Thursday, March 8, 2012

இயற்கையின் அரவணைப்பில் பவானிசாகர் அணைக்கட்டும் பூங்காவின் அழகு


பவானி சாகர் அணைக்கட்டும் பூங்காவின் அழகும் அமைவிடம் :

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பவானி சாகர் கெத்தமங்கலம் என்னும் இடத்தில் பவானி சாகர் அணைக்கட்டு அமைந்துள்ளது . சத்தியமங்கலத்தில் இருந்து 16 கி.மீட்டர் தொலைவிலும் ,மேட்டுப்பாளையத்தில் இருந்து 35 கி.மீட்டர் தொலைவிலும் பவானிசாகர் அணைக்கட்டு அமைந்துள்ளது. பவானி சாகர் அணைக்கட்டில் மாயாறு இணைந்து கொள்கிறது.


பின்னர் 70 கி.மீட்டர் பவானி ஆறு காவிரியுடன் பவானியில் இணைந்து கொள்கிறது. நீலகிரி மாவட்டத்தில் துவங்கி பல மின்திட்டங்களில் பயன் தந்து மாயாற்றை இணைத்துக்கொண்டு மேற்குத்தொடர்ச்சி மலைச்சாரலில் மூலிகைகளை தழுவிக்கொண்டு பவானிசாகர் அணையில் இணைந்து ஈரோடு மாவட்டத்தில் இணைகிறது .

சுதந்திரத்திற்கு பின் கி.பி 1948ல் துவங்கப்பெற்ற 1955 ல் முடிக்கப்பெற்றதாக அணைக்கட்டின் வரலாறு அறிவிக்கிறது. சுமார் 7 கி.மீட்டர் மண்ணால் அணைக்கட்டை கட்டி சாதனை செய்துள்ளது வியப்பான ஒன்றாகும் .

நான் சிறிய வயதில் இருந்தபோது ஆடி 18 அன்று ஒருநாள் மட்டும் மக்களின் பார்வைக்காக அணையின் மேற்பகுதியில் பார்வையிட அனுமதிப்பார்கள் . கடலைப்போல தேங்கிகிடக்கும் நீரையும் அதன் அழகும் நடந்து பலதூரம் செல்ல ஆசையாக இருக்கும் .

நீலகிரி மலைத்தொடரில் துவங்கி பல பேர் இருளை மின்சாரத்தாலும் விவசாயத்தாலும் விலக்குகின்ற பவானி ஆறும் பவானிசாகர் அணைக்கட்டும் போற்றுதலுக்குரியது.

தமிழகத்தில் பெரிய மண்ணால் ஆன அணைக்கட்டு என்னும் பெருமை கொண்ட பவானிசாகர் அணை 9 மதகுகளுடன் உபரி நீரை வெளியேற்றியும் . வாய்கால் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டும் பயணித்து பவானி காவிரியில் அடையும் முன் காளிங்கராயன் என்பவரால் கட்டப்பெற்று காளிங்கராயன் வாய்கால் ஆக பிரிந்து கொடுமுடி வரை பாசனத்திற்காக கலக்கிறது.

பவானி சாகர் பூங்கா :

நீண்ட நெடிய அசோக மரங்கள் பவானி சாகர் அணையின் அழகைகாட்ட புல்வெளிகளின் அழகில் பவானி சாகர் அணைப்பூங்கா அழகில் மிதக்கிறது. தற்போது அழகிய ரோஜா செடிகளை பொதுப்பணித்துறையால் நடப்பட்டு அழகு செய்கிறது.

சிறிய அலங்கார நீர்த்தொட்டிகள் ,டைனேசர் உருவச்சிலைகள் . அமர்ந்து பேச அழகான குடில்கள் ,குழந்தைகள் விளையாடும் சறுக்குகள் என குடும்பத்துடன் ஒருநாள் பயணமாக சென்று ரசிக்கும் விதமாக பவானிசாகர் அணைக்கட்டின் பூங்கா அமைந்துள்ளது.

நீங்கள் இறை தேடலில் விருப்பமிகுந்தவாக இருந்தால் அருகில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. ஒருநாள் சுற்றுலா வர குடும்பத்துடன் வர ஏற்ற இடம் . பாதுகாப்பு காரணங்களுக்காக அணையின் மேற்பகுதி செல்ல அனுமதிப்பதில்லை என்றாலும் கூட அருகில் சென்று பார்க்கலாம் .

ஒரு முறை வாய்ப்பு கிடைத்தால் சென்று ரசித்து விட்டு வாருங்கள் .

2 comments:

karthi.bsr said...

இந்த ஊரு்க்கு செல்பவர்கள் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

சரியாக சொன்னீர்கள் கார்த்தி ,தனிமை தேடிச்செல்வது ஆபத்தே. கருத்துரைக்கு நன்றிகள் பல

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...