Wednesday, May 15, 2013

ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் திருக்கோவில்,குட்டை தயிர்பாளையம், சித்தோடு

வைணவக்கடவுள்களில் ஸ்ரீஆஞ்சநேயப்பெருமானுக்கென தனி இடமுண்டு.தமிழகத்தில்பல ஆஞ்சநேயர் திருக்கோவில் இருப்பினும் தனிச்சிறப்பு கொண்டதாக சித்தோட்டின் அருகே குட்டை தயிர்பாளையத்தில் இருந்து ஸ்ரீ பக்தஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

 திருக்கோவில் செல்ல வழி:

ஈரோட்டில்இருந்து கோபி செல்லும் வழியில் 14 கி.மீ தொலைவிலும், சித்தோட்டில்  இருந்து 4 கி.மீ தொலைவிலும் திருக்கோவில் அமைந்துள்ளது.

 திருக்கோவில்அமைப்பு :

திருக்கோவில் கிழக்கு நோக்கிய அமைப்பாகும் . திருக்கோவில்
இடப்புறம் சத்தியில் இருந்து ஈரோடு செல்லும் மாநில நெடுஞ்சாலையும்
வலப்புறம் பெரிய நீர்க்குட்டையும் அமைந்துள்ளது.குளிர்சியான இடத்தில்
நீண்டு வளர்ந்த தென்னை மரங்களுடன் அழகிய பசுமையான மரங்கள் சூழ
திருக்கோவில் அமைந்துள்ளது .

 மூலவர் :

ஸ்ரீ ஆஞ்சநேயப்பெருமான் நின்றநிலையில் வணங்கிய நிலையில் அருள்பாலிக்கிறார் .பழங்கால ஆஞ்சநேயர்   திருவுருவமாக திருக்கோவில் அமைந்துள்ளது.

 ஸ்தலமரம் : இலந்தை மரம்

வாரபூஜை:

 திருக்கோவில் தினமும் திறந்திருந்தாலும் சனிக்கிழமை கூட்டம்
அலைமோதுகிறது. ஆஞ்சநேயர் ஜெயந்தி போன்ற வைணவ விஷேசநாட்களில் கூட்டம்அலைமோதுகிறது .

திருக்கோவில் சிறப்பு :

பழமையான திருக்கோவில் விஷேச
நாட்களில் பெருமாள் கருடனின் தரிசனம் இத்திருக்கோவிலின் மேலே காணலாம் .


முடிவுரை :

திருக்கோவில் சிறிய அளவே ஆயினும் சக்தி பெரியது. சாந்தமாய்
குளிர்ச்சியாய் அமைந்து அருள்பாலிக்கிற ஸ்ரீஆஞ்சநேயப்பெருமானை வந்து
வணங்கி அருள் பெற்றுச்செல்லுங்கள் . நன்றி

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...