Sunday, October 23, 2011

ஔவையார் அருளிய விநாயகர் அகவலும் ,அதன் புராணக்கதையும்


கயிலாயத்தில் சிவன் சந்நதியில் ஆதியுலா அரங்கேற்றம் செய்வதற்காக நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் ரதத்தில் கிளம்புகிறார் . நாயன் மார்களில் ஒருவரான சேரமாநாயனாரும் அயினாவரம் எனும் பட்டத்து யானையில் கிளம்புகிறார் .பாதி வழி சென்றதும் ஔவையாரை கூட்டி வர மறந்து விட்டோமே என வருந்தினார் . அப்போது ஔவையார் விநாயகருக்கு பூஜை செய்து கொண்டிருந்த ஔவைக்கும் அட நாமும் கயிலாயம் செல்லாமல் விநாயகருக்கு பூஜை செய்து கொண்டிருக்கிறோமே என்ற எண்ணம் உதித்தது.


பூஜையை பாதியில் நிறுத்த முடியாதே என எண்ணி விநாயகப் பெருமானை வேண்டினார் . விநாயகப் பெருமான் உடன் தோன்றி "ஔவையே.. ! பூஜையை முழுமையாக செய்து , எமக்காக பாடல் ஒன்றைப் பாடு நான் உன்னை கயிலாயம் செல்ல ஆவன செய்கிறேன் ". என்றாராம் . உடனே ஔவையார் துரிதமாக பூஜை செய்து "விநாயகர் அகவல்" என்ற பதிகத்தை இயற்றி பாடினார் .

விரைந்து பூஜையை முடித்தார் . உடனே அங்கு தோன்றிய விநாயகப் பெருமான் யானை உருவமெடுத்து,துதிக்கையால் ஔவையை எடுத்து கயிலாயம் தூக்கிச் சென்று விரைவாக விட்டாராம் . பின்னர் வந்து சேர்ந்த சேரமா நாயனார் எப்படி எனக்கு முன்பே கயிலாயம் வந்தீர்கள். என ஆச்சர்யப்பட்டு கேட்க அதற்கொரு பாடல் பாடினார் .

கட்டளைக்கழித்துறை

மதுரமொழி நல்லுமையாள் புதல்வன் மலர்பதத்தை
முதிர நினைய வல்லார்க் கரிதோ முகிழ்போன் முழங்கி
யதிரநடந் திடும் யானையுந் தேமருதன் பின்வருங்
குதிரையுங் காதங் கிழவியங்காதங் குலமன்னனே



எனப்பாடி தாம் வந்த விதத்தை விவரித்தார் .
"சீதங்களம்பச் செந்தாமரைப்பூவும்" எனத்தொடங்கும் விநாயகர் அகவல் பாடலை நாம் நற்காரியங்கள், செயல்களை துவங்கும் போது பாடினால் , பாராயணம் செய்தால் தடையில்லாமல் நம் வாழ்வில் நம்மை முன்னேற வைக்கும் என்பது உறுதி. இது நமக்காக ஔவையார் அருளிய அருள் வாக்காகும்.

ஆகவே "சீதங்களம்பச் செந்தாமரைப்பூவும்" எனத்தொடங்கும் விநாயகர் அகவலை பாடுங்கள் . செய்யும் செயலை தடையில்லாமல் இனிதே தொடங்குங்கள் . விநாயகர் அகவல் பாடல் படிக்க இதே வலைப்பக்கத்தில் உள்ள " ஆலய தரிசனம் " எனும் தலைப்பில் உள்ள இடுகையில் உள்ள விநாயகர் அகவலை படியுங்கள் .

நட்புடன் குரு.பழ.மாதேசு ,குருவரெட்டியூர்

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...