Saturday, March 2, 2013

பர்வத மலையின் அமைப்பு பாகம் 1

பிரம்மராம்பிகை உடனமர் மல்லிகார்ஜீனேஷ்வரர் திருவண்ணாமலை மாவட்டம் பேளூர் வட்டம் பர்வதமலை எனும் அழகிய மலையில் குடிகொண்டு மக்களை காத்து வருகிறார்..

 திருவண்ணாமலை மாவட்டம் பேளூரில் இருந்து 20கி.மீட்டர்
தொலைவிலும், செங்கத்திலிருந்து 30கி.மீட்டர் தொலைவிலும் ,
திருவண்ணாமலையில் இருந்து 30கி.மீ தொலைவிலும் பர்வதமலை அமைந்துள்ளது.



4560அடிஉயரத்திலும் 5500ஏக்கர் பரப்பளவில் 26 கி.மீட்டர் சுற்றளவில்
அமைந்த மலையின் உச்சியில் திருக்கோவில் அமைந்துள்ளது. போளூரில் இருந்து செங்கம் செல்லும் சாலையில் தென்மாதிமங்கலம் வழியாக மலைக்கு செல்லும்வழியாகும் .

மற்றொரு வழி கடலாடி சென்று அங்கிருந்து அடிவார மெளனகுரு
ஆசிரமம் சென்று அடிவாரத்தில் இருந்து மலை ஏறுவது இதில் பக்தர்கள் அதிகம்பயன்படுத்துவது தென்மாதி மங்கலம் வழியாகும் .

தென் கயிலாயம் என போற்றப்படும் பர்வதமலை புராணகாலத்திய திருக்கோவிலாகும் .தென்மாதி மங்கலம்  வழியாக சென்றால் 1கி.மீ அடிவாரத்தை அடைந்து 7 முனிஷ்வரர்களை தரிசித்து


பின் பச்சியம்மன்,வீரபத்திரர்,ஆஞ்சநேயர் தரிசித்து 1250படிக்கட்டுபாதைகள்
கடந்து சென்றால் மலைப்பாதையின் கடலாடி வழியாக வரும்பாதையும் இணைந்து  திருக்கோவில் செல்லலாம் .

சுமார் 2000ஆண்டுக்கு முன் இப்பகுதியை ஆண்ட நன்னன் என்ற மன்னரால் கட்டப்பட்ட அழகிய திருக்கோவிலாகும் பாகம் 2 ல்
காண்க

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...