Saturday, October 29, 2011

சித்தரின் எழுத்துக்கள் ( சவால் சிறுகதைப்போட்டி-2011 )

ஐ.ஜீ அலுவலகம். ஐ.ஜீ ரவியை பார்க்க கதவை திறந்து உள்ளே வந்த எஸ்.பி கோகுல் க்ரைம் பிராஞ்ச் ஓர் சல்யூட் அடிக்க வாங்க எஸ்.பி கோகுல் ஓர் முக்கியமான தகவல் சேகரிக்கற விஷயமா உங்களை வரச் சொன்னேன் சார் சொல்லுங்க என்றவாறு ஐ.ஜீ ரவியை பார்த்தவாறு எஸ்பி கோகுல் இருக்க ஓர் பைல் ஒன்றை எடுத்துபார்த்துவிட்டு நிமிர்ந்தஐ.ஜி" ஆல் இந்திய மெடிக்கல் கவுன்சில் நம்மகிட்ட ஓர் உதவி கேட்டுருக்காங்க ..!


அது சம்பந்தப்பட்ட விபரங்கள் இந்த பைல்ல இருக்கு இது சம்பந்தமா உங்களுக்கு உதவ ஓர் இன்பார்மர் தயார் பண்ணிருக்கேன் அவன் பேர் விஷ்ணு அவனோட விபரங்கள் இந்த பைல்ல இருக்கு உங்களுக்கு சந்தேகம்னா எனக்கு எப்ப வேணா கூப்பிடலாம் "என தன் உரையை முடித்த ஐ.ஜரவிக்கு ஓர் சல்யூட் அடித்து பைலை பெற்றுக் கொண்டு கிளம்பினார்.

எஸ்.பி கோகுல் இந்த பைலில் என்ன தான் இருக்கும்.? ஆல் இந்திய மெடிக்கல் கவுன்சில் போலீஸ் உதவி தேவைப்படுகிறதா ஏன் ? என்பது உட்பட மனதில் ஏற்பட்ட பல கேள்விகளுக்கு யோசித்துக் கொண்டிருக்கையில் எஸ்.பி கோகுலின் கார் தன் வீட்டின் முன் வந்து நின்றது உள்ளே வந்ததும் தனியறையில் உட்கார்ந்த எஸ்.பி.கோகுல் பைலை புரட்டி பார்த்தார்.. அதில் கண்ட வாசகங்கள் பின்வருமாறு இருந்தன

சேலம் பாலமலை அடிவாரத்தில் அமைந்த பாலமலை சித்தர் ஆசிரமம் என்ற ஒன்று உள்ளது .மனித உலகிற்கு இந்த ஆசிரமம் பிரபலமாக அறியாவிட்டாலும் ,பாலமலை சித்தரின் சித்த மருத்துவத்தின் மூலம் மருத்துவ உலகை திரும்பி பார்க்க வைத்துவிட்டார். தற்காலத்தில் மனிதனை வேகமாக கொன்று வரும் எச்.ஐ.வி எய்ட்ஸ்க்கு தனது தளராத முயற்சியால் மருந்து கண்டு பிடித்து சிலருக்கு சோதனை செய்து பார்த்ததில் அவர்கள் குணமாகி தற்போது நல்ல நிலையில் உள்ளார்கள்..

அந்த மூலிகை பற்றியும் அதன் தாதுக்கள் கலந்த விபரங்களேயும் ரகசியமாக பாதுகாத்து வைத்திருந்த சித்தர் கடந்த வாரம் தள்ளாத வயதினால் இறந்துவிட்டார் உதவிக்கு கூட ஆள் வைத்துக்கொள்ளாத சித்தர் இறந்த பின்பு அவர்எச்.ஐ.வி எய்ட்ஸ்க்கு மருந்து தயாரித்த விதம் ரகசியம் காக்கப்பட்டதால் இன்று வரைஅறியமுடியாத தாக உள்ளது .

எங்களுக்கு தேவைப்படுவதெல்லாம் இந்த ரகசியங்கள் சித்தர் எங்குவைத்துள்ளார் ?

