Tuesday, November 9, 2010

கட்டுரை : என் மதிப்புமிக்க ஆசான்கள்

1988 வருடத்தில் நான் முருகேசன், ராஜ்குமார் மூன்று பேரும் மும் மூர்த்திகளாய் குருவரெட்டியூர் பள்ளியில் வலம் வந்த காலம் அது.

ஒரு கிராமத்து அரசு மேல் நிலைப்பள்ளி எப்படி அக்காலத்தில் இருந்திருக்கும் வறுமைக்கோட்டுக் கீழ் பல மாணவர்கள் படிக்க எங்கள் மூவருக்கு பள்ளி முருகேசன் ஆசிரியர் அவருக்கு சொந்த ஊர் ரெட்டிய பாளையம் அவர் தான் ஆங்கில வகுப்பு எடுப்பார்.

அவரின் ஆங்கில புலமை அபரிவிதமானது. எங்கள் டீம் பார்டர் மார்க்கை தாண்டாது. பையன் நன்றாக படிக்கட்டும் என எங்கள் மூவர் வீட்டிலும் முருகேசன் ஆசிரியரிடம் டியுசன் விட எங்கள் வீட்டிலும் முருகேசன் வீட்டிலும் டியூசன் காசு கொடுப்பது ரொம்ப சிரமப்பட்ட காலம் அது. பல மாதங்களுக்கு நானெல்லாம் டியூசன் பீஸ் கொடுத்ததே இல்லை.

ஆனால் ஒருநாள் கூட ஆசிரியர் என்னிடம் கேட்டதே இல்லை. ஆசிரியர் மனைவி கலா அக்கா பல நாள் கணக்கு பாடத்திற்காக குட்டு வாங்கியதுண்டு. அதற்கு மேல் கணக்கு பாடத்தை நன்றாக யாரேனும் சொல்லித்தர முடியுமா ? என தெரியாது. அவ்வளவு நன்றாக சொல்லி தருவார்கள் . நமக்கு தான் சுட்டு போட்டாலும் வராது.

ஒரு நாள் புது வீடு கட்டி ஆசிரியர் குடும்பத்துடன் சந்தைக்கு பக்கமா குடி போய்டார் எனக்கெல்லாம் கஷ்டாமா போய்டுச்சி. ஆனா டியூசன் அரசமரத்து வீதீலயே தான் இருந்துச்சி. 9வது 10 வதும் அவர்கிட்டயே தான் டியுசன் அப்புறம் நாங்க 3 பேரும் 60 சதவீதம் மார்க் எடுக்கிற அளவுக்கு தயாராய்டோம் எங்க டீம்ல சம்பத் மட்டும் சேரமாட்டான்.

எங்களுக்கு கொஞ்ச நாள்ல டியுசன் சென்டரை நைட் டியூசன் சென்டரா மாத்தி எங்க வீதி பசங்களுக்கு உதவி செஞ்சாரு அப்ப நானு, முருகேசன் , ராஜ்குமார் .நியோ சர்ச் தர்சீஸ் தெய்வம் சீனிவாசன் முருகேசன் ஆசிரியர் பொண்ணு கோமதி எல்லாம் படிப்போம் .10வது படிக்கிறப்ப அவர் செஞ்ச உதவி மகத்தானது, அந்த உதவிதான் என்னை 65 சதவீதம் எடுக்க கூடிய மாணவனா என்னை உயரத்திச்சு.

இப்ப 15 வருடம் கழிச்சு திரும்பி பாக்கிறப்ப நான் நல்ல அரசு வேலையில இருக்கேன். முருகேசன் எல்.ஐ.சி ஏஜென்டா நல்ல நிலைமயில இருக்கான் .சம்பத்தும் ராஜாவும் நல்ல நிலையில இருக்காங்க . தர்சீஸ் டாக்டராகி சேவை பண்ணிட்டு இருக்கான்.


போன வருடம் வரைக்கும் என் ஆசான் இருந்த திரு. முருகேசன் ஆசிரியர் சென்ற வருடத்தில் திடிரென உடல் நிலை மோசமாகி இறந்துவிட்டதை எல்.ஐ.சி முருகேசன் தான் போன் பண்ணி சொன்னான். எனக்கு மனதை உலுக்கி எடுத்த மறைவு அது.

உடலை பார்த்து அழ வாய்ப்பு இல்லாமல் 2ஆம் நாள் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு வந்தேன் பல தீபங்கள் ஏற்றி வைத்த ஒரு அகல் விளக்கு அணைந்து விட்டது மிக்க வருத்தமே. அந்த உடல் மறைந்தாலும் அந்த ஆன்மா எங்களை விட்டு மறையாது.


ஒரு மாணவனாய் அவர்க்கு எந்த கைமாறும் நான் செய்ய வில்லை. ஒரு ஆசானாய் எங்கள் வாழ்வை உயர்த்திய முருகேசன் ஆசிரியருக்கும் ,
எனது அரசு மேல்நிலைப்பள்ளி. குருவைக்கும்(g.h.s.school,guruvareddiyur-638504) எனது வணக்கத்தை தெரிவித்து

என் மற்ற ஆசான்கள் திரு.மோகனகாந்தி,

திரு ஜெகதீசன் ,திரு தங்கவேலு, சீ.கே என அழைக்கப்படும் சிஃகுழந்தையப்பன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்து இடுகையை முடிக்கிறேன். நன்றி

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...