Tuesday, November 1, 2011

கோபி பச்சைமலையில் அருளும் அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோவில்




முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே யீசன் மகனே-யொருகைமுகன்
nம்பியே நின்னுடைய தண்டைக்கால்
எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான் .

முருகப்பெருமானின் ஆலயங்கள் ஈரோடு மாவட்டத்தில் பல உண்டு . அதில் குறிப்பிடத்தக்க ஓர் அழகிய குன்றில் அமைந்த பச்சை மலை எனும் அழகிய ஓர் மலை கோபி வட்டம் மொடச்சூர் கிராமத்தில் அமைந்துள்ளது.

கோபி பஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பச்சைமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அழகான ஓன்று.பாடல் பெற்ற ஸ்தலமும் ஆகும் .

சுமார் 100படிக்கட்டுகள் ஏறினால் அழகிய அழகன் முருகப்பெருமானை தரிசனம் செய்யலாம் . அழகிய கொடிமரமும்,முகப்பில் ஏழு கலசம் கொண்ட பிரமாண்ட இராஜ கோபுரமும் அழகானது.

முன்பாக உள்ள வித்யா கணபதியாரை தரிசித்து அங்கிருந்து சென்றால் உள்ளே பெரிய மண்டபமும் நேரே சென்றால் முன்பாக காக்கும் கடவுளாக வீரபாகு ,வீரமகேந்திர் நிற்க உள்ளே மூலவராக நேர்த்தியாக அழகே உருவான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்யலாம் . சுற்றிலும் கருப்பு பளிங்குகற்களால் கட்டப்பெற்றுள்ளது.

பளபளக்கும் திருக்கோவிலை பார்க்கும் போதே மதிப்புமிகுந்த ஒன்றாக உள்ளது. கோபிசெட்டிய பாளையத்தின் பசுமை மிகுந்த அழகிய அமைப்பை திருக்கோவிலில் இருந்து ரசிக்கலாம் . திருக்கோவில் வளாகத்தில் சீதேவி,பூதேவி உடனமர் ஸ்ரீ மரகத வெங்கடேசப்பெருமாள் சன்னதியும் ,ஆதிவிநாயகர்,ஆதி ஸ்ரீமரகதீஸ்வரர்,மரகதவள்ளி சன்னதிகளும், தரிசித்து அருள்பெறவேண்டிய ஒன்றாகும் .

வள்ளி ,தெய்வானை உடனமர் கல்யாணசுப்பிரமணியர் சன்னதியை வணங்க திருமணத்தடைகள் அகலும்.சுபகாரியங்கள் கைகூடும் . அருணகிரிநாதர் சன்னதிகளும் ,இடும்பன் சன்னதிகளும் பார்த்து தரிசிக்கலாம் . பிரமாண்ட மகா மண்டபத்தில் குருபகவான், நவகிரக சன்னதிகளும் உள்ளன. நவகிரக சன்னதிகளில் சற்றே வித்தியாசமாக நடுவே சூரியபகவானுக்கு பெரிய சிலையும் ,சுற்றிலும் மற்ற நவகிரகங்களும் மற்ற கோவில்களில் உள்ளதைப்போல அல்லாமல் அழகாய் அமைத்திருப்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும் .


கிருத்திகை,சஷ்டி,பெளர்ணமி,அம்மாவசை, நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் .செவ்வாய் கிழமைகளில் விஷேச பூஜை நடைபெறும் .சூரசம்ஹாரம் ,திருக்கல்யாணம் சிறப்பாக செய்யப்படுகிறது. மலைக்கோவில் வாகனங்கள் மேலே செல்ல ஏதுவாக பாதை அமைக்கப்பட்டுள்ளது. பச்சை மலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்ய வாழ்வில் தடைகள் நீங்கி உயர்வு பெறுவது கண்கூடு.


அழகிய முருகர் ஆலயங்களில் ஒன்றான பார்க்க வேண்டி ஸ்தலங்களில் ஒன்றான பச்சை மலை முருகரை வணங்கி வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற அழைக்கும் அன்பன்


குரு .பழ மாதேசு. குருவரெட்டியூர் .

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...