Saturday, March 23, 2013

ஸ்ரீ தோபா சுவாமிகள் ஸ்தல வரலாறு பாகம் 3

                             ஸ்ரீ தோபா சுவாமிகள் அதிஷ்டானம் 

தூயபுகழ் வேலைநகர் தோபாசுவாமிதனை,
நேயமுடன் போற்றினோர் நீடுலகில்- நோயகன்று,
எல்லா நலன்களும் எய்தியே இன்புறுவர் ,
பல்லாண்டு வாழ்வர் பணைந்து.

ஸ்ரீ கிருபானந்த
வாரியார்


 சென்னையில் இருந்து பல சித்துக்களை அரங்கேற்ற தோபா
சுவாமிகளை நீண்ட தூரம் அழைத்து சென்று அமைதியாக விட்டு விட உள்ளூர்
ஆங்கிலேய அதிகாரி முடிவு செய்தார்

 ஓர் மாட்டு வண்டியை அனுப்பினார்.அவ்வாறே சென்னையில் நம் பணி முடிந்ததென உணர்ந்த தோபா சுவாமிகள் அந்த
மாட்டு வண்டியில் காஞ்சி,வாலாஜாபேட்டை. ஆற்காடு பகுதிகள் வழியே பல
ஆலயங்களை தரிசித்தும் ஆசிர்வதித்தும் போய் கொண்டு இருந்தார் .

வேலூர் என்கிற அழகிய ஊர் வந்ததுமே தோபா சுவாமிகள் கீழே குதித்து என் ஊர் வந்து விட்டது எனக்கூறி கீழே குதித்து தாம் வந்த வண்டியையும் ஆசிர்வதித்து  அனுப்பி வைத்தார் .

ஓர் முறை வேளச்சேரி என்ற கிராமத்திற்கு வந்த தோபா
சுவாமிகள் நடு நிசியில் ஓர் குயவர் வீட்டு வாசலில் திண்ணையில்
உட்கார்து கொண்டு அருட்பெரும் சோதியாய ஆன்ம ஒளிபரப்பி நின்றார் .

நடு நிசியில் அவ்வீட்டு பெண்மணி வெளியே வர தோபா சுவாமிகள் ஜோதிப்பிழம்பாக நிற்க கண்டு ஆச்சர்யத்துடன் அச்சத்துடன் உள்ளே சென்று கணவரை அழைத்து காண்பிக்க அங்கு தோபா சுவாமிகளை காணவில்லை .


தமக்கு அப்பெரியோரை காண பாக்கியமில்லையே என்று எண்ணி தேட ஆரம்பித்து அத்தம்பதிகள் ஓர் வழியாக
தோபா சுவாமிகளை சந்தித்ததனர் .

 அப்போது தோபா சுவாமிகள் உங்களுக்கு என்ன
வேண்டுமென கேட்க குழந்தைப்பேறு வேண்டுமெனக்கேட்க அதைக்கேட்ட தோபா சுவாமிகள் தம் சட்டியில் இருந்த சோற்றை அத்தம்பதிகளுக்கு கொடுத்து ஆசிர்வதித்து உண்ணச்செய்தார் .

பின் உனக்கு ஓர் மகன் பிறப்பான் அவன் சித்தனாக வளருவான் என தோபா சுவாமிகள் சந்தோஷத்துடன் அத்தம்பதிகள்  சென்றனர் . பின் அப்பெண்மணி கருவுற்று ஓர் மகனைப்பெற்றார் .

அக்குழந்தை பின்னாளில் துறவறமடைந்து "ஏகாம்பரசிவயோகி" என்ற
திருநாமத்துடன் விளங்கி முக்கி அடைந்தாராம் . இப்படி பல அற்புதங்கள்
சித்துக்கள் வேலூரில் 12 ஆண்டுகளாக பல இடங்களில் சித்துக்கள் செய்து
கொண்டிருந்த சமயத்தில் தம் சீடராக சித்த நாத சுவாமிகளை
ஏற்றுக்கொண்டார் .

இவரே தற்போதுள்ள மடத்தின் முதல் மடாதிபதியாவார் . தம்
சீடர் சித்த நாத சுவாமிகளை அழைத்து தாம் ஜீவசமாதி அடையபோகிறேன் அதற்கான ஏற்பாடுகள் செய்ய கட்டளையிட்டு தம் சக்தியை இங்குள்ள சிவலிங்கத்தில்  ஏற்றிவிட்டேன் .

இனிமேல் இச்சிவலிங்கமே தோபா சுவாமியாகும் எனக்கூறி
தம் சீடர் சித்த நாத சுவாமிகள் அமைத்த ஜீவசமாதி குகைக்குள் சென்று
பத்மாசனத்தில் அமர்ந்து ஸ்ரீ தோபா சுவாமிகள் ஜீவ சமாதியானார் . ஏராளமான
அன்பர்கள் சிவனடியார்கள் புடை சூழ தேவார திருப்பதிகள் பாடி தோபா
சுவாமிகளை அபிஷேகித்து அக்குகைய மூடினர் .

ஸ்ரீதோபா சுவாமிகள் கூறியது  போல ஓர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து அத்திருக்கோவில் குட முழுக்கு
நன்னீராட்டு விழா நடந்தது .

கி.பி 1850ஆம் ஆண்டு பங்குனி திங்கள் 27 ஆம்
நாள் புதன்கிழமை பிரதமைதிதி ரேவதி நட்சத்திரத்தில் ஸ்ரீ தோபா சுவாமிகள்
ஜீவசமாதியானார் . இந்த ஜீவ சமாதி வேலூர் சைதாப்பேட்டை 209 மெயின்பஜார்  ரோட்டில் ஸ்ரீ தோபா சுவாமிகள் மடம் எனக்கேட்டால் கூறுவார்கள் .


குழந்தைப்பேறு இல்லாமை உள்ளிட்ட வாழ்வில் எண்ணற்ற கவலைகள் தீர்க்கும் அருமருந்து ஸ்ரீ தோபாசுவாமிகள் ஜீவசமாதியாகும் முடிவுரை: ஸ்ரீ தோபா சுவாமிகள் பற்றி எழுதிக்கொண்டே போகலாம் .

பல சித்துக்கள் மகிமைகள் கொண்டஅவரைப்பற்றி எழுத வாய்ப்பு மற்றும் புத்தகங்கள் படங்கள் அளித்த மலேசிய  நன்பர்

 திரு .இறைவனடி யுவராஜா அவர்களுக்கும்

இந்த அரிய அதிஷ்டானத்தை
பாதுகாக்கிற 8 வது மடாதிபதிகள் திருவாளர் தேவானந்த சுவாமிகள்

 ஸ்ரீதோபா சுவாமிகள் மடம் ஆகியோர்க்கும் நன்றியையூம் வணக்கத்தையும்
உரித்தாக்கி இடுகையை முடிக்கிறேன் .

நன்றி . ஓம் சிவாய நமஹ

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...