Sunday, October 30, 2011

சவால் சிறுகதை போட்டிக்கு வாழ்த்துக்கள்


வலைப்பதிவாளர்களுக்காக வலைப்பதிவாளர்கள் நடத்தும் "சவால் சிறுகதைப்போட்டி - 2011 " அடுத்த தலைமுறை எழுத்தாளர்களை தரமான சிறுகதை எழுத வரவேற்கும் ஓர் புதிய முயற்சி. இரண்டாவது வருடத்தில் அடி எடுத்துவைக்கும் சவால் சிறுகதைப்போட்டியை அமைப்பினர் வலைப்பதிவாளர்கள் திரு .பரிசல்காரன் மற்றும் திரு.ஆதிமூலகிருஷ்ணன் (தாமிரா) மற்றும் யுடான்ஸ் வலைத்திரட்டி ,யுடான்ஸ் டி.வி அமைப்பினர்கள் அனைவருக்கும் , எனது பாரட்டுக்கள் .

கதைக்காக ஓர் படத்தை தேர்வு செய்து ,அந்தப்படத்தின் துண்டுசீட்டுகளை வைத்தும் ,படத்தை உள்வாங்கியும் சிறுகதை எழுதச்சொன்னார்கள் . நானும் சேலஞ்ச், சித்தரின் எழுத்துக்கள் என்ற தலைப்பில் இரண்டு சிறுகதைகளை அனுப்பி உள்ளேன் .எனது வலைத்தளத்தை பார்வையிடும் நீங்கள் எமது கதையை படித்துவிட்டு நிறைகுறைகளை சுட்டிக்காட்டுங்கள் .

எமது சிறுகதை பிடித்திருந்தால் ,நன்றாக இருந்தால் சிறுகதைக்கு கீழே உள்ள like பட்டனை தட்டிவிட்டு செல்லுங்கள் . கதைக்கு நீங்களும் 10 மதிப்பெண் போடலாம் . மீதி 90மதிப்பெண்களை நடுவர் குழு ஆராய்ந்து தீர்மானித்து நவம்பர் 15 ஆம் நாள் சவால் சிறுகதையில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்படுவார்கள் .

கதையை படித்துவிட்டு எமக்கு தேவைப்படுவதெல்லாம்

உங்கள் கருத்துரையே மறவாமால் இட்டுச்செல்லுங்கள் .

நட்புடன் குரு.பழ.மாதேசு, குருவரெட்டியூர்

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...