Friday, November 4, 2011

அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோவில் பவளமலை ,கோபி





" விழிக்குத் துணை திருமென்மலர்பாதங்கள்
மெய்மை குன்றா மொழிக்குத்துணை முருகா என்னும்
நாமங்கள் முன்பு செய்த பழிக்குத் துணை அவன்
பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத்துணை
வடிவேலும் செங்கோடன் மயூரமுமே."


அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமாரசாமி திருக்கோவில் ;
(Arulmigu sri muthukumarasamy tirukkovil ,PAVALAMALAI,cobichettypalayam ) :


ஈரோடு மாவட்டம் கோபிவட்டம் கோபிசெட்டியபாளையத்தில் (GOBI) பவளமலை எனும் அழகிய குன்றில் அருள்பாலிக்கும் ஸ்ரீ முருகர் ஆலயமாகும் .

எப்படிச்செல்வது :
கோபியில் இருந்து அத்தாணி செல்லும் வழியில் பி.கே .ஆர் மகளீர் கல்லூரி (P.K.R ARTS COLLEGE FOR WOMENS) பஸ் ஸ்டாபில் இறங்கி சுமார் ஒரு கி.மீட்டர் கிழக்கு நோக்கி சென்றால் பவளமலை அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோவில் வருகின்றது. அடிவாரத்தில் பெரிய அரசமரமும் விநாயகரை தரிசனம் செய்து பயணிக்கலாம் .

மூலவர் :

அருள்மிகு முத்துக்குமாரசாமி (முருகர் ) அழகிய குன்றில் சுமார் 60படிகள் ஏறிச்சென்றால் திருக்கோவில் மூலவரை தரிசனம் செய்யலாம் . "அழகன் முருகன் " என்ற சொல்லிற்கு ஏற்ப மூலவர் ஸ்ரீ முத்துக்குமாரசாமியின் அழகு முகம் காண்போர்க்கு பக்தி பரவசத்தில் ஆழ்த்தும் .

பிரதி செவ்வாய் கிழமைகளில் காலை 06.00மணிக்கு திரிசதை அர்ச்சனை நடைபெறுகிறது. கிருத்திகை,சஷ்டி,காலங்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.திருக்கோவில் கொடிமரமும் நவகிரக சன்னதிகளும் காண வேண்டிய ஒன்று .திருக்கோவில் வளாகத்தில் அருள்மிகு கைலாசநாதர் சன்னதி தரிசிக்க வேண்டிய ஒன்றாகும் .

திருக்கோவில் படி அல்லாது கார்,பைக் போன்ற வாகனங்களும் செல்ல தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கந்தசஷ்டித்திருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. பாடல் பெற்ற ஸ்தலம் .பார்க்கவேண்டிய ஆலயம் .

கோபி பக்கம் வந்தால் கண்டிப்பாக ஸ்ரீ முத்துக்குமாரசாமி திருக்கோவிலை
தரிசித்து விட்டு எழுதுங்கள் .

1 comment:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...