Tuesday, November 1, 2011

அருள்மிகு மீனாட்சி உடனமர் சொக்கநாதர் ஆலயம் ,அம்மாபேட்டை பவானி வட்டம்






அருள்மிகு மீனாட்சி உடனமர் ஸ்ரீ சொக்கநாத சுவாமி திருக்கோவில் (Arulmigu sokkanathar and meenatshi amman temple, ammapet post,bhavani taluk erode district);

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் அம்மாபேட்டையில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள அழகான சிவாலயமாகும்.அம்மாபேட்டை எனும் ஊர் பவானியிருந்து மேட்டூர் செல்லும் வழியில் 20 வது கி.மீட்டரில் அமைந்துள்ளது.

சேலம்மாவட்டம் மேட்டூரில் இருந்தும் 20கி.மீட்டர் தொலைவில் அம்மாபேட்டை உள்ளது.அந்தியூரில் இருந்தும் சுமார் 20கி.மீ தொலைவில் அம்மாபேட்டை உள்ளது. காவிரி ஆறு துவங்கி ஈரோடு மாவட்டத்தில் பயணித்து வருகையில் காவிரி படித்துறையில் உள்ள முதல் சிவாலயமாகும் .

திருக்கோவில் அமைப்பு :

திருக்கோவில் கிழக்கு நோக்கியும் , காவிரி வடக்கிருந்து தெற்காக ஓடுகிறது. பிரமாண்ட அரசமரத்தடி விநாயகர் தரிசனம் செய்து திருக்கோவில் முகப்பில் உள்ள ஆதிமூல கணபதியையும் ,வீரபத்தரர் சன்னதியும் வணங்கி ராஜ கோபுரம் தரிசித்து உள்ளே சென்றால் நந்திதேவர் தரிசனம் செய்து மூலவரான அருள்மிகு சொக்கநாதசாமியை லிங்க உருவில் தரிசனம் செய்யலாம் .

உயிர்புடன் உள்ள சிவனை தரிசனம் செய்ய நல்லதோர் ஸ்தலமாக அமைந்துள்ளது.திருக்கோவில் நல்ல அகலமாக தரிசனம் செய்ய ஏதுவாக உள்ளது. தட்சிணாமூர்த்த சன்னதி கன்னிமூலகணபதி ,மகாலட்சுமி சன்னதி, சூரிய சந்திரர்கள்,நவகிரகங்களென திருக்கோவில் எல்லா சிவாலயங்கள் போன்ற அமைப்பிலுள்ளது. மீனாட்சி அம்மன் சன்னதி அருள்மிகு சொக்கநாதர் சன்னதியின் இடப்புறம் அழகாக அமைந்துள்ளது.

மீனாட்சி அம்மனின் உருவம் அழகாக அமைந்துள்ளது. ஸ்தலமரமாக பழங்கால வன்னி மரம் அமைந்துள்ளது. சிவாலயத்தில் வில்வமரம் வேண்டுமென்பதால் வன்னி மரமருகில் வில்வமரம் அமைந்துள்ளது.

பூஜைநேரங்கள் :

காலை 0600மணி முதல் மதியம் 0100மணிவரையிலும் ,மாலை 04.00மணிமுதல் 08.00மணி வரை திருக்கோவில் திறக்கப்பட்டிருக்கும் .விஷேச காலங்களில் முழுநேரமும் திறக்கப்பட்டிருக்கும் . வள்ளி,தெய்வானை உடனமர் சுப்பிரமணியர் ,பிரம்மா,துர்க்கை,சண்டிகேஸ்வரர் ,காலபைரவர் சிலைகள் பார்த்து தொழ வேண்டிய சன்னதிகளாகும் . அருகே திருக்கோவில் திருமண மண்டபமும் உள்ளது.

புது சிவாயலயங்கள் தேடி வழிபடும் சிவனடியார்கள் ,பக்தர்களுக்கு நிறைவு செய்யும் ஆலயமாக அருள்மிகு மீனாட்சி உடனமர் சொக்கநாதர் ஆலயம் இருக்கும் .முடிந்தால் ஓர் பிரதோஷ வேளையில் கலந்துவிட்டு எழுதுங்கள் ,

நட்புடன் குரு.பழ.மாதேசு

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...