Sunday, March 18, 2012

காசியில் இருந்து கோபிசெட்டிபாளையம் வந்த சிவலிங்கம் ஸ்ரீ விசாலாட்சி உடனமர் விஷ்வேஸ்வரர் திருக்கோவில்



ஸ்ரீ விசாலாட்சி உடனமர் விஸ்வேஷ்வரர் திருக்கோவில் கோபிசெட்டிபாளையம்

அமைவிடம் :

ஈரோடுமாவட்டம் கோபி வட்டம் வீரபாண்டி அக்ரஹாரம் கோபி செட்டி பாளையம். கோபி பஸ் நிலையத்தில் இருந்து 500மீட்டர் தொலைவில் உள்ளது .

மூலவர் :

ஸ்ரீ விஸ்வேஷ்வரர்
அம்பாள் :
ஸ்ரீ விசாலாட்சி

திருக்கோவில் உருவான கதை :

பழங்காலத்தில் பாணசுரன் என்னும் அசுரன் தினம் ஒரு சிவ லிங்கத்தை கங்கையில் வைத்து பூஜை செய்து பின் கங்கையில் விட்டு விடுவது வழக்கம் . அதைப்பாணலிங்கம் என்று அழைப்பார்கள் .அவ்வாறு கங்கையில் விட்ட பாணலிங்கங்களை வியாபாரிகள் சேகரித்து எடுத்துக்கொண்டு இந்தியா முழுவதும் கொண்டு சென்று விற்பார்கள் .

சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் கோபிச்செட்டிய பாளையம் வீரபாண்டி அக்ரஹாரத்தில் ஒரு சிவாலயம் ஒன்றை உருவாக்க வேண்டுமென எண்ணி திருக்கோவில் எழுப்பினார்கள் .

பின் லிங்கம் பிரதிஷ்டை செய்யவேண்டுமென யோசித்தபோது காசியில் பாணலிங்கத்தை எடுத்துக் கொண்டு பெரிய கூடையில் வியாபாரத்திற்காக ஒருவர் கோபிசெட்டிபாளையம் வந்தார் .

திருக்கோவில் உருவாக்கிய ஆன்மீகப்பெரியோர்கள் வியாபாரியிடம் நீங்கள் கொண்டு வந்த சிவலிங்கம் எங்களுக்கு பிடித்துள்ளது.நாங்கள் கட்டுகிற சிவாலயத்திற்கு விலைக்கு தாருங்கள் என சொல்ல லிங்கம் கொண்டு வந்த வியாபாரி ஒரு விலையை சொல்ல விலை கட்டுப்படியாகதால் திருக்கோவில் கமிட்டியினர் திரும்பி ஏமாற்றதுடன் சென்று விட்டனர் .

நீண்ட பயணத்தில் வந்த லிங்க வியாபாரி அசதியில் தூங்கி விட்டு காலையில் கிளம்பத்தயாராகி சிவலிங்கம் கொண்டு வந்த பூக்கூடையை தூக்க முயற்சித்தான் . முடியவே இல்லை.

கங்கை நதிக்கரையில் இருந்து கோபி வரை எளிதாக கொண்டு வரப்பெற்ற சிவலிங்கம் தூக்க முடியாததை ஆச்சர்யத்துடன் யோசித்து வீரபாண்டி அக்ஹாரம் சென்று திருக்கோவில் கமிட்டியாரிடம் சிவபெருமான் இங்கேயே தங்க ஆசைப்படுகிறார் .

இந்த பாணலிங்கத்தை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் . நீங்களாக மனமுவந்து தருகிற தொகையை கொடுத்தால் போதும் எனக்கூறி கொடுத்த தொகையை லிங்க வியாபாரி பெற்றுக்கொண்டு காசி சென்றதாக வரலாறு .

பின்னர் திருக்கோவில் கட்டிய குடும்பத்தார் சந்தோஷத்துடன் அதை காசியில் இருந்து கொண்டு வந்ததால் காசிலிங்கம் என பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகிறார்கள் .

திருக்கோவில் தற்போதைய அமைப்பு :

மூன்று நிலைக் கோபுரங்களுடன் முன்னை அழகிய கொடிமரம் நந்தீசர் என அழகாயிருக்க மூலவர் ஸ்ரீ விஸ்வேஷ்வரர் லிங்கமாக அமர்ந்து அருள்பாலிக்க திருக்கோவில் பின்புறம் பஞ்சலிங்கம் சிறப்பு விஷேசமாக அமர்ந்திருக்க திருக்கோவில் நேர்த்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

சிவாலயம் கட்டி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து மக்கள் தரிசிக்க ஏதுவாக அமைந்த திருக்கோவில் அமைப்பினர்களுக்கு பாராட்டுக்கள் .

காசியில் இருந்து கொண்டு வரப்பெற்ற சிறப்பு வாய்ந்த சிவாலயத்தை வணங்கி எல்லாம் வல்ல சிவனருள் பெறுங்கள் .

ஓம் சிவாய நமஹ

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...