Friday, June 1, 2012

அன்னதானம்



பல்வகையான தானங்கள் நம் முன்னோர்கள் இயம்பி விட்டுச்சென்றுள்ளார்கள் . அதில் முதன்மையானது அன்னதானம் . உயிர்கள் வாழ அடிப்படையானது உணவு.உயிர் உணவை ஆதாரமாகக்கொண்டது. ஆக உணவு கொடுத்தவன் உயிர் கொடுத்ததற்கு ஒப்பானவன் ஆகிறான் .

ஒருவன் தன் உயர்வுக்கு எப்போதும் அன்னத்தை தாணமாக கொடுத்தல் வேண்டும் . அப்போதே சராசரி மனிதரிடத்தில் இருந்து வேறுபட்டு உயர்ந்த மதிப்புமிக்க மனிதனாகிறான் .

சரி அன்னதானம் செய்பும் முடிவிற்கு வந்தாயிற்று அதற்கு எந்த திருக்கோவிலில் அன்னதானம் இட்டால் உயர்வான பலன் கிட்டுமென பலங்கால நூல்கள் என்ன சொல்கின்றது.

அன்னதானத்தால் உயர்வான பலன் கிட்ட :

பிற திருக்கோவில்களில் லட்சம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியம் காசியில் ஒருவருக்கு அன்னதானம் செய்த பலனும் ,

புண்ணிய பூமியான காசியில் ஒருகோடி பேருக்கு அன்னதானம் இட்ட பலன் திருவண்ணாமலையில் ஒருவர்க்கு இட்டதற்கு சமமாகும் . திருவண்ணாமலையில் செய்யும் அன்னதானத்திற்கு சமமான பலன் இல்லை. அதிலும் துவாதசி திதியில் அன்னதானம் செய்வது மிக விஷேசமாகும் என சிவமகாபுராணம் உண்மையாகும் .

வேறுவகை அன்னதானங்கள் : எறும்புகளுக்கு அரிசி கோலத்தால் கோலமிட்டு உணவிடுவது. பசுக்களுக்கு அகத்திக்கீரை,புல்,பழம் கொடுப்பதால் பல தோஷங்கள் நிவர்த்தியாகிறதாம் .

முடிவுரை :

அருணாசல மகா சிவபுராணம் உணர்த்துகிற துவாதசி நாளில் முடிந்தவரையில் யாரேனும் ஒருவருக்காவது திருவண்ணாமலையில் அன்னதானம் செய்து சொர்க்கத்தில் இடம் பிடிப்போம். அப்படி முடியாதபோது நமது ஊர்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்கள் ,கும்பாபிஷேகங்களில் அன்னத்தை தானமாக கொடுப்போம் .

போதும் போதும் என மனிதனை மன நிறைவு செய்வது அன்னதானம் மட்டும் தானே.. ! நன்றி

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...