Thursday, November 25, 2010

திருவண்ணாமலையில் பார்க்க வேண்டிய கோவில்; பவழக்குன்று (pavala kundru)



நமக்கு எங்கு சென்றாலும் புதிதாய் ஒர் இடத்தை கண்டு பிடித்து தரிசனம் செய்வதில் தனி ஒர் ஆர்வம்.

அப்படி திருவண்ணாமலையில் அண்ணாமலையார் உண்ணாமலையாரை தரிசித்து விட்டு தேடுகையில் தான் பவழக்குன்று பற்றி ஒர் பெட்டிக்கடை நன்பர் சொல்ல அக்கோவில் எங்குள்ளது என விசாரிக்க அக்கோவில் கிரிவலப்பாதயில் கடைசி லிங்கமான ஈசான்ய லிங்கத்தை தரிசித்து விட்டு வரும் வழியில் சின்னக்கடை தெருவில் விசாரிக்க ஒரு சிறிய வீதியின் வழியே செல்ல பவழக்குன்று உள்ளது

. சுமார் 200 படிக்கட்டுகள் ஏறினால் அங்கே காவல் துறையினர் பயன்படுத்தும் வாக்கி டாக்கி ரிப்பீட்டர் உள்ளது. அதன் அருகே மிக அழகாகவும் ரம்மியமான குட்டிமலை அது. நான் அக்கோவிலை தீபத்திருநாள் அன்று மாலை 4.00 மணிக்கு சென்றடைந்தேன்.

அளவான கூட்டம் . பழங்குன்றின் மேல் இருந்து பார்த்தால் திருவண்ணாமலை கோவில் அமைப்பும் .தீபம் ஏற்றுவதையும் தெளிவாக காண முடிகிறது. சரி இனி இறைவனையும் இறைவியையும் தரிசனம் செய்து வருவோம் என்றெண்ணி கோவிலுக்குள் நுழைந்தோம்.

அங்கே வயதான அர்சகர் ஒருவர் நம்மை வரவேற்றார். அவ்விடத்தை பற்றி அறிந்த கொஞ்சமான பக்தர்கள் விநாயர் சன்னதி. வள்ளி தெய்வானையுடன் உடனமர் முருகப்பெருமான் வெளிப்புற வாசலில் தரிசனம் செய்து நந்தீஷ்வரர் தரிசித்து மூலவர்வர்களாக அருள்பாலிபவர்கள் இறைவன் :


பவழகிரிஷ்வரர் ,அர்த்தநாரீஷ்வரர்

இறைவி: முத்தாம்பிகையையும்

வணங்கி விட்டு சற்றே கோவிலில் இளைப்பாறி இவ்விடத்தின் சிறப்பை அர்ச்கரிடம் கேட்க அவர் கோவிலின் உட்பகுதியில் சிறிய அறை அதில் படுத்தவாறு தான் உள்நுழைய முடியும். அங்கு ரமணர் தியானம் செய்த இடத்தை காட்டினார்.

அட நமக்கு மட்டும் அதிஷ்டம் தான் உள்ளே நுழைந்த நான் அவ்விடத்தை பார்த்த நான் அசந்து தான் போனேன். அழகான அமைதியான இடம் .

எவ்வளவு பெரிய மகான் தியானம் செய்த இடம் நமக்கு பார்க்க வாய்ப்பு கிடைத்து அதில் 5 நிமிடம் உட்கார்ந்து வர வாய்ப்பு கிடைத்தில் பெருமிதம் அடைந்து அர்ச்சகருக்கு நன்றி சொல்லி வெளியில் வந்து திருவண்ணாமலையின் கோபுரங்கள் தரிசித்து விட்டு அக்கோவிலின் பின்புறமுள்ள பெரிய பாறையில் உட்கார்ந்து

மாலை 6.00 மணிக்கு ஏற்றிய தீபத்தை சிவநாமத்தை சொல்லி தரிசித்து விட்டு தெளிவாக தீபத்தை தரிசனம் திருப்தியுடன் அங்கிருந்து கிளம்பினேன்.

