Thursday, November 20, 2014

சைவ உணவின் மேன்மை

சித்தர்களும் மகான்களும் , உயிர்கொலையை அறவே வெறுத்தார்கள் . ஓர்
உயிரைக்கொன்று தின்பதால் அதன் உயிர்வலி அதை சாப்பிடும் மனிதர்களுக்கு
நோயாக தாக்குவதும் உண்மையே . உயிரைக்கொல்லாது சைவ உணவு சாப்பிடுபவர் பலர் நீண்ட ஆரோக்கியத்துடன் காண முடிகிறது . ஆனால் இன்றோ குடியும் அசைவ உணவும் மனிதனின் அன்றாட தேவையாகிவிட்டது .

45 வயதிற்குள்ளாகவே கொடிய நோய்கள் தாக்குவதற்கு அசைவ உணவை அதிகம் புசிப்பதே காரணமாகும் . அப்ப சைவம் சாப்பிட்டால் நோயே வராதா என விதண்டாவாதம் பேசக்கூடாது .சித்தர்கள் உப்பை வறுத்தும் புளியை சுட்டும் சாப்பிட சொன்னார்கள் . நவநாகரீக உலகில் நுழைந்து பழையன எல்லாம் தொலைத்து விட்டோம் .

 உண்ணும் உணவே விஷமென எல்லோரும் பேசுவதை கேட்க முடிகிறது . இன்றைய சூழலில்எல்லாமும் விஷமாகிவிட்டதென பழமையை தேடி ஓடுகிறார்கள் மக்கள் . இது நல்ல விஷயம் கி.பி 1500 முன் தொலைத்த நம் பாரம்பரியத்தை சித்தர்கள் எழுதிய புத்தகங்கள் , சித்தர்கள் தேடல் என இன்றைய மக்களின் சித்தர்களின் தேடல்மிக நல்ல விஷயம் .

 சித்தர்கள் கலையில் ஜோதிடம் ,மாந்திரிகம் ,மருத்துவம்
என எதைப்பயின்றாலும் அசைவ உணவு தவிர்த்தால் சித்தர்கள் கலையில்
மேன்மையுறுவது எளிது.




 கங்கையில் படிந்திட்டாலும் கடவுளை பூசித்தாலும்
மங்குற்போல் கோடிதானம் வள்ளலாய் வழங்கினாலும்.
சங்கையில்லாத ஞானசாத்திர முணர்ந்திட்டாலும் .
பொங்குறும் புலால் புசிப்போன் போய்நரகடைவானானன்றே .

 கலையொலாமுணர்ந்தானேனும் கரிசற தெரிந்தானேனும் ,
மலையெனஉயர்ந்தானேனும் மன இயல் அகன்றானேனும் ,
 உலகமெலாம் புகழ்ப் பல்லோர்க்குகுதவிய கையனேனும் ,
இலகிய இரக்கம் இன்றேல் எழுநