Wednesday, September 28, 2011

ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில். நாமக்கல்


அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில். நாமக்கல்



அஞ்சிலே ஒன்றைப்பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி அஞ்சிலே ஒன்றா றாக ஆரியர்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கை கண்டு அயலூரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக்காப்பான்..


தமிழகத்தின் வைணவ ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாகும். பெரிய ஆஞ்சநேயர் சிலையும் அதன் நேர்த்தியான வடிவமைப்பும்,காணற்கரிய ஒன்றாகும். திருக்கோவில் கும்பாபிஷேகம் 22.11.09 ல் அழகாய் செதுக்கியிருக்கிறார்கள் .சலவைக்கற்களால் உட்பிரகாரத்தை அழகு செய்துள்ளார்கள் . மூலவர் ஆஞ்சநேயர் உயரமும் அழகும் பிரமிக்க வைக்கின்றன. மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர்க்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.


அன்றைய தினம் நாமக்கல் நகரத்தில் மற்றுமல்லாது பல மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் ஏராளம்.ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவில் திறந்திருக்கும் நேரம் 06. 30 முதல் 0100 வரை 04.30 மணி 0900 வரை. ஸ்ரீ ஆஞ்சநேயர்க்கு துளசிமாலைகள் அணிவிக்கப்பட்டு அதை பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்படுகிறது. திருக்கோவிலுக்காக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நன்கொடை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலுக்கு எதிரே மிக அருகே உள்ள ஸ்ரீ ஆஞ்சநேயரால் ஸ்தாபிக்கப்பட்ட "சாலக் ராம பர்வதம்" என்னும் மலை உள்ளது .மிகப் பெரிய பாறையாக உள்ள இந்த மலையின் இருபுறங்களிலும் ஸ்ரீநாமகிரி தாயார் உடனமர் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் ஆலயமும் , ஸ்ரீ ரங்க நாயகி உடனமர் அரங்கநாதரும் அருள் பாலிக்கிறார்கள். ஸ்ரீநரசிம்ம சாமி திருக்கோவில் "குடைவரைக்கோவில்" கள் வகையை சார்ந்ததாகும் .கி.பி 8 ஆம் நூற்றாண்டில் உருவான ஸ்ரீநரசிம்மாசாமி திருக்கோவில்கள் கலைச்சிற்பங்கள் அழகானவை. பழங்காலத்தில் பல பாறைகளை மட்டும் வைத்து அழகான கோவிலை உருவாக்கிய உழைப்பும் மிக


நேர்த்தியானது
அருள்மிகு நாமகிரித்தாயார் உடனமர் ஸ்ரீநரசிம்மசாமி திருக்கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 0630 முதல் 0100 வரையிலும் மாலை 0430 முதல் இரவு 0900 மணி வரையிலும் காலை பூஜை 08.00மணிமுதல் 0930 மணிவரை இரவு பூஜை 0700 மணிக்கு தொடங்கி 0800 மணிக்கு முடியும் உச்சிகாலப்பூஜை காலை 1100 மணிக்கு துவங்கி 1230 மணிக்குமுடியும் திருமஞ்சன நேரம் காலை 1000 மணி முதல் 1130 வரை நடைபெறுகிறது.


தரிசன முறை :- முதலில் அருள்மிகு நாமகிரி தாயாரையும் வணங்கவேண்டும் ,இரண்டாவதாக அருள்மிகு லட்சுமி நரசிம்மரை வணங்கவேண்டும் மூன்றவதாக ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்கவேண்டும் நான்காவதாக மலையின் மறுபக்கம் உள்ள ஸ்ரீ ரங்கநாயகி உடனமர் ஸ்ரீ அரங்கநாதர் (கார்கோட சயனம் ) வணங்க வேண்டும். முறையான தரிசனம் செய்ய விரும்புபவர்கள் மேற்கண்ட முறைப்படி தரிசனம் செய்வதே சாலச்சிறந்தது .


ஸ்ரீ நாமகிரி தாயாரை வணங்குவதால் கலை,கல்வி,ஞானம், செல்வங்கள் கிடைக்கப்பெறும். உலகம் போற்றும் கணித மேதை ராமனுஜரின் கனவில் தோன்றி கணக்குகளுக்கு விடை தந்தருளிய தெய்வமாக இறைவி போற்றப்படுகிறது."அனந்தசாயி" ஆலயமென அழைக்கப்பெறும் அருள்மிகு அரங்கநாதர் ஆலயம் மலையின் பின்பக்கமாக உள்ளது. இதுவும் ஓர் அற்புதக் குடவரைக்கோவிலாகும்.

ஸ்ரீ அரங்கநாதர் ஆலயம் திறந்திருக்கும் நேரங்கள் காலை 0900மணி முதல் 1100 வரையிலும் மாலை 0500 மணி முதல்0700 வரையிலும் திறந்திருக்கும் . எல்லா ஆலயங்களிலும் பழங்கால சிற்பங்கள் பாதுகாக்கும் பொருட்டு நெய் தீபம் மட்டுமே ஏற்றப்படுகிறது. இறைவனை துளசி மாலைகளால் அலங்கரியுத்து வாழ்வில் செல்வச்செழிப்புடன் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்.
பழங்கால சிற்பங்களையும் திருக்கோவில்களை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்துங்கள். முடிந்தால் சிறப்பாக திருக்கோவிலை அலங்கரிக்கும் அறங்காலவர் குழுக்களிடம் நன்கொடைகளை அளித்து நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற பாரம்பரியத்தை கலைகளை உதவி செய்வோம் .
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் பற்றிய இந்த இடுகை மேலும் விரிவாக்கி 2வது பாகமாக்கி சமர்பிக்கிறேன் .நன்றிகளுடன் குரு.பழ.மாதேசு. குருவரெட்டியூர்

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...