Friday, November 4, 2011

தமிழனின் ஓர் அற்புதமுயற்சி காலிங்கராயன் அணைக்கட்டு




காளிங்கராயன் அணைக்கட்டு

ஈரோடு மாவட்டம் பவானிக்கு அருகிலுள்ள ஓர் சிறிய அணைக்கட்டாகும் .பவானி ஆறு காவிரியில் கூடும் முன்பாக கடலில் வீணே கலக்கக்கூடாது என யோசித்து பவானி ஆற்றின் ஓர் பகுதி நீரைத்தடுத்து உருவானதுதான் காலிங்கராயன் அணைக்கட்டாகும் .

காலிங்கராயன் அணைக்கட்டையும் ,வாய்க்காலையும் ஏற்படுத்தியவர் காலிங்கராயன் என்பவராவார் .கி.பி 12 ஆம் நூற்றாண்டில் நஞ்சையன் என்பவர்க்கு மகனாக பிறந்த லிங்கையன் என்பவர் பாண்டிய மன்னரால் " காலிங்கராயன்" என கவுரவிக்கப்பட்டவர் .இவர் வெள்ளோட்டை தலைநகராக கொண்டு ஆட்சி செய்தபோது கட்டப்பட்ட பணியாகும்


காலிங்கராயன் வாய்க்கால் செல்லும் தூரம் :

பவானி காலிங்காராயன் அணைக்கட்டில் இருந்து சுமார் 57 மைல்கள் பாசன வசதிக்காக பயன்பட்டு நொய்யல் ஆற்றில் ஆயுடயார் பாறை என்னுமிடத்தில் கலக்கிறது. அணை 12 ஆண்டுகாலமாக கட்டப்பட்டு கி.பி 1283ல் முடிக்கப்பட்டு பாசன வசதிக்காக திறக்கப்பட்டது. காலிங்கராயன் வாய்க்காலின் சிறப்பம்சமே இடப்புற மதகுகளை மட்டுமே கொண்டது. கோணவாய்க்கால் என்றும்,ஈரோட்டை கடந்து செல்லும்போது காரை வாய்க்கால் என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது.


700ஆண்டுகளுக்கு முன்னால் தமிழன் ஒருவனால் பாசனத்திற்காக யோசித்து உருவாக்கப்பட்ட அருமையான முயற்சி. காலிங்கராயன் எனும் அந்த நல்ல உள்ளத்தின் பெயராலே அந்த ஊர் இன்றும் காளிங்கராயன் பாளையம் என்று அழைக்கபட்டு சிறப்பு பெற்று வருகிறது. சித்தோடு லட்சுமி நகரில் இருந்து பவானி செல்லும் வழியில் உள்ளது.

தற்போது அழகிய முறையில் நம் பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் காலிங்கராயன் அணைக்கட்டில் பூங்கா தயராகி வருகிறது. திறக்க சற்று காலம் ஆகும். இந்த அணையில் இருந்து வெளியாகும் பவானி ஆற்றின் உபரி நீர் காவிரியாக மாறி கூடுதுறையில் கலந்து விடுகிறது. காலிங்கராயன் அணைக்கட்டை பார்வையிட பொதுப்பணித்துறையினர் அனுமதி பெற்றே செல்ல வேண்டும் .

பெரிய எதிர்பார்ப்புடன் வந்தால் ஏமாற்றமே மிஞ்சும் .பவானி பகுதிக்கு வந்தால் பார்த்துவிட்டுச்செல்லலாம் . இங்கு அழகிய தீம் பார்க் அமைத்தால் நன்றாக இருக்கும் . தைப்பண்டிகை கருநாள் அன்று குடும்பத்துடன் வந்து இப்பகுதிமக்கள் காலிங்காராயன் அணைக்கட்டை பார்வையிட்டு அழகை ரசித்துச்செல்வது வழக்கம் .

தமிழனின் ஓர் அற்புத படைப்பான காலிங்கரான் அணைக்கட்டு வரலாற்றில் முத்திரையிடப்பட்ட ஆவணம் . பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நீர்பாசன வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட காலிங்கராயன் அணைக்கட்டு வாய்க்கால்களை உருவாக்கிய திரு.லிங்கையன் எனப்படும் காலிங்கராயனை வணங்குகிறேன்.

பார்த்துவிட்டு எழுதுங்கள் .

நட்புடன் குரு.பழ.மாதேசு.

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...