Thursday, February 2, 2012

நூற்றாண்டு விழா காணும் குருவரெட்டியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி


குழந்தையாக இருந்து தமிழை முதன் முதலாய் கற்றுக்கொடுத்து நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆரம்பிக்கிப்படுவது பள்ளிகள் .அதிலும் நாம் இளைமையில் படித்த பள்ளிக்கூட நினைவுகள் ஆட்டோகிராப் படம் போல அவ்வப்போது நம் ஞாபகத்தில் வரும் போது வரும் உற்சாகமே தனிதான் .

அந்த வகையில் நான் 1வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படித்த ஊராட்சி ஒன்றியப்பள்ளி .பவானி வட்டம் குருவரெட்டியூர் (guruvareddiyur-638504) அமைந்துள்ளது. இப்பள்ளி 26.2.1913 ல் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரும் 27.2.2012 உடன் 100 ஆம் ஆண்டு துவங்க உள்ளது.

இந்த நூற்றாண்டு விழாவை சிறப்பிக்க சிறப்பாக கொண்டாட , எப்படியெல்லாம் விழா நடத்தலாம் என கலந்துரையாடல் கூட்டம் 3.2.12 இன்று வெள்ளி மாலை 03.00மணியளவில் நடைபெறுவதாக பள்ளி முன்னால் மாணவர்கள் கற்போர் - கற்பிப்போர் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது .இதில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் .

நூற்றாண்டு விழா நடைபெறும் தேதி விரைவில் நம் இணையத்தின் வாயிலாக அறிவிக்கப்படும் .

நீங்களும் நம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி முன்னால் மாணவராக இருந்தால் கண்டிப்பாக நம் குருவரெட்டியூர் (GURUVAREDDIYUR-638504 )ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் இப்பள்ளியின் முன்னால் மாணவராக உங்களை வரவேற்கிறேன் .

நட்புடன் குரு.பழ.மாதேசு. குருவரெட்டியூர்

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...