Thursday, March 22, 2012

12ஆண்டுக்கு ஒரு முறை சென்னிமலையில் பொங்கும் மாமாங்க தீர்த்தமும் ,விநாயகர் வழிபாடும் (2012)



சென்னிமலையில் புகழ்பெற்றது மாமாங்க தீர்த்தமென எல்லோரும் செல்ல பார்க்கவேண்டுமென பல நாள் ஆவல் இருந்தாலும் நேரில் செல்லமுடியாது தவிப்பாகவே இருந்து வந்தது .

கடந்த 15 நாட்களுக்கு முன் ஓருவர் மாமாங்க தீர்த்ததைப்பார்க்க சென்றபோது அங்கு தீர்த்தம் பொங்கி வழிவதை பார்த்து ஊர் மக்களிடம் சொல்ல கேள்விப்பட்டு பல ஊர்களில் இருந்தும் முருகபக்கதர்கள் கிளம்பி சென்னி மலையை நோக்கி படையெடுக்க இந்த 2012 மார்ச் மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமிருக்க மாமாங்க தீர்த்தத்தையும் மாமாங்க விநாயகரையும் தரிசனம் செய்ய கிளம்பினோம் .

எப்படிச்செல்வது :

ஈரோட்டில் இருந்து சென்னிமலைக்கு 25 கி.மீட்டர் தொலைவிலும் பெருந்துறையில் இருந்து 12 கி.மீட்டர் தொலைவில் சென்னிமலை திருக்கோவிலும் வனமும் அமைந்துள்ளது. சென்னிமலையில் இருந்து காங்கேயம் சாலையில் 2கி.மீட்டர் பயணித்து வெப்பிலி பிரிவில் வலப்புறம் திரும்பி சில்லாங்காட்டு வலசு (2 கி.மீ)சென்றால் வலப்புறம் திரும்பி 1 கி.மீட்டர் பயணித்தால் சென்னிமலையின் தெற்குபுறமான மலை அமைப்பை அடைகிறாம் .


பின் ஆங்காங்கே பாறை வெட்டி எடுக்கப்பட்டுள்ள பள்ளங்களை தாண்டி மிக கவனமாக பாதுகாப்பாக பயணித்தால் மலை அடிவாரம் வருகிறது. இருசக்கரபயணம் மட்டுமே ஏற்றது. மாமாங்க விநாயகர் கோவிலும் தீர்ததமும் சென்னிமலையின் தென்புறமுள்ளது குறிப்பிடத்தக்கதாகும் .

பின் ஒற்றையடிப்பாதையில் சுமார் 15 நிமிடம் மலைப்பாதையில் நடக்க மாமாங்க விநாயகர் தீர்ததங்களை தரிசிக்கலாம் .

மாமாங்க தீர்த்தத்தின் மகிமைகள் :

சென்னிமலை முருகப்பெருமானின் அருளால் மாமாங்க தீர்த்தம் 12 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே சுரந்து மாமாங்க தீர்த்தம் பொங்கி வழிகிறது. சென்னிமலையின் இயல்பான அமைப்பே செவ்வாயின் அம்சமாக முருகப்பெருமான் திகழ்வதாலும் பிப்ரவரிமுதல் ஜுன் மாதம் முடிய வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் .

சென்னிமலை முழுவதும் வறண்டு கிடக்கிற காலம் . இப்படிப்பட்ட கோடை காலத்தில் தான் மாமாங்க தீர்த்தம் பொங்கி வழிகிறது என்றால் இறைவனின் மகிமைகளை கண்கூடாக உணரலாம் .

இதற்கு முன் பல ஆண்டாக 12 ஆண்டுக்கு ஒரு முறை மாமாங்க தீர்த்தம் பொங்கி வழிந்தாலும் கடைசியாக 1988, 2000, 2012 ஆண்டுகளில் சரியாக மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் பொங்கி வழிவது ஆச்சர்யமான ஒன்று.

கால மாறுபாட்டால் 4 வருடங்களுக்கு முன் ஓரே ஒர் முறை மாமாங்க தீர்த்தம் வெளிபட்டதாக சொல்வோரும் உண்டு.

தீர்த்ததின் பலன்கள்:

சென்னிமலையில் பல மூலிகைகளும் முக்கியமாக வெண்சாரை, கருநொச்சி போன்ற அரிய மூலிகைகளும் சுமந்து வருவதால் மாமாங்க தீர்த்தம் அருந்துவதால் நல்ல உடல் நிலையும் உடற் சரிர நோய்கள் தெளித்துக்கொள்வதால் நலமாக ஆவதும் உண்மைக்கூற்றே .

மாமாங்க தீர்த்தம் விநாயகர் சன்னதியின் அமைப்பு :

கிழக்கு நோக்கிய நிலையில் ஸ்ரீவிநாயகப்பெருமான் அமர்ந்திருக்க சுற்றிலும் சிறிய கட்டிட அமைப்பில் 10க்கு 10 அகல அமைப்பில் விநாயகருக்கு எதிரே காய்ந்து தற்போது வளர்ந்து கொண்டிருக்கிற கிளுவை மரத்தின் அடியில் சிறிய பொந்தின் வழியில் மாமாங்க தீர்த்தம் சுரக்கிறது. வேம்பு மரம் அருகே உள்ளது.

தற்போது ஒரு முதியவர் பூஜை செய்து வருகிறார் .மாமாங்க ஸ்ரீ விநாயகப்பெருமான் தீர்த்தம் ஆகியவற்றை பார்க்க செல்பவர்கள் பூஜைப்பொருட்கள் ,உணவுத்தேவைகள் உடன் செல்லவும் .இங்கு கடைகள் ஏதுமில்லை.

தீர்த்தத்தில் உள்ளே சென்று குளிக்காமல் வெளியே தீர்த்தம் எடுத்துச்சென்று தெளித்துக்கொள்ளலாம் .மாமாங்க தீர்த்தம் கொண்டு வர ஏதுவாக சிறிய பாட்டில்களுடன் செல்வது நலம் .

ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை வனத்தில் உள்ள மாமாங்க தீர்த்தம் சென்று தீர்த்தம் தெளித்து ஸ்ரீ விநாயகப்பெருமானை வணங்கி வாருங்கள் .

எல்லா வளமும் நலமும் பெறுங்கள் .

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...