Sunday, May 12, 2013

ஸ்ரீ பழனி ஆண்டவர் திருக்கோவில் கந்தமலை மாரப்பம்பாளையம்

குன்று தோறும் குமரன் உறையும் இடமென என சான்றோர்களின் கூற்றிற்கு ஏற்ப   ஸ்ரீ முருகப்பெருமானின் பழமையான ஆலயமாக ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் காளிங்கராயன் பாளையத்தில் இருந்து கவுந்தப்பாடி செல்லும் வழியில் 4 வது கி.மீட்டரில் மாரப்பம்பாளையம் அருகே அமைந்த பழங்கால மலைக்கோவிலாகும்.


இங்கு முருகப்பெருமான் பழனி ஆண்டவராக அருள்பாளிக்கிறார் . திருக்கோவில் ஊரைத்தள்ளி கரடு முரடான மலையில் அமைந்திருக்கிறது. திருக்கோவில் அடிவாரத்தில் இருந்து மேலே சுமார் 150 கற்களால் அடிக்கி வைக்கப்பட்டபாறையில் நடந்து செல்லவேண்டும் .

 மலையெங்கிலும் ஊஞ்சல் மரங்களால் நிரம்பிஇருக்கிறது. கீழே அழகிய பாழியும் சற்றே வறட்சியை பிரதிபலிக்கிறது.திருக்கோவில் மலைமேலே கிழக்கு நோக்கியவாறு ஸ்ரீ பழனி ஆண்டவர்அருள்பாலிக்கிறார் .நின்ற திருமேனில் ஸ்ரீ முருகப்பெருமான்அருள்பாலிக்கிறார்.


வாரபூஜை :

 வெள்ளிக்கிழமை மதியம் மட்டும் நடைபெறுகிறது .வளர்பிறை
சஷ்டியில்  இங்கு   விஷேசமாக  பூஜை  நடைபெறுகிறது.

 முருகப்பெருமானுக்குரியநாட்கள் மற்றும் வெள்ளிக்கிழமை மதியம் 12 முதல் 2க்குள் திருக்கோவில்இப்பகுதியை சேர்ந்த பூசாரியால் திறக்கப்படும் .

 திருக்கோவில் சிறப்பு:

எல்லா கோவில்களில்களைப் போல் இல்லாமல் மரத்தால் செய்யப்பட்ட
கோபுரகலசத்தை பார்க்கையில் ஸ்ரீ பழனி ஆண்டவர் திருக்கோவில் 1000
வருடங்களையாவது கடந்திருக்கும் என்பது புலனாகிறது.

 முடிவுரை:

பழங்காலத்திய ஸ்ரீபழனி ஆண்டவர் திருக்கோவில் படிக்கட்டுகள் மற்றும்
புதுப்பிக்கும் பணிகள் செய்து திருக்கோவிலை விரிவாக்கம் செய்தால் இன்னும்



அதிக பக்தர்கள் வருவார்கள் .யாரேனும் ஓர் பக்தர் அதற்காக
படைக்கப்பட்டுருப்பார் .ஸ்ரீ பழனி ஆண்டவர் திருக்கோவில் பார்க்க வேண்டிய
ஆலயம்.நன்றி

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான தகவலுக்கு நன்றி...

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் நட்பே

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...