Sunday, January 8, 2012

ஸ்ரீ வேதநாயகி உடனமர் வேதகிரிஷ்வர் திருக்கோவில் .வேதகிரிமலை . ஊராட்சிக்கோட்டை பவானி




ஸ்ரீ வேதநாயகி உடனமர் வேதகிரீஷ்வரர் திருக்கோவில் . வேதகிரி மலை.

ஸ்ரீதேவி,பூதேவி உடனமர் வரதராஜப்பெருமாள் திருக்கோவில். ஊராட்சிக்கோட்டை.பவானி.



ஈரோடு மாவட்டம் திருக்கோவில் அமைவிடம் :

ஈரோடு மாவட்டத்தில் அழகு மிகுந்த காவிரி நதிக்கரையின் அருகே பவானியில் இருந்து மேட்டூர் செல்லும் வழியில் 3 கி.மீட்டரில் ஊராட்சிக்கோட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள மலையாகும் .
திருக்கோவில் செல்லவழி :
ஊராட்சிக்கோட்டையில் இறங்கி மலைப்பாதை வழியாக சுமார் 1500மீட்டர் உயரம் நடக்க வேண்டும் . 10அடிப்பாதையில் எளிமையான படிக்கட்டில் நடைப் பயணம் செய்ய வேண்டும். திருக்கோவில் செல்ல பயண நேரம் :ஒரு மணி நேரம் பயணிக்க வேண்டும் .உணவு,தண்ணீர் தேவைகளுடன் பயணிக்கலாம் .

வேதகிரியின் சிறப்புகள் :
ஊராட்சிக்கோட்டை வேதகிரி மலை பஞ்சமூர்த்திகளில் முதன்மையானது. திருக்கோவில் தோன்றல் காலம் 600 முதல் 1000ஆண்டுகள் இருக்கலாம் . சைவ,வைணவத் திருத்தலங்கள் ஒன்றாக அமைந்திருப்பது ஓர் சிறப்பு.
திருக்கோவில் சென்றுவர சரியான பாதை பழங்காலத்தில் இல்லாததால் இப்பகுதியில் உள்ள வேதகிரி நற்பணி மன்றம் மற்றும் இங்குள்ள மக்களால் திருப்பணி 1997ல் தொடங்கி அயராத முயற்சியால் 2001 ஆம் ஆண்டு ஜுலை 2 ஆம் நாள் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

பழங்காலத்தில் மலையின் மேற்பரப்பில் 2000அடி அகலம் மட்டுமே இருந்துள்ளது. திருப்பணிக்குழுவினர் அதை 27000 சதுர அடியாக ஆகம முறைப்படி அகலம் செய்து திருக்கோவில் மேற்பரப்பில் தற்போது 8 கோவில்களை சிறப்பாக அமைத்துள்ளார்கள் .

அப்படி திருப்பணி நடக்கும் போது வேதகிரி மலையின் நடுவில் ஸ்ரீ லிங்கேஷ்வரர் சுயம்பு மூர்த்தியாக தோன்றி எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார் . அவருக்கு தனிச்சன்னதி தற்போது நாம் பயணிக்கும் நடைபாதையின் நடுவில் அமைந்துள்ளது.

திருக்கோவில் மேலே அமைத்துள்ள கோவில்கள் :

ஸ்ரீ வேதகிரிஷ்வரர் ,ஸ்ரீ வேதநாயகி, வள்ளி,தெய்வானை உடனமர் கல்யாண சுப்பிரமணியர் ,ஸ்ரீதேவி,பூதேவி உடனமர் வரதராஜப்பெருமாள் . பள்ளி கொண்ட நிலையில் வேதநாரயணர் ,வேதவியாசர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர் .

ஸ்தலமரம் : ஆலமரம் அருகே ஸ்ரீ பெருமாள் பழங்கால சிலை அமைந்திருக்கிறது .இங்கு மூன்று பௌர்ணமி திதிகளில் வணங்கி வந்தால் திருமணத்தடை அகலும் . மூன்று அம்மாவசை திதிகளில் வணங்கிவந்தால் குழந்தைப்பேறு கிட்டுமென்பது ஐதீகம் .

ஜீவசமாதி :

திருக்கோவில் பழையவழி ஜீவாநகர் என்னும் பஸ் நிறுத்தத்தில் இருந்து செல்லும் வழியில் முருகர் கோவில் வலப்புறம் " ஆத்தூர் அருளன்னை ஜீவசமாதி" அமைந்துள்ளது.

1920களில் இப்பகுதிக்கு ஆத்தூரில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிற அருள் அன்னை இங்கேயே பலகாலமாக வாழ்ந்து ஆன்மீக சேவை செய்து வந்ததாகவும் .25.8.1971 ல் ஜீவசமாதி அடைந்து விட்டதாகவும் ,தம்மை நாடி வருபவர்கள் குறைகளை இன்றும் தீர்த்து வரும் அன்னை அவர் .

தற்போது அன்னையுடன் இருந்த முதியவர் தள்ளாத வயதில் சிறிய ஆசிரமத்தில் உள்ளார் .தற்போது ஒருவர் ஆத்தூர் அருளன்னை ஜீவசமாதிக்கு பூஜைசெய்து வருகிறார். அன்னையின் ஜீவசமாதியும் , அவர் தவம் செய்த சிறிய குகையும் தற்போதும் உள்ளது.

திருக்கோவில் மேலிருந்து பார்த்தால் பவானி, கொமராபாளையம் ,பெருமாள் மலை. காவிரியின் அழகும் தெரிகிறது. பஞ்சகிரிகளில் முதன்மையான

அருள்மிகு ஸ்ரீ வேதகிரிஷ்வரரை வந்து வணங்கி எல்லா வளமும் பெறுங்கள் .

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...