழகாக பராமரித்து வரும் ஈரோடு அரசு அருங்காட்சியகத்தை பார்த்து விட்டு எழுதுங்கள்.


நட்புடன் குரு.பழ.மாதேசு

2 comments:

''இறைவனடி யுவராஜா'' said...

வாழ்க வளமுடன்

ஜீ பயனுள்ள பதிவு

நட்புடன் .....
யுவராஜா

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

நன்றி நன்பரே ! வாழ்க வளமுடன்

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...