Wednesday, May 16, 2012
பழமுதிர்சோலையின் அழகிய நூபுரகங்கை தீர்த்தம்
நூபுரகங்கை தீர்த்தம் :
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் அழகர் மலையில் முருகரின் ஆறாம் படை வீடான பழமுதிர்சோலையும் ஒன்று .பழமுதிர்ச்சோலைக்கு வரும் பக்தர்கள் குளிக்க இயற்கையாகவே முருகப்பெருமானால் உருவாக்கப்பெற்ற கங்கையாக நூபுரகங்கை தீர்த்தம் விளங்குகிறது.
வருடம் முழுவதும் மூலிகைகள் கலந்து வரும் நூபுரகங்கை தீர்த்ததில் நீராடுவதால் பல தோஷங்கள் நிவர்த்தியாகி நம் உடல் புனிதத்துவம் பெற்று ஆரோக்கியமாவது உறுதி. திருக்கோவில் ஊழியர்களால் வரிசையாக டிக்கெட் கொடுக்கப்பட்டு வாளியில் விரும்பும் அளவிற்கு ஊற்றுகிறார்கள் . மிகுந்த சுவையுடைய நூபுர கங்கை தீர்த்தத்தை பலர் வீட்டிற்கு எடுத்துச்செல்கிறார்கள் .
அருணகிரி நாதர்பாடல் :
சோலைமலை என அழைக்கப்படும் பழமுதிர்ச்சோலையில் இருந்து சுமார் 500அடி தூரத்தில் இருக்கும் நூபுரகங்கை தீர்த்தத்தை அருணகிரிநாதர் தமது சோலைமலை திருப்புகழில்
" ஆயிர முகங்கன் கொண்ட நூபுர மிரங்கு கங்கை"
என்று வர்ணிக்கிறார் .இதன் பொருள் ஆயிரம் முகங்கள் கொண்ட நூபுரம் இறங்கும் கங்கை எனலாம் . பாட்டுச்சித்தர் ஸ்ரீ முருகப்பெருமானின் பூரண அருட்கடாச்சம் பெற்ற ஸ்ரீ அருணகிரி நாதரே சொன்ன பிறகு அதன் மகத்துவத்தை நாம் உணரவேண்டும் .
மிகவும் பழமை பொருந்திய நூபுரகங்கைக்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. நூபுரகங்கை தீர்த்தத்தில் பல நோய் தீர்க்கும் காரணிகள் மூலிகைகள் உள்ளதாக சொல்கிறார்கள் . இரும்புச்சத்தும் ,கால்சிய சத்தும் ,தாமிரசத்துக்கள் அடங்கியுள்ளதாக பலர் கருத்து . எங்கிருந்து தொடங்குகிறது என்பதே தெரியாமல் நூபுரகங்கையில் குளித்து விட்டு வந்தோம் .எமக்கு உண்மையாகவே புத்துணர்ச்சி கிடைத்ததால்தான் இந்தப்பதிவு.
நாங்கள் நன்பர்களுடன் சென்றபோது பழமுதிர்சோலையில் இறங்கி சற்றுதூரம் சென்றதும் சிறு சிறுகடைகள் சுமார் 100படிகட்டுகள் ஏறிச்சென்றால் இரண்டு விதமான டிக்கட் விற்கிறார்கள் . அதில் ஸ்பெசல் கியூவில் சென்றால் நன்றாக 15 வாளி வரை ஊற்றுகிறார்கள். நன்றாக குளிக்கலாம் . அற்புதமான இடம் .
ஸ்ரீராக்கியம்மன் சன்னதி:
ஸ்ரீ ராக்கியம்மன் சன்னதி நூபுரகங்கை தீர்த்தம் அருகில் உள்ள காக்கும் கடவுளாகும் .அம்பாளின் திருவுருவம் போல இருக்கும் சன்னதியில் தரிசித்து விட்டு சற்றே பள்ளத்தில் உள்ள நூபுரகங்கை தீர்த்தத்தை எட்டிப்பார்த்துவிட்டு அருகேயுள்ள பழமுதிர்சோலை ஸ்ரீ வள்ளி தெய்வானை உடனமர் சுப்பிரமணியரை வணங்கி விட்டு வந்தோம் .
முடிவுரை: பழமுதிர்சோலை பற்றிய முந்திய பதிவில் எப்படி பழமுதிர்சொலை செல்வது என அறிந்து கொள்ளவும் .அழகர்மலையும் ,பழமுதிர்சோலையும் நூபுரகங்கை தீர்த்தமும் மதுரை மக்களுக்கு கிடைத்த பொக்கிசங்கள் நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை
நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...
-
மனித வாழ்வில் எத்தனோயோ வரங்கள் கிடைக்கப்பெற்றாலும் குழந்தை வரம் முக்கியமானது. அதுவே நம் அடுத்த தலைமுறையின் சொத்தாகும் . குழந்தையில்லா பெண...
-
பாலமலை அருள்மிகு சித்தேஸ்வரர் திருக்கோவில் palamalai sri sidheswara temple; kolathur, ...
No comments:
Post a Comment