Thursday, October 20, 2011

நமது மண்ணில் வளரும் மரங்கள்


மரம் வளர்க்கவேண்டும் என விரும்புவோம்.. !
ஏதேனும் சமுக சேவை செய்ய வேண்டுமென விரும்பி மரம் நட்டு விட்டு வருவோம் .
சில இடங்களில் நாம் நட்ட மரம் நட்ட நிலையிலேயே இருக்கும். அதற்கு காரணம் அறியாமல் குழம்புவோம் . விவசாயத்திற்கும் இது பொருந்தும் .

மரம் வளராமைக்கு காரணம் மண்ணின் தன்மை அறியாமல் நாம் நடுவதே ஆகும் . சரி எந்த மண்ணில் எந்த மரத்தை நட்டால் பலன் தரும் அல்லது வளரும் என அறிந்து கொள்ளவே இந்தப்பதிவு.

ஓடை புறம்போக்குகளில் வளரும் மரங்கள் : பனை,யூகலிப்டஸ் .புங்கன் ,பீமரம்,

வறட்சிபகுதிகளில் வளரும்மரங்கள் :சீதா.பனை,வேம்பு, குடைவேல் மரம்,கருவேல் , சீமை கருவேல் ,
சதுப்பு நிலங்களில் வளரும் மரங்கள் : நாவல் ,யூகலிப்டஸ் ,பூவரசு

ஏரிகளில் வளரும் மரங்கள் : கருவேல் ,காட்டு மூங்கில்

ஆழமில்லாத மண்ணில் வளரும் மரங்கள் : வாதநாராயணன் ,ஆச்சா. வாகை ,சீதா.

வேம்பு, வெள்வேல் ,கருவேல் ,குடைவேல் , சீமைக்கருவேல்

சரளை மண்ணில் வளரும் மரங்கள் : நாவல் ,ஆச்சா, கொன்னை மூங்கில், முந்திரி
செம்மண்ணில் வளரும் மரங்கள் : இலவம் ,கல்வேல் , பூவரசு சந்தனம் ,நெல்லி,
சவுக்கு, தேக்கு, புளி,

செஞ்சரளை மண்ணுக்கு: : முந்திரி மலைவேம்பு, சில்வர் ஓக் .பைன்

கரிசல் மண்ணுக்கு : வேம்பு ,இலுப்பை ,வனத்தேக்கு , புளி,புங்கன் ,நாவல் ,இலந்தை

,வேம்பு களிமண்ணில் வளரும் மரங்கள்: கரிமருது ,வேம்பு ,வாகை ,கருவேல்

ஆற்றோர மணல் நிலத்தில் வளரும் மரங்கள் : சவுக்கு ,பெருமூங்கில் ,இலுப்பை , நாவல்

கடலோர மணல் நிலத்தில் வளரும் மரங்கள் : தூங்குமூஞ்சி ,பனை,பெருமூங்கில், பூவரசு, சவுக்கு,
குளக்கரை ஏரிக்கரைகளில் வளரும் மரங்கள் : நாவல், புளி, இலுப்பை, மருது ,அரசு ,ஆல் ,மா

உவர்மண்ணில் வளரும் மரங்கள் : புங்கன் ,வாகை ,கொடுக்காய் புளி ,வேம்பு,சவுக்கு ,

களர் மண்ணுக்கு :சூபாபுல் , வேம்பு, கருவேல் , இலுப்பை, யூகலிப்டஷ் போன்றவையாகும் .

நீங்களும் மண்ணுக்கேற்ற மரங்களை நடுங்கள் ,

நம்முன்னோர்கள் முழுமையாக விட்டுச் சென்ற இயற்கையை பாதுகாப்போம்.
நாளும் நல்ல காற்றை சுவாசிப்போம் .

நட்புடன் குரு.பழ.மாதேசு

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...