Friday, March 9, 2012

சத்தியமங்கலம் தெங்குமரஹடா கெஜலெட்டி வனப்பகுதியில் எழுந்தருளி காக்கும் ஸ்ரீபொம்மாதேவி உடனமர் ஸ்ரீ ஆதி கருவண்ணராயர் திருக்கோவில் தரிசனம்


அமைவிடம் :


தமிழகம் கர்நாடகாவில் வாழ்ந்து வரும் கற்பூர கோத்திரம் உப்பிலிநாயக்கர் குலதெய்வமாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் பவானி சாகர் தெங்குமரஹடா அடர்ந்த வனப்பகுதியில் கெஜலெட்டி கணவாயில் ஆதி கருவண்ணராயர் பொம்மாதேவியர் திருக்கோவில் அமைந்துள்ளது.

திருக்கோவில் அடர்ந்த வனப்பகுதியில் கரடுமுரடான மண் சாலையில் இரண்டு மணி நேரம் மெதுவாக வாகனங்கள் ஊர்ந்து சென்று திருக்கோவிலை அடையலாம் .

திருக்கோவில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே மாசி மாதம் மகம் நட்சத்திர நாளில் கொண்டாடப்படுவதால் அன்றைய தினம் மட்டும் லட்சக்கணக்கான மக்களின் குலதெய்வமான உப்பிலியநாயக்கர்கள் மற்றும் இப்பகுதி மக்களும் கலந்து கொண்டு ஆதிகருவண்ணராயர் ,பொம்மதேவியர் அருள்பெற்றுச்செல்கின்றனர் .

திருக்கோவில் அமைந்த விதம் பற்றிய சில புராணக்கதைகள்

( செவிவழிச்செய்திகள் ) :

பழங்காலத்தில் தமிழகத்திலும் கன்னட நாட்டில் உப்பாரா ,உப்பிலியா என்னும் நாயக்கர் சமுக மக்கள் உப்பு மற்றும் வாணிபத்தில் ஈடுபட்டு வந்தார் . திப்பு சூல்தான் படைப்பிரிவில் வீரர்களாக பணிபுரிந்து வந்ததாகவும் , அப்போது உப்பிலிய நாயக சமுக மக்கள் பெண் ஒருவரை மணம் முடிக்க மொகலாய மன்னர் ஆசைப்பட்டதாகவும் ,

மன்னரை எதிர்க்க முடியாமல் தவித்து அவர்களின் காவலர்களிடம் இருந்து இரவில் தப்பித்து தலமலை வழியாக வந்ததாகவும் வரும்போது தன் குலதெய்வமான ஆதிகருவண்ணராயர் பொம்மதேவியர் கொண்டு வந்து தெங்கு மரஹடா காட்டில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்ததாகவும்

ஓர் வரலாறு.பின் அங்குள்ள மாயாறு வழியாக கடும் ஆற்று வெள்ளத்தை கடக்கமுடியாமல் ஸ்ரீ கருவண்ணராயரை வணங்க மாயாறு உப்பிலிய நாயக்க மக்களுக்காக வழிவிட்டதாகவும் , அப்போது வந்த மொகலாய அரசர் இடையில் மாயாறு கடும் சீற்றத்தால் செல்ல வருத்தப்பட்டு பெண் கொடுக்கவில்லை எனினும் தங்களை மாமா மச்சினர்களாக அழைக்குமாறு கேட்டுக்கொண்டதாக வரலாறு ,

இரண்டவதாக

கர்நாடகாவில் இருந்து இடம்பெயர்ந்த உப்பிலிநாயக்கர் மக்கள் தமது குலதெய்வமான ஸ்ரீ கருவண்ணராயர் ,ஸ்ரீ பொம்மதேவியரை தமிழகத்திற்கு எடுத்து வர பூக்கூடையில் தலமலை வழியாக குறுகிய வழியில் கொண்டு வரும்போது தெங்குமரஹடா காட்டில் கெஜரெட்டி அருகில் வந்தபோது மாயாறு அருகில் பக்தர்கள் குளிக்க சென்று திரும்ப நேரமானதால்

பூக்கூடையில் ஸ்ரீ கருவண்ணராயர் பொம்மாதேவியரை வைத்திருந்த பக்தரும் குளிக்க ஆசைப்பட்டு பூப்பேழைய இறக்கி வைத்து விட்டு பின் அனைவரும் ஸ்ரீ கருவண்ணராயர் பொம்மாதேவியரை பூக்கூடையை தூக்க முற்படும் போது பூக்கூடையை தூக்க முடியவில்லை

அப்போது அருள் வந்த பக்தர்

"உங்கள் குலதெய்வமான நான் இங்கேயே அடர்ந்தகாட்டில் இருக்க ஆசைப்படுகிறேன் . என்னை வருடம் ஒருமுறை தமிழ் மாசிமாதம் மகம் நட்சத்திரத்தில் வந்து வணங்கி செல்லுங்கள் "

கூற இறைகட்டளைக்கு இணங்க பக்தர்கள் இறைவனை அங்கேயே சிறிய கோவில் கட்டி பூஜை செய்து வந்தனர் .

