Saturday, July 20, 2013

அருள்மிகு அகிலாண்டிஷ்வரி உடனமர் ஸ்ரீ ஜம்புகேஷ்வரர் திருக்கோவில் ,திருவானைக்காவல் ,திருச்சி

''சிலந்தியும் ஆனைக்காவில் திருநிழல் பந்தர் செய்து,
உலந்தவன் இறந்த போதேகோச்செங்கண்ணுமாக ,
கலந்த நீர் காவிரிசூழ் சோணாடு சோழர்தங்கள் ,
குலந்தனிற்பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே''.

                                                                                                                    -திருநாவுக்கரசர்

 தமிழகத்தின் பஞ்ச பூதத் ஸ்தலங்களில் நீர்த்ஸ்தலமாக போற்றப்படுகின்ற ஸ்தலமாகதிருவானைக்காவல் ஸ்ரீ ஜம்புகேஷ்வரர் திருக்கோவிலாகும் .

 இறைவன்-சம்புகேஸ்வரர்

அம்பாள் - ஸ்ரீ அகிலாண்டீஷ்வரி

 அமைவிடம் -
திருச்சிமாவட்டம் ஸ்ரீ ரங்கம் வட்டம் ஸ்ரீரங்கத்தில்இருந்து
திருவானைக்காவல் சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

ஷ்தலமரம் : வெண்நாவல் மரம்

 பழமை -

தேவாரப் புகழ் பெற்ற சுமார் 2500 ஆண்டுகள் வரலாற்றுப்
பெருமை கொண்ட கோச்செங்கோட்சோழனால் கட்டப்பெற்ற நீண்டபெரிய மதிற்சுவர்கொண்ட அழகிய திருத்தலமாகும் .

தீர்த்தங்கள் - நவ (9) தீர்த்தங்கள் பாடல்

பாடியோர்கள் -

சமயக்குரவர்கள் அப்பர் ,சுந்தரர் ,திருஞானசம்பந்தர் ,
மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் பாடிய அற்புத ஸ்தலம்.அவர்களின்றி
காளமேகப்புலவர் .தாயுமானவர்.கச்சிய்யப்ப முனிவர் ,அருணகிரிநாதர் .
ஆகியோரால் பாடல் பெற்ற பதியாகும் ,

வணங்கியோர் -

நந்தி,சம்புமுனிவர்,அகிலாண்டீஷ்வரி . பிரம்மா ,இராமபிரான் ,அருணகிரிநாதர் .ஆகிய எண்ணற்ற
பெருயோர்கள் வணங்கிய ஸ்தலமாகும் ,

 பூஜைநேரங்கள் :

5காலபூஜையாகும் ,

 காலைஉசத்காலபூஜை 6.30 முதல் 7.30 வரை,
காலசந்தி 8. 00 முதல் 9.00 வரை
உச்சிகாலபூஜை 11.00 முதல் 12. 00வரை
 சாயரட்சைபூஜை 05. 00முதல் 05.45வரை
அர்த்தசாம பூஜை -09. 00 0930க்குள்ளாக
நடைபெறுகிறது.
 முக்கிய திருவிழா நாட்களில் வெள்ளி ஞாயிறுகளில் நடை திறந்தே இருக்கிறது.

புராணம் :

பழங்காலத்தில் யானை ஒன்று காட்டில் வசித்து வந்தபோது
காட்டில் சிவலிங்கம் ஒன்றைக்கண்டது. யானை அவ்விடமே தங்கி காவிரி நீரால் சிவலிங்கத்தை பூஜித்து வந்தது . அப்போது வெண்ணாவல் மரத்தில் சிலந்தி ஒன்று வசித்து வந்தது . மரத்தில் இருந்து குப்பைகளும் தூசிகளும் லிங்கம் மேல் விழாமல் வலைபின்னி சிவவழிபாடு செய்து வந்தது .

அடுத்த நாள் யானைவந்தது. சிவலிங்கம் மேல் சிலந்தி வலையா என பிய்த்து எறிந்தது . யானை சென்ற பின் வந்த சிலந்தி கோபம் கொண்டு மறுபடி சிலந்திவலை கட்டி பூஜை செய்து கொண்டிருக்க மறுநாள் வந்த யானையும் சிலந்தியும் கோபம் கொள்ள சிலந்தி துதிக்கை வழியாக தலை உச்சியில் சென்று கடிக்க யானை இறந்தது.துதிக்கையிலிருந்து வெளிவரமுடியாமல் சிலந்தியும் இறந்தது.

 அப்போது காட்சி கொடுத்த சிவபெருமான் தமக்கு பூஜை செய்தபடியால் யானைக்கு சிவலோகத்தில் பூத கணங்களுக்கு தலைமையாக நியமித்து அருள் வழங்கினார் ,சிலந்தி சோழமன்னராக பிறக்க அருள் செய்தார் என்பது புராணம் கூறும் உண்மையாகும் .

 அன்றுமுதல் இத் திருத்தலம் "திருவானைக்கா "என்றும்"ஆனைக்கா " என்றும் பெயர் பெற்று சிறப்பு பெற்றது. நால்வர் மட்டுமன்றிஅருணகிரி நாதராலும் பாடல்பெற்ற ஸ்தலமாகும் .

 முடிவுரை :

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் முக்கியமான சிவஸ்தலமாக வணங்கப்படுகிற ஸ்ரீஜம்புகேஷ்வரர் ஸ்ரீ அகிலாண்டிஸ்வரி திருக்கோவில் வந்து அருள்பெறுங்கள் .


திருக்கோவில் நீண்ட மதிற்சுவரும் சிறிய சிவலிங்க அமைப்பும் குனிந்து
செல்லக்கூடிய அழகையும் காணுதல் சிறப்பு . திருச்சியில் பார்க்கவேண்டிய
அருகாமையில் உள்ள சிவஸ்தலம் ,

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவபெருமான் உங்கள் வாழ்விலும் மாற்றங்கள் உண்டாக்கவேண்டி இதைப்பாராயணம்
செய்கிற அனைவர்க்கும் சிவனருள் கிட்ட வேண்டி விடைபெறுகிறேன் .

நன்றி

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...