Sunday, February 19, 2012

இராமேஸ்வரத்தின் 22 தீர்த்தங்களில் நீராடுவதின் பலன்


இராமேஸ்வரம் தீர்த்தங்களை ஸ்ரீ ராமர் உருவாக்கி ஸ்ரீஇராமேஸ்வரை பிரதிஷ்டை செய்து இராவணை வதம் செய்த பின் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றார் என்பது புராணகால கூற்று அப்படி பல விஷேசங்கள் பெற்ற ஸ்ரீ ராமலிங்கசாமி திருக்கோவில் உட்புறத்தில் 22 தீர்த்தங்களும் வெளிப்பகுதியில் 31 தீர்த்தங்களும் இராமேஷ்வரத்தை சுற்றியும் அமைந்துள்ளன.

22 தீர்த்தங்களில் குளிப்பதால் என்ன நன்மை கிட்டுமென பார்ப்போம். ஆனால் திருக்கோவில் எதிரே உள்ள கடலில் கலந்துள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி விட்டே 22 தீர்த்தங்களில் நீராட வேண்டுமென்பதை நினைவில் கொள்ளவும்

22 தீர்த்தங்களும் நீராடுவதின் பலனும்

1. மகாலட்சுமி தீர்த்தம் - ஐஸ்வர்யம்
2.சாவித்திரி தீர்த்தம் - சாப நீக்கம்
3.சந்ததியில்லாதவர் சாப நீக்கம்
4. சரசுவதி தீர்த்தம் - அறியாமையால் சடங்கு செய்தாது விட்ட பாவ சாப நீக்கம்
5. சேது மாதவ தீர்த்தம் - செல்வம் ,லட்சுமி கடாட்சம் சித்த சுத்தி
6.கந்தாமன தீர்த்தம் - தரித்திர நீக்கம் ,
7 சுவாட்ச தீர்த்தம் - சொர்க்கத்திற்கு செல்லலாம்
8. கவாய தீர்த்தம் - நீண்ட ஆரோக்கியம்
9. நளதீர்த்தம் - நல்ல சுகம் சொர்க்கம்
10. நீள தீர்த்தம் - பெரும் யாகம் செய்த பலன்
11. சங்கு தீர்த்தம் - செய்நன்றி மறந்த பாவம் போகும்
12. சக்கர தீர்த்தம் -அனைத்து நோய் நிவர்த்தி
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் - மகா பாவங்கள் ,பிரம்மஹத்தி தோஷநிவர்த்தி. பில்லி .சூன்யம் போன்ற அனுமானுஷ்ய தீவினைகளிலிருந்து விடுதலை
14. சூரிய தீர்த்தம்- ஞானம்
15.சந்திர தீர்த்தம் - அழகு அறிவு ஞான விருத்தி
16. கங்கா தீர்த்தம் - ஞானம்
17. யமுனா தீர்த்தம் - ஞானம்
18. சிவ தீர்த்தம் - சிவகடாட்சம் ஐஷ்வர்யம்
19. சாத்யமிர்த தீர்த்தம் - சாப நீக்கம்
20 கயா தீர்த்தம் -ஞானம்
21 சர்வ தீர்த்தம் - பிறவி நோய் அனைத்து சரிர நோய் நீக்கம்
22. கோடி தீர்த்தம் -
ஸ்ரீ ராமர் ஸ்ரீ ராமலிங்க சுவாமியை பிரதிஷ்டை செய்ய பயன் படுத்திய மகா தீர்த்தமே கோடி தீர்த்தமாகும் . இந்த தீர்த்தத்தில் நீராடித்தான் கம்சனை கொன்ற பாவம் கிருஷ்ணபகவானுக்கு நீங்கியதாக புராணவரலாறு .

மேற்கண்ட பலன்கள் யாவுமே திருக்கோவில் கேட்ட செவிவழிச்செய்திகள் . சுற்றிலும் ராமேஷ்வரத்தை கடல் சூழ்ந்து இருக்க 22 தீர்த்தங்களில் நீராடி கொஞ்சம் சுவைத்துப்பாருங்கள் .ஒவ்வொரு தீர்த்தமும் ஒவ்வொரு சுவை . இராமயணக்காலத்தில் ஸ்ரீராமரால் பூஜிக்கப்பட் இந்த ஸ்தலத்தின் பெருமையுணர்ந்து இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கூடுவது வழிபடுவதுமே ,
ராமேஸ்வரம் காலத்தால் அழியாத தமிழர்க்கு கிடைத்த மகா பொக்கிஷம் .

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...