சான்றுகள் :

கர்நாடகாவில் இருந்து வாணிபத்திற்காக தலமலை தெங்குமரஹடா வழியாக நடந்து வந்துள்ளது. அதற்கு குறுக்கிடாக மாயாறு குறுக்கிட கிட்டத்தட்ட 500ஆண்டுகள் மேலாக பழமையான பாலம் ஒன்றை உருவாக்கி அதன் வழியே பாதை உள்ளது வியப்புக்குரியது.

ஸ்ரீ கருவண்ணராயர் திரிக்கோவில் அருகிலேயே இந்த பாலம் சிதிலமடைத்து கிடப்பதை புகைப்படத்தில் காணலாம் . மாயாற்றை கடக்க உதவுகின்ற இந்த பாலம் கடந்து பவானி சாகர், சத்தியமங்கலம் சந்தைகளில் வாணிபம் நடந்திருப்பதை காண்கூடாக உணரலாம் .

திப்பு சூல்தான் காலத்தில் ஆங்கிலேயர்கள் அறிய முடியாத ரகசியவழியாக இந்தபாலத்தை பயன்படுத்தி கர்நாடக .தமிழ்நாடு சென்று வந்ததாகவும் ,சிறிது தூரத்தில் குதிரைக்கொட்டகையும் உள்ளது.

தற்போது திருக்கோவில் அமைப்பு :

கெஜலெட்டி வனப்பகுதியில் அமைந்த மூலவர் கருவண்ணராயர்,பொம்மதேவியர் அமைந்துள்ளார்கள் .
பெருமாள் அம்சமாக
( வைணவம் ) விளங்கி வருகிறார் . திருக்கோவில் வெளி முகப்பில்காவல்தெய்வமானஸ்ரீ கருப்பண்ணசாமிக்கு பிரமாண்டகிடாவெட்டு இங்கு பிரபலமானது.

இரண்டுகுதிரைகள்மற்றும் உட்பகுதிமுகப்பில் விநாயகப்பெருமான், நவகிரகங்கள்அமைந்துள்ளன.அமைந்துள்ளார்கள் . அருகில் பவானிசாகரில் வந்துஇணைகின்ற நீலகிரிமலையில் உற்பத்தியாகும் மாயாறும்ஆறு ஓடுகின்றது.

திருக்கோவில் இடப்புறமாக சிவலிங்கம்அமைக்கபட்டுள்ளது.திருவிழா நடைபெறும்மாசிமகம் நட்சத்திரநாளில் மட்டும் தூக்கநாயக்கன் பாளையத்தில் புறப்பட்டு உற்சவர் கெஜரெட்டி கோவிலுக்கு வந்து பக்தர்கள் காட்சி கொடுப்பார்

.இறைதுதி :

தொல்லுலகில் மானிடரின் தோற்றமொரு தோன்றிவாளர் ,
நல்லதமிழ் நடைமாறிக் கன்னடமாம் எல்லையிலே ,
வல்லுருவ யானைவளர் கெஜஹட்டி பாங்காடே,
இல்லிடமாய் கொண்டாய் என் மாயவரே,


என காக்கும் கடவுளாய் விளங்குகின்ற பெருமாளின் அம்சமாய் அனைவரும் துதிக்க விரும்புகின்ற அனைவரும் திருக்கோவிலை வந்து வணங்கலாம்.

திருக்கோவில் குலதெய்வமாக வணங்குபவர்கள் :

ஸ்ரீ வடகாஞ்சி அயோத்தியாபுரியிலே ஸ்ரீ மகா விஷ்ணுவின் வலது வியர்வையில் பிறந்ததாக கருத்தப்படுகிற சத்திரிய வம்சத்தாருக்கும் ,

திருமூர்த்திகள் ,அகத்திய முனிவர் இவர்களால் சிங்கக்கொடியும் ,சீராமாலை தீர்க்காயுசு பெற்ற பெரியோர்களுக்கும் கண்ட நாடு கொண்டு கொண்டநாடு கெடாத பெரியோர்களுக்கும் கற்பூரகோத்திரம் உப்பிலியநாயக்கர்களுக்கும் 6 பட்டம் 24 நாட்டார்களுக்கும் குலதெய்வமாகும் .

மாசி மகம் பண்டிகையை விளக்கும் பாடல் :

ஓங்கு புகழ் உன்னால் உத்தமர்கள் எண்ணற்றோர்,
ஈங்கு வந்து இணைந்துந்தன் எழில் விழா கொண்டாடும்
வீங்கும் மதி மாசி மகம் நட்சத்திர நாளிலே
பாங்காடும் பட்டணம் போல் காட்சி கொள்ளுமே.

முடிவரை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் :

ஸ்ரீ ஆதிகருவண்ணராயர் திருக்கோவில் அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் சிங்கம் தவிர அனைத்து மிருகங்களும் புலி, யானை
உட்பட உள்ளதால்
இப்பதிவை படிக்கும்
நன்பர்கள் ஆர்வத்தில்செல்லமுற்படாதீர்கள்

மிகஆபத்தான இடம்செல்லவிரும்புவர்கள்
மாசிமாதம்மகம் நட்சத்திர நாளில்
பலபேருடன் பாதுகாப்புடன் சென்றுஇறையருள் பெருங்கள்
நன்றி

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...