Sunday, July 21, 2013

ஸ்ரீ வெக்காளியம்மன் திருக்கோவில் ,துறையூர், திருச்சி

திருச்சி மாநகரில் உள்ள பல திருக்கோவில்களில் விஷேசமான திருக்கோவிலாக இருந்தாலும் அம்பிகை வழிபாட்டுக்குரிய பழமையான திருக்கோவிலாக ஸ்ரீவெக்காளியம்மன் திருக்கோவில் பழமையும் புராணத்தொடர்பும் கொண்டது .


செல்லும் வழி :

 திருச்சி நகரின் மேற்குப்பகுதியில் உறையூர் என்ற பழமை
வாய்ந்த பகுதியாகும் , திருச்சியில் இருந்து 3கி.மீ தொலைவிற்குள்ளாக
நாச்சியார் கோவில் என்ற பஸ் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து மேற்கே
500மீட்டர் தொலைவில் ஸ்ரீ வெக்காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது


உறையூர் :

 பழங்காலச்சோழர்களின் தலைநகராக விளங்கிய துறையூரில்
அருள்பாலிக்கும் அம்பிகையாவார் . கி.பி 130 களிலேயே உறையூரின் பெருமையை யவனமுனிவரால் சோழர்கள் தலைநகராக குறிப்பிட்டுள்ளதை வைத்தை பழமையும் தொன்மையும் அறியலாம் .

 வாசபுரி உறந்தை.வாரணம் ,முக்கீஷ்வரம் எனபழங்காலத்தில் உறையூர் அழைக்கப்பட்டது. உறையூரில் புகழ்பெற்ற நாச்சியார் திருக்கோவில் 108 வைணவத்திருத்தலங்களில் ஒன்று அதை முந்தைய பகிர்வில்படிக்கவும் .


 திருக்கோவில் வந்தவுடன் தெற்கு வாயிலாக உள்ளே நுழைந்தவுடன்
நாம் காண்பது வல்லப கணபதியாவார் அவரை வணங்கி பின் மயூரமுருகர் வள்ளிதெய்வானை தரிசித்து பின் காத்தவராயர் மதுரைவீரன் ,பெரியண்ணன் சன்னதிகளை தரிசனம் செய்து பின் தனிச்சன்னதியில் உள்ள பொங்கு சனிஷ்வரரை வணங்கி நவகிரகங்கள் தொழுது நீண்ட பிரகாரத்தில் மூலவராக அம்பிகை ஸ்ரீவெக்காளியம்மன் அருள்பாலிக்கிறார் ,

இறைவி காக்கும் கடவுளாக மங்களகரமாக விளங்குகிறார் .நாங்கள் செல்லும்போது தங்கரதத்தில் ஸ்ரீ வெக்காளி அம்மன் தரிசனம் கிடைக்கப்பெற்றது.

அம்பிகைக்கு தங்க தேர் உள்ள நான் பார்த்த திருக்கோவில் வெக்காளியம்மன் மட்டுமே, இறை கருணையால் நாங்கள் சென்ற நேரம்அம்பிகை தங்கத்தேரில் பவனி வந்தது எங்கள் பாக்கியமேவாகும்.

 அம்பிகைக்கு முன் சூலங்கள் ,இறை வேண்டுதலுக்காக பக்தர் வேண்டி மாலையாக மடித்து கட்டப்பட்ட சீட்டுகளை கண்டு வியப்புற்றேன் .

 அம்பிகையும் சிறப்புகளும் :

வடக்கு பார்த்த அம்பிகை ஸ்ரீ வெக்காளி அம்மனாகும் .வலது காலை மடித்து
இடது காலை ஊன்றி இருப்பது சுகாசனம் என்றும் இவ்வாறுள்ள அம்பிகை
மங்களங்கள் பலவற்றை வாழ்வில் ஏற்படுத்துவார் ,ஆகவே நன்றாக வணங்குகள் என விளக்கினார். கருணைமிகு கண்களால் சிவந்தமுகத்தால் அம்பிகை கண்டு வழிபட்டோர்க்கு தீவினைகள் களைந்து நல்வினைகள் பிறக்கமென்பதில் ஐயமில்லை.


விஷேசநாட்கள் :

பெளர்ணமி மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்
நடைபெறுகிறது ஒவ்வொரு மாதத்திற்கேற்றார் போல சிறப்பு அபிஷேக வழிபாடுகள்நடைபெறுகிறது. கட்டணம் செலுத்தும் பக்தர்களுக்கு வெள்ளி காலை 10.15 முதல்11 வரை தங்ககவச வழிபாடு விஷேசமாக நடைபெறுகிறது

 . பூஜை நேரங்கள் :


திருக்கோவில் தினமும் காலை 5.15 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9.00மணிக்கு
சாத்தப்படுகிறது. முழு பகல் நேரத்திலும் கோவில் எப்போதும்
திறக்கப்பட்டிருக்கும் .

அபிஷேகம் இரு நேரங்கள் காலை 5.30 மற்றும்
மதியம் 12 மணிக்கும் நடை பெறும் . ஆறுகால பூஜை விஷேசமாக செய்யப்படுகிறது


 திருக்கோவில் தொலைபேசி எண் :0431 - 2761869, 2767110

 முடிவுரை :

எங்கும் சக்தி தெய்வமாக காக்கும் கடவுளாக விளங்கும் ஸ்ரீ வெக்காளியம்மன்
பழங்கால சோழர்கள் காலத்தியது. பல காலமாற்றங்களால் திருக்கோவில்
புதுப்பிக்கப்பட்டு இருப்பினும் அன்னையின் சக்தி அளப்பரியது . வாய்ப்பு
அமையும் போது ஸ்ரீ வெட்காளியம்மனை தரிசித்து வாருங்கள் ,நலங்கள் பலவும்கூடும் .

நன்றி

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...