பவழக்குன்றின் மிக முக்கிய சிறப்பம்சங்கள் :
அன்னை பார்வதி தவம் புரிந்து அருணாசலேஷ்வருடன் ஐக்கியமானதும், கெளமர் பகவான் ரமணர் மற்றும் பல மகரிஷிகளும் வசித்த புனிதமான இடம் இப்பவழக்குன்று. இங்கு தான் ரமண மகரிஷிகள் தனது முதல் உபதேசத்தை அன்னை அழகம்மையாருக்கு இப்பவழக்குன்றில் 1899 ஆம் ஆண்டில் அருளியதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.


அவர் அருளிய குறிப்பு ;

" அவரவர் பிராப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பான், என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது ; 

 நடப்பது என் தடை செய்யினும் நில்லாது. 

இதுவே திண்ணம். ஆதலின் மௌனமாய் இருக்கை நன்று..



ரமணாஸிரமத்தின் மூலம் இப்பவழக்குன்று கோவில் 27. 8.2004 ல் கும்பாபிசேகம் செய்யப்பட்டது. அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.


PAVALAKUNDRU ,THIRUVANNAMALAI LORD:
pavalagiriswarar, arthanariswarar MOTHER: muthambikai. MOTHER parvathi did PENANCE in this PAVALAKUNDRU (coral rock ) and was obsorbed in to ARUNACHALALESWARA , gomthama maharshi.bagavan RAMANA and many other also sactified the place.

எமக்கு அறிந்த வகையில் தகவல்களை தேடியும் சேகரித்தும் உங்களுக்கு பவழக்குன்றினை பற்றி அளித்துள்ளேன்.

 ஓர் சிறிய புராணக்கதை :

திருக்கயிலாயத்தில் பார்வதி தேவி ஒருநாள் விளையாட்டாக சிவபெருமானின் கண்களை பொத்திக்கொள்ள உலகம் முழுவதும் இருண்டுபோனது. அதனால் உலகத்தில் உள்ள உயிர்கள் துன்பத்திற்கு உள்ளானது. அந்தப்பாவத்தை போக்கிக்கொள்ள அம்பிகை காஞ்சிபுரம் சென்று சிவபெருமானை நினைத்து தவம் இருந்தார் .அப்போது சிவபெருமான் தோன்றி திருவண்ணாமலை சென்று தவம் செய்யும்படி கூறினார் .

 அதன்படி பார்வதி தேவி திருவண்ணாமலை வந்து "பவழக்குன்று" மலையில் பர்ணசாலை அமைத்து கவுதம முனிவர் உதவியுடன் தவம் இருந்தார் 


.கார்த்திகை பரணி நாளில் பிரதோஷ நேரத்தில் மலைமேல் ஜோதி உருவாக தரிசனம் கண்டுமகிழ்ந்தார்.அப்போதுசிவபெருமான் பார்வதிக்குஇடப்பாகத்தைகொடுத்துஅருளாசி வழங்கினார்.

கோவில்சிறிய அளவுதான்எனினும் மிக்கஅமைதியையும் தெளிவையும்இப்பவழக் குன்று உங்களுக்கு தரும் என்றுநம்பி இப்பயண கட்டுரையை முடிக்கிறேன்.திருவண்ணாமலையில் தரிசிக்க வேண்டிய அற்புத ஸ்தலம் இது.

உங்களுக்கும் சிவனருள் கிட்ட பவழக்குன்றை தரிசித்து விட்டு எழுதுங்கள்.

நன்றி.

3 comments:

virutcham said...

இந்த கோவில் பற்றி இப்போது தான் அறிகிறேன். அறிமுகத்துக்கு நன்றி

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

thank you

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

thank you nanpa

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...