Thursday, March 22, 2012

அகத்தியாரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீஅகிலாண்டீஷ்வரி உடனமர் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் சன்னதி .அகிலாண்டபுரம் காங்கேயம்




ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனமர் அகஸ்தீஷ்வரர் திருக்கோவில்


திருக்கோவில் அமைவிடம் வழி:

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் காங்கேயத்தில் இருந்து 3 கி.மீட்டர் தொலைவில் அகிலாண்டபுரம் என்னும் ஊரில் அம்பாளின் திருப்பெயரையே ஊரின் பெயராக கொண்ட அழகிய ஊரில் திருக்கோவில் அமைந்துள்ளது.

பழங்காலத்தில் சதுர்வேதிமங்கலம் என அழைக்கப்பட்டதாகவும் வரலாறு. காங்கேயத்திற்கு பழங்காலத்தில் சிங்கையூர் என்னும் பெயர் கொண்டு இருந்ததாகவும் கூறப்பட்டுகிறது.

திருக்கோவில் அமைப்பு :

சாமி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார் அகஸ்தீஷ்வரர் அகத்திய சித்தரால் பூஜிக்கப்பட்ட சுயம்பு லிங்கமாகும். .பழங்கோவிலாக இருந்த திருக்கோவிலை சலவைக்கற்களால் அழகுபடுத்தி உள்ளார்கள் .அகன்ற பிரகாரத்தில் இருநிலைக்கோபுரங்களுடன் அழகான சிவலயமாக அமைந்துள்ளது. பாடல் பெற்ற சிவத்தலமாகும்

ஸ்ரீஅகிலாண்டீஷ்வரி சன்னதி :

ஒரு காலத்தில் சிவாலயமாக மட்டுமே இருந்த திருக்கோவிலுக்கு அகத்தியர் வந்தார் .அப்போது அகத்தீஷ்வரர் பூஜித்து வந்த போது சிவலிங்கம் மட்டுமே இருப்பதைக்கண்டு அம்பாள் சிலையை பிரதிஷ்டை செய்ய எண்ணி ஸ்ரீ அகிலாண்டிஸ்வரியை பிரதிஷ்டை செய்து அம்பாள் சன்னதியை உருவாக்கினார் என்பது வரலாறாகும் . இதனால் அகத்திய சித்தரால் உருவாக்கப்பெற்ற அம்பாள் சன்னதி என்னும் தனிச்சிறப்பு பெறுகிறது.

சலவைக்கற்களால் உருவாக்கப்பெற்ற அழகான திருக்கோவில் வடிவமைப்பாகும் .அம்பாள் சன்னதியின் பின்புறம் லட்சுமி நரசிம்மர் ,ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளது. கொங்கு வேளாளக்கவுண்டர்களில் செங்கண்ணன் உட்பட 8 கூட்டத்தாருக்கு குலதெய்வமாக விளங்குகிறது.

இத்திருக்கோவிலின் சார்பு கோவிலான காக்கும் கடவுள்களாக ஸ்ரீ பகவதி அம்மன் ஸ்ரீ அழகுநாச்சியம்மன் திருக்கோவில்கள் காங்கேயத்திலிருந்து கருர் ரோட்டில் அமைந்துள்ளன . ஆயி அம்மன் திருக்கோவில் வீரணாம்பாளையத்தில் அமைந்துள்ளது.

பழங்கால சிறப்புமிக்க அகில உலகம் ஆளும் அகிலாண்டீஷ்வரிக்கு சன்னதி, அகத்தியரால் பூஜிக்கப்பெற்ற ,பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவாலயத்தை
காங்கேயம் அகிலாண்டபுரம் வந்து வணங்கி எல்லா வளமும் நலமும் சிவனருள் பெற்றுச்செல்லுங்கள் .நன்றி

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

அருமையான கோவில்.. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

thank you tholi sri rajreshwari

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...