Monday, February 27, 2012

சுபநிகழ்ச்சிகள் நடத்த நட்சத்திரங்களை தேர்ந்தெடுங்கள்


27 நட்சத்திரங்களில் 21 நட்சத்திரங்களும் விலக்கவேண்டிய 6 நட்சத்திரங்களையும் குறிப்பிட்டுள்ளேன் .சுப நிகழ்ச்சிகள் நடத்த நல்ல நட்சத்திர நாட்களை தேர்ந்தெடுத்து செய்தால் நன்மைகள் பலவும் நம்மை வந்து சேரும் .பழங்காலத்தில் எல்லா நல்ல விஷயங்கள் செய்யும் முன் ஜோதிடரிடம் கலந்து ஆலோசனை செய்தே ஆரம்பித்தார்கள் . அந்த வகையில் நல்ல காரியம் துவங்கும் போது நட்சத்திரங்கள் பார்த்து செய்து தடையில்லாமல் காரியங்கள் நிறைவேறிட இப்பதிவு உதவும்.

ரேவதி -திருமணம் சம்பந்தமான சுப நிகழ்ச்சி
சதயம் - திருமணம் மாங்கல்யம் செய்தல்
சுவாதி- திருமணம் செய்ய முடிகாணிக்கை ,பள்ளியில் சேர்க்க உகந்தது
அசுவனி - திருமணம் ,வளைகாப்பு,பூப்புனித நீராட்டு
ரோகிணி- திருமணம் கிரகப்பிரவேசம் ,வளைகாப்பு
புனர் பூசம் -மாங்கல்யம் செய்ய வளைகாப்பு நடத்த உகந்தது
மகம் -மாங்கல்யம் செய்ய ,போர்வெல் அமைக்க சிறந்தது
மிருகசீரிடம் - காதணிவிழா, முடிகாணிக்கை ,வெளியூர் பயணம் செல்ல உகந்தது
பூசம் -கிரகப்பிரவேசம் , வீடுகட்ட துவங்கலாம்
பூரம் , விசாகம்- ஆடுமாடு வாங்கலாம்
உத்திரம் - கிணறு வெட்ட உகந்தது
அஷ்தம்,மூலம் - வீடுகட்டிடப்பணி துவங்குதல் ,கிரகப்பிரவேஷம்
சித்திரை - பெயர் சூட்ட காது குத்த உகந்தது.
உத்திராடம் -ஆபரணம் வாங்க உகந்தது
அனுசம் -புதிய ஆபரணம் அணிய உகந்தது.
திருவோணம் - கிரகப்பிரவேசம்
அவிட்டம் - உபநயனம் செய்தல் கிணறு வெட்ட உகந்தது
பூரட்டாதி -விவசாயப் பணி துவங்க ஆடுமாடு வாங்க உகந்தவை
உத்திராட்டதி - சுவாமி பிரதிஷ்டை செய்யவும்
வளைகாப்பு நடத்தவும் உகந்த நட்சத்திரங்களாகும்

சுப நிகழ்ச்சிகள் தவிர்க்க வேண்டிய நட்சத்திரங்கள் :
பூராடம் ,கேட்டை, ஆயில்யம் ,
திருவாதிரை, கார்த்திகை ,பரணி ஆகிய நட்சத்திரங்களாகும்

2 comments:

Anonymous said...

நண்பரே ஜாதகத்தில் லக்கணத்திர்க்கு 12 கேது இருந்தால் முக்தி என்கிறார்களே உண்மையா

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

நானும் கூட கேள்விப்பட்டிருக்கிறேன் . 12 கேது இருந்தால் மறுபிறவி கிடையாதென . அதற்கு சில விதிவிலக்குகள் உண்டு .12 ல் உள்ள கேதுவை சுபகிரகங்கங்கள் பார்க்கவேண்டும் . அந்த 12 ஆம் வீடு கேதுவுக்கு நல்ல இடமாக இருக்கவேண்டும் . இன்னும் அறிய வேண்டுமானால் ஜோதிடமறிந்த நன்பர்களிடம் தான் கேட்க வேண்டும் நன்பா . சித்தர் கருத்துரைக்கு நன்றி

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...