Sunday, March 31, 2013

வாழ்வில் திருப்புமுனை வேண்டுமா ?

பல்வேறு பிரச்சினைகள் பல்வேறு வாழ்க்கை முறைகள் ,,சிலருக்கு பணகஷ்டம் சிலருக்கு திருமணம் நடைபெறாத நிலை சிலருக்கு நல்ல பணி கிடைக்காமல்  கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கக்கூடிய சூழ்நிலை '''

இப்படி பல தரப்பட்ட பிரச்சனைகளில் சிக்கி புலம்பி தவித்துக்கொண்டிருப்பவர்கள் பல பேர் இதற்கெல்லாம் என்னதான் தீர்வு என யோசிக்கையில் ஆன்மீக வழியில் சரியான தீர்வு ஒன்றை எனத சுய வாழ்வுடன் இணைத்து உங்களிடம் பகிரலாம் என்ற ஆவலில் இக்கட்டுரையை பகிர்கிறேன் .

எனது 22 வது வயதில் சரியான வேலை கிடைக்காமல் வறுமையுடன் சுற்றிக்கொண்டிருந்த காலத்தில் நன்பர்களுடன் திருப்பதி சென்று ஏழுமலையானை வணங்கி , பின் அங்கிருந்து திருவண்ணாமலை வந்து திருஅண்ணாமலையாரை தரிசித்து வீட்டுக்கு வந்து சேர்ந்தேன் .

கடன் வாங்கி இறைவழிபாடு செய்து திரும்பி அடுத்த நாள் வீட்டில் கிளம்புகையில் பாக்கெட்டில் 1 ரூபாய் கூட இல்லாத கால கட்டம் அது. திருப்பதியும் திருவண்ணாமலையும் ஏதோச்சையாக சென்று வந்த நிகழ்வுதான் .


அப்போது இறைவழிபாடு பற்றி அவ்வளவு ஈடுபாடில்லை. திருப்பதி,திருவண்ணாமலை சென்று வந்து அடுத்த நாள்
பாக்கெட்டில் பணம் இல்லாமல் சுற்றிக்கொண்டு இருக்க ,

என்னடா ...? திருப்பதி போன திருப்பம் வரும் பணம் வரும் சொன்னாங்க ! பணம் இல்லாம ஏழுமலையான் சுத்த விட்டுடாரேனு யோசிச்சு நடந்தப்ப வழியில் 100ரூபாய் கிடந்தது .

அப்போதுதான் தோன்றியது இறைவன் கண்டிப்பாக நம்முடன் இருக்கிறார் என்று உணர்ந்தேன் . அந்த காலகட்டங்களில் எழுத்துச்சித்தர் பாலகுமாரன்
புத்தகங்களை தேடி தேடி படித்துக்கொண்டிருந்தேன் .

அவரின் குருவான ஸ்ரீ
யோகிராம் சுரத்குமாரை பற்றி எழுதும் போது அவரைப்பார்க்கவேண்டும் என்ற
எண்ணம் ஆவலாகியது. இந்த திருப்பதியில் துவங்கிய பயணம் திருவண்ணாமலையில் முடித்த இந்த பயணம் சுவாரஷ்யமானது.

திருவண்ணாமலை திருக்கோவில் வளாகத்தில்
வன்னிமர விநாயகர் சன்னதியில் சாது போல சித்தர் போல ஒருவர்
உட்கார்ந்திருக்க விநாயகரை வணங்கிவிட்டு வருகிற எல்லோரும் அவரிடம்
திருநீரு வாங்கி கொண்டு இருந்தார்கள் .

நானும் வணங்கி அவர் முன் நிற்க அவர் எதிரே என்னை உட்காரச் சொன்னார் . நானும் உட்கார சித்தர் வைத்திருந்த ஒரு பையில் திருநீரை எடுத்து என் நெற்றியில் இட்டுவிட்டார் .

கண்களை உற்றுப்பார்க்க நானும் அவர் கண்களைப்பார்த்து அமைதியானேன் . சரி செல்லுங்கள் எனக்கூற நான் வணக்கமிட்டு கிளம்பி வந்தேன் . நான் திருப்பதியும் திருவண்ணாமலையும் சென்று வந்து சரியாக 3
வருடங்களில் அரசுப்பணியில் சேர்ந்து விட்டேன் .

இது என் வாழ்வில் நிகழ்ந்த உண்மை . அதன் பின் எங்கெங்கோ சென்ற என் வாழ்க்கைப்பயணம் சிவபக்திக்காக இழுத்துச்சென்றது. இப்போது பிரதோஷ வழிபாடுகளை முடிந்தவரை தொடர்கிறேன் . அவர் இட்டு விட்ட திருநீரு 4 வருடம் கழித்துஎன்னைப்பற்றிக் கொண்டது .

 சிவவழிபாடு ,திருநீரு, தாண்டி , அடுத்து புதுப்புது ஆலயங்கள் தரிசித்து பிளாக்கில் திருக்கோவில் வரலாறை எழுதுவதுஎன என் கடுமையான பணிகளுக்கிடையில் இறைவழிபாடும் தொடர்கிறது.

 இந்த பதிவின் நோக்கமே எவ்வளவு பெரிய மோசமான ஜாதகமாக மனிதருக்கு இருப்பினும்திருப்பதி சென்று திருமலைக்கு படியேறி ஸ்ரீ ஏழுமலையானை வழிபட்டு பின்  திருவண்ணாமலை வந்து ஸ்ரீ அருணாசலேஷ்வரரை வணங்கி வீட்டுக்கு வந்து
காத்திருங்கள் .

 நல்ல வேலை,மனைவி, என உங்கள் வாழ்க்கைக்கு தேவையான
ஏதேனும் ஓர் சுபகாரியம் உடனடியாக நடைபெறும் . கண்டிப்பாக சென்று வந்துவிட்டு நல்லவைகளை பகிருங்கள் . நன்றி

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... உண்மை...

தொடர வாழ்த்துக்கள்...

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...