Saturday, January 26, 2013

ஸ்ரீமாசாணி அம்மன் தரிசனம்

ஸ்ரீ மாசாணி அம்மன் தரிசனம் மூலவர் ஸ்ரீ மாசாணி அம்மன் அமைவிடம் :


பொள்ளாச்சியில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஆனைமலை என்ற ஊரில்இருந்து திருச்சூர் நெடுஞ்சாலையில் ஆனைமலை பிரிவு வந்து சேத்துமடைசெல்லும் வழியில் ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது .

பெண் தெய்வங்களில் உக்கிர தெய்வமாக தேவதையாக விளங்கும் ஸ்ரீ மாசாணி அம்மன்ஆதிமகாசக்தி அம்சமாக ஈஸ்வரியின் அம்சமாக திகழும் அற்புத தெய்வமாகும் .

திருக்கோவில் மூலவர் அமைப்பு :

 மயான தேவதையாக படுத்திருக்கும் கோலத்தில்
காட்சி தருகிறது.

 பெரிய கண்கள் உருவமைப்புடன் 15 அடிக்கு மேலான பெண்
தெய்வம் வானத்தை பார்த்தவாறு படுத்திருக்கிறார் .வாரநாட்களில்
அம்மிகைக்குரிய செவ்வாய் ,வெள்ளி, அமாவசை விசேசநாட்கள் ஆகும் .

வருடவிழா தைமாதம் அமாவசையில் துவங்கி 17நாட்கள் நடைபெறும்

. காலை
6 மணிமுதல் இரவு 8 மணிவரை பூஜை நடந்து கொண்டே இருக்கிறது.

நீதிக்கல் :

செய்வினை,பில்லி. சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ,தமக்கு
எதிரிகளால் ஆபத்து எனில் ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில் வந்து தமது
எதிரிக்காக மிளகாய் வற்றலை வாங்கி இங்குள்ள உரலில் ஆட்டி நீதிக்கல்லில் தேய்து விட்டு வரேண்டும்.

பின் நினைத்தது நடந்திட்ட பின் அம்பிகேயை குளிர வைக்க தூய நல்லெண்ணெய் காப்பு செய்து அம்பாளை குளிர வைக்கவேண்டும் .
புலிப்பாணி சித்தர் மாசாணி அம்பாளை புகழ் பாடியுள்ளார் .

 உயந்த ராஜகோபுரம் அமைந்துள்ளது. வழியெங்கிலும் கடைகள் இடைவிடாது பக்தர்கள் வருகெயன ஆனைமலை ஸ்ரீ மாசாணி அம்மன் திருக்கோவில்பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

 மாசாணி அம்மன் பற்றி பல ஸ்தல விளக்கங்களுடன் பின்னால்
பகிர்கிறேன் .நன்றி

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...