Friday, July 5, 2013

ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் ,குமார வயலூர் ,ஸ்ரீ ரங்கம் வட்டம் ,திருச்சி

ஸ்ரீ ஆதிநாயகி உடனமர் ஆதிநாதர் திருக்கோவில் ,

                                வயலூர், திருச்சி



அமைப்பு : 


திருச்சியில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் வயலூர் என
அழைக்கப்படுகிற குமரன் குடிகொண்டு அருள்வதால் குமாரவயலூர் எனவும்
சிறப்பிக்கப்படுகிற சுற்றிலும் வயல் சூழ்ந்த ஓர் அழகிய அமைப்பில் ஸ்ரீ
சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

 இங்கே மூலவராக தாயார் ஸ்ரீஆதிநாயகி உடன் தகப்பனார் ஸ்ரீ ஆதிநாதராக அருள்பாலிக்க பெருமை சேர்க்கும் விதமாக வள்ளி ,தெய்வானை உடனுறை ஸ்ரீ சுப்பிரமணியராக அருள்பாலிக்கிறார் . திருக்கோவில் ஸ்தலமரமாக வன்னி மரம் விளங்குகிறது.


தீர்த்தம் :


சக்தி தீர்த்தம் இத் தீர்த்தம் முருகப்பெருமான் தன் வேலால்
உருவாக்கியதாக புராணச்செய்தி உரைக்கிறது. சக்தி தீர்த்தம் திருக்கோவில்
முன்பாக குளத்தில் பொங்கி வழிகிறது.

 திருக்கோவில் சிறப்பு : 


 அருணகிருநாதருக்கு ஸ்ரீ முருகப்பெருமான் திருவண்ணாமலையில் தடுத்தாட்கொண்டு வயலூருக்கு வா என அழைத்து வயலூருக்கு வந்த அருணகிரி நாதருக்கு காட்சி தந்து அவரின் நாக்கில் "ஓம் " என்னும் பிரணவ மந்திரத்தை எழுதி திருப்புகழ் பாட முதல் அடியாக அருளிய ஸ்தலமாக போற்றப்படுகிறது .


முருகப்பெருமான் தம்மை உலகிற்கு வெளிப்படுத்திக்கொண்ட ஸ்தலமாக
போற்றப்படுகிறது. ஆக ஞானம் வளர இங்கே வணங்குவது சிறப்பு ,
திருக்கோவிலில் திருமணம் செய்வது மிக சிறப்புடையாக குறிப்பிடுகிறார்கள்.ஸ்ரீ ஆதிநாயகி இங்கே வடக்குமுகமாக அருள்பாலிப்பதால் விஷேசமாகும் .


திருக்கோவில் வணங்கியோர்கள் : 


அக்கினி தேவன் , அருணகிரி நாதர் ,
கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஆகியோராவர்.

 திருக்கோவில் பூஜைகள்:


 6 கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகிறது.காலை 06.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரையிலும் , மதியம் 3.30முதல் இரவு 09.00 மணி வரையிலும்
திருக்கோவில் திறந்திருக்கும் . திருக்கோவில் காலம் சோழர்கள் கால
கல்வெட்டை சார்ந்ததாகும் .


பழங்காலத்தில் சோழ அரசர்கள் வயலூரை முகாமிட்டிருந்த போது தாகம் காரணமாக கரும்பை உடைக்க அது மூன்றாக பிளந்து இரத்தம் வர அங்கே சுத்தம் செய்து தோண்டிய போது அங்கே சுயம்பு லிங்கமாக ஆதிநாதர் வெளிப்பட அச்சோழ மன்னரால் திருக்கோவில் எழுப்பப் பட்டது என்பது வரலாறாகும்.பொய்யாக்கணபதி என்ற தனிச்சன்னதி வணங்கத்தக்கது .

 விசேச நாட்கள் :

வைகாசி விசாகம் , கிருத்திகை ,சஷ்டி, பிரதோஷ நாட்கள் ஆகியனவாகும் .


முடிவரை :


 குன்றில்லாத இடத்தில் அமையாத முருகர் கோவில் என்றாலும் கூட
இங்கே மூலவராக ஆதிநாதர் இருக்க முருகப்பெருமான் ஸ்ரீ அருணகிரி
நாதர்க்கு காட்சி கொடுத்ததால் பல சிறப்புகள் பெற்று விளங்குகிறார் .


முருகப்பெருமானே காட்சி தந்த ஸ்தலம் , அழகில் முருகர் நம்மை அன்பு
செலுத்துகிறார் . திருச்சி சென்றால் மறக்காமல் சென்று வாருங்கள் .
வயலூர் முருகர் வளங்கள் பல சேர்ப்பார் . நன்றி

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...