அதன்விபரங்கள் என்ன ? என்பதைஇந்திய மெடிக்கல் கவுன்சிலுக்கு தேவைப்படுகிறது.! சித்தர்யார்என்கிற விபரங்களும் ? தேவைப்படுகிறது. முக்கியமான விஷயம் இந்த உதவியை உங்கள் காவல்துறை செய்வதன் மூலம் வரும் காலத்தில் எச்.ஐ.வி இல்லாத இந்தியாவை உருவாக்க உதவி செய்வதாக இருக்கும் இப்படிக்கு மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா


அடுத்த பக்கத்தில் இன்பார்மர் விஷ்ணுவின் முகவரியும் செல்போன் நம்மரும் இருந்தது படித்து முடித்த எஸ்பி கோகுல் இந்த விபரங்களை வைத்துக்கொண்டு எப்படி கண்டு பிடிப்பது என யோசித்துக்கொண்டு இருக்கையில் விஷ்ணுவின் செல் நம்பர் கண்ணில் பட்டது . ஓ.கே விஷ்ணுவிடம் பேசினால் சில தகவல் இருக்காலாம் என எண்ணிய எஸ் பி தனது செல்போனில் விஷ்ணுவை அழைத்தார்

ரிங்ஆனது

விஷ்ணு புது நம்பரா இருக்கே என யோசித்தவாறு எடுத்து விஷ்ணு

ஹலோ..!

ஹலோநான் எஸ் பி கோகுல் பேசறேன்.
ஐஜீ ரவி பாலமலை சித்தர் ரகசியம் சம்பந்தமாக உங்களிடம் சில விபரங்கள் இருப்பதாக சொன்னார் அதைச் சொல்ல முடியுமா ?

சார் நான் ஒரே ஒரு க்ளு மட்டும் பாலமலை சித்தர் ஆசிரமத்துல எடுத்தேன் . இப்ப வண்டில போயிட்டு இருக்கேன். வீட்டுக்கு போய்ட்டு உங்களுக்கு எஸ்.எம் .எஸ் ல அந்த குறியீட்டை அனுப்பறேன் சார் . ஓகே என்றவாறு போனை கட் செய்தார் எஸ்பி கோகுல் .



அடுத்த நிமிடம் ஐஜீ இன்பார்மர் விஷ்ணுவை அழைத்து எஸ் பி கோகுல் உனக்கு போன் செய்து குறியீடு கேட்டால் சரியான குறியீடு கேட்டால் கொடுக்காதே ! மாற்றிக்கொடு காரணம் கேட்காதே . என்றார் சரிங்க சார் என்றவாறு குழம்பி போனை வைத்தான் விஷ்ணு



20நிமிடத்தில் எஸ்பி கோகுலுக்கு ஓர் எஸ் எம் எஸ் வந்தது . அதை திறந்து பார்த்தார் எஸ்பி அதில் MR கோகுல், SW H2 6F இதுதான் குறியீடு .விஷ்ணு . தனது டேபிளில் ஓர் துண்டுசீட்டில் எழுதி வைத்துக்கொண்டு யோசிக்கஆரம்பித்தார்


அடுத்த நிமிடம் ஐ.ஜீக்கு செல்லுக்கு ஓர் எஸ்எம் வந்தது. அதில் சார் நான் எஸ்பி கோகுலிடம் தவறான குறியீட்டை தான் கொடுத்திருக்கிறேன் கவலை வேண்டாம் என இருந்தது படித்துவிட்டு மெளனமாய் சிரித்தார் ஐஜீ

தன்னிடம் கொடுக்கப்பட்ட முக்கியமான பணியை அறிந்த எஸ்பி கோகுல் மொபைல் டிரேஸிங் வசதி மூலம் ஐ.ஜிக்கு விஷ்ணு அனுப்பிய எஸ்எம் எஸ் ஐ படித்தார் .சற்றே அதிர்ச்சி அடைந்தவாராக ஏன் இப்படி ?விஷ்ணு தவறான குறியீட்டை கொடுக்கவேண்டும் என யோசித்தவாறு இருக்க அந்தக் குறீயீட்டின் அர்த்தம் தேட ஆரம்பித்தார் .

விளங்கவேயில்லை .அடுத்த நாள் தனியாக பாலமலை சித்தர் ஆசிரமம் சென்று ஓர் ரிப்போர்ட்டர் போல விசாரித்து விட்டு வந்தார் பலனில்லை. சித்தர் எட்டாம் வகுப்புவரை படித்தவர் சொந்த பந்தம் யாருமில்லை என்பதை தவிர உபயோகமான குறிப்பு ஏதும் இல்லை.

சரி மனதில் உதித்த கேள்விகளை ஐ.ஜியிடம் கேட்டுவிடலாமென எண்ணி ஐ.ஜி ரவிக்கு போன் செய்தார் .

ஹலோ ஐஜீ ரவி ஹியர்,

சார் நான் எஸ்பி கோகுல் பேசறேன்.

நேரடியா விஷயத்திற்கு வந்துடறேன் விஷ்ணுவோட மொபைல் டிரேஷ் பண்ணுனப்ப உங்களுக்கு ஓர் எஸ்எம்எஸ் அனுப்பிருக்கிறத பார்த்தேன் 'ஏன் எனக்கு குறீயீட்ட தப்பா அனுப்ப சொன்னீங்க??

சிறிது மௌனத்திற்கு பின்

எய்ட்ஸ்கிற கொடிய நோய்க்கு மருந்தை சித்தர் கண்டுபிடிச்சிருக்கலாம் . அது சமுகத்திற்கு நல்லதுதான். ஆனால் இப்ப எய்ட்ஸ் இருக்கிற பயத்தால தான் மனிதன் ஒழுங்கமா பயத்துல இருக்கிறான்னு எனக்குபட்டுச்சு அதான் THAPPA சொன்னேன் என விளக்கினார் ஐ.ஜீ

இருக்கலாம்சார். ஆனா அடுத்த தலைமுறை குழந்தைகள் அப்பாவியா சாகறாங்களே அதுக்காகவாவது நாம இந்த மருந்து இருக்கிற இடத்தை கண்டுபிடிக்கனும் ' சரியான குறியீட்டை சொல்லுங்க சார்

சரி குறிச்சிக்கோ என மனம் மாறி ஐஜீ சொன்னார்

SW2HF6

ஆல்தபெஷ்ட் எஸ்பிகோகுல் இதான் உண்மையான குறீயீடு.

4ஆம் நாள் பாலமலை சித்தரின் ஓலைச்சுவடியுடன் பாதுகாக்கபட்ட பெட்டியுடன் ஐஜீ அலுவகத்திற்கு வந்தார் ஆல் இந்தியா மெடிக்கல் கவுன்சில் உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு எஸ்பி கோகுலை பாராட்டினர்.


ஐஜீ பொறுமைதாங்காதுகேட்டார்.SWக்கு(SIDDES WARAN )என்றும்2Hக்கு(HILLS 2)என்றும்F6க்கு (feet 6)என்றும் அர்த்தம்.
சித்தரின் ரகசிய பெட்டியை தன் இறப்பை முன்னமே அறிந்து பாலமலையில் உள்ள சித்தேஷ்வரன்என்னும் மலைக் கோவிலில் தான் தவம்செய்த இடத்தில் இந்த அரிய ஓலைச் சுவடியை பாதுகாத்து வைத்துள்ளார்.(பால மலையில் உள்ள ஒரு கோவில் தான் சித்தேஷ்வர மலை) அந்த குறியீட்டின் மூலம் இடத்தை கண்டுபிடித்து கொண்டு வந்து விட்டேன் சார் Eன்றார் எஸ்பிகோகுல் சபாஷ் என தட்டிக்கொடுத்தார் ஐஜி

4 comments:

நம்பிக்கைபாண்டியன் said...

கதை நன்றாக இருந்தது, எய்ட்ஸ் பற்றிய இருவரது கருத்தும் யதார்த்தம், வாழ்த்துக்கள்

போட்டி விதிகளில் காதிதத்தில் உள்ள செய்தி மட்டும் கதையில் வந்தால் போதுமா அல்லது பிரிண்ட் செய்யப்பட்ட காகிதமும் வரவேண்டுமா என்று தெரியவில்லை, அவர்களிடம் கேட்டு சற்று மாற்றிக்கொள்ளுங்கள்,(ஒரு செய்தியை மட்டும் காகிதத்தில் எழுதுவதாக கதையில் வருகிறது)

Unknown said...

தை அருமை....வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அப்படியே என்னோட கதையையும் படிச்சுடுங்க..

http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

திரு நம்பிக்கை பாண்டியன் அவர்களே ,ஆராய்ந்து அறிந்த கருத்துரை. வெற்றி பெற்றதும் ஈரோட்ல டிரிட்ல கலந்துகுங்க. எப்பொழுதும் கருத்துரை வேண்டி ,நட்புடன் குரு.பழ.மாதேசு www.kavithaimathesu.blogspot.com

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

நன்பர் வெண்புரவி அவர்களே கடுமையான வேலைப்பளுவிலும் அழகான நகைச்சுவை கதை. வெற்றி பெற பூங்கொத்துக்கள் . நாளும் நட்புடன் குரு.பழ.மாதேசு www.kavithaimathesu.blogspot.com

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...