Sunday, June 5, 2011

அருள்மிகு எமதர்மராஜா திருக்கோவில் தொப்ப பாளையம் ( thoppa palayam )








அருள்மிகு எமதர்மராஜா திருக்கோவில்


ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் அம்மாபேட்டையில் இருந்து 10 கி.மீ ல் உள்ள குருவரெட்டியூருக்கு மேற்கே 2 கி.மீட்டரில் உள்ள தொப்பபாளையம் எனும் ஊரின் வனத்தில் அமைந்துள்ளது.இங்கு மூலவராக எமதர்மராஜா அமைந்துள்ளார். இக்கோவிலை ஏமராசா என்றும் எமராசா என்றும் இப்பகுதியில் அழைக்கின்றனர்.

திருக்கோவில் தொப்பபாளையம் ஊரினுள் அமைந்துள்ளது. கோவிலின் ஸ்தலமரமாக 700 ஆண்டு பழமையான புளியமரம் அமைந்துள்ளது.இதன் அருகே வன்னி மரமும்,ஆலமரமும் மற்றும் பல மரங்களுடன் அமைதியான சூழழில் அமைந்துள்ளது சிறப்பாகும்.

ஏமதர்மராஜா கோவிலின் உள்ளே இருசியம்மன் ,இடும்பன் வீரகாரகன் குருநாதசாமி, மல்லியம்மன் ,ஐயனாரப்பன் சன்னதிகள் உள்ளது.முக அமைப்பில் இது குருநாதசாமி கோவில் போன்ற அமைப்பு உள்ளதால் இது குருநாத சாமியின் சார்புடைய கோவிலாக கருதலாம்.இங்கு பேய் பிடித்து அவதிப்படுபவர்களுக்கும் செய்வினை ,எதிரிகள் தொல்லைகளுக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது.

பிரதி வெள்ளிக்கிழமை இரவு 8.00மணிக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது .வருடத்தின் ஜீன் மாதத்தின் முதல் வாரத்தில் சார்பு கோவிலான இருசியம்மன் கோவில் உடன் எமதர்மராஜா கோவிலும் பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.அமாவசை அன்று மதியம் 1200 வரும் பக்தர்களுக்காக கற்பூர ஆராதனைபூஜை செய்யப்படுகிறது.

செய்வினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெற்றிலை,பாக்கு பழம் இரும்பு விழங்கு ஆரியவைகள் தலா 1 மற்றும் பெற்று கட்டுவர்த்தனை பூஜை செய்கிறார்கள்.இங்கு பச்சை பூஜை நம் காரியம் நிறைவேற வேண்டி, வேண்டுதல் நடந்தவர்களுக்கும், சாந்திபூஜை என்பது நமக்கு துன்பம் செய்யும் எதிரிகளை அமைதிப்படுத்தும் பூஜையாக வரும் பக்தர்களுக்காக செய்யப்படுகிறது.

கை,கால் வராமல் படுத்த படுக்கையாக கிடந்த நோயளிகள் கூட இங்கு வந்து சரியானதுண்டு.

நீங்களும் வந்து வணங்கி விட்டு உங்கள் கருத்துகளை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நட்புடன் குரு.பழ.மாதேசு

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...