Sunday, June 10, 2012

நட்பே நலமா.!


பிரியமிகு நட்பே.. !!

ஆயிரமாயிரம் சோதனைகள்
கடந்து வந்திருக்கும்
நம் நட்பு...!

உனக்கு கணவனும்
எனக்கு மனைவியுமாய்
வந்து நாம் விரும்பிய
வாழ்வை மலர வைத்திருக்கலாம் ..!

பதினாறு பக்கங்களாக
நட்பை பலமாக்கிய
நம் கடிதங்களின்
நட்பை யாரும்
புரியாமலிருக்கலாம் .,!

காலம் ,
நேரமின்மை
உன் குழந்தைகளால்
நம் நட்பை வளப்படுத்த
முடியாமையால் தவறிப் போயிருக்கலாம் .!

இழந்த போன நட்பே.. !
எனக்காக நீ
அனுப்ப வேண்டியது
மடல் மட்டுமல்ல ..!
நீ மறந்த நம் நட்பின்
பசுமையான
நினைவுகளையும் தான் ..!

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...