Tuesday, November 9, 2010

என் குரு எழுத்துச்சித்தர் பாலகுமாரன்


புத்தகம் படிப்பது சிறு வயதிலிருந்தே எனக்கு பிடித்த ஒன்று.

எனக்கு சிறு வயதிலிருத்தே தினகரன் பேப்பரையும். தினமலர் சிறுவர் மலரையும் படித்துதான் தமிழ் கற்றுக்கொண்டேன் என்பதே உண்மை அதற்காக என் தகப்பனாருக்கும் என் ராஜா அண்ணாவுக்கும் நன்றி சொல்லவேண்டும் .

என் 16 வயதில் கடுமையான கஷ்டங்களிலும் மன உளைச்சலிலும் திரிந்த போது எனக்கு என் மூர்த்தி அண்ணா கொடுத்த உதவிய பாலகுமாரன் புத்தகங்கள் அகல்யா,எட்ட நின்று சுட்ட நிலா. திருப்பூந்துருத்தி, இனிது இனிது காதல் இனிது. இப்படி பல பாலகுமாரன் புத்தகங்கள் படித்து வாழ்க்கை சூட்சமங்களை நிறைய அறிந்த கொள்ள முடிந்தது.


ஆனால் இதுவரை அவருக்காக ஒரு கடிதம் கூட எழுத முடியவில்லை என்கிற ஆதங்கம் எனக்கு உண்டு பல கதைகளில் படிப்பினைகள் தெளிவாக தன் வீச்சில் எமக்கு உணர்த்திய ஆசான் அவர் .அவர் புத்தகங்கள் இன்றும் தேடி படிக்கிறேன். வாங்கி சேமிக்கிறேன். பலருக்கும் கொடுத்து அறிமுகப்படித்தி இருக்கிறேன்.

எழுத்துச்சித்தர் பாலகுமாரன் குருவாக ஏற்றுக்கொண்டது 18 வயதிலிந்து தான். அவருக்கு ஒரு குரு உண்டு என அவர் அடிக்கடி சொல்லும் யோகி ராம் சுரத்குமார் அவர் திருவண்ணாமலை வாழ்ந்த யோகி அவரையும் எனக்கு பிடிக்கும் .

எழுத்துச்சித்தர் பாலகுமாரன் பிடிக்கும் என்பதாலும் அவருக்கு குருவான யோகி ராம் சுரத்குமாரின் படம் என் வலைப்பக்கத்தின் முகப்பை அலங்கரிக்க விட்டுள்ளேன்.


நீங்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவராக இருப்பின் அல்லது மற்ற புத்தங்கள் வாசிப்பவராக இருப்பின் பாலகுமாரன் புத்தகங்களையும் தொட்டு விட்டுச் செல்லுங்கள்.


என்றாவது ஒரு நாள் எழுத்துச்சித்தர் பாலகுமாரனை பார்க்கவேண்டும் என விருப்பம்

.அப்படி ஒரு நாள் சந்தித்து விட்டு வரும்போது '
பின்னொரு நாளில் விரிவாய் எழுதுகிறேன்.
நன்றி.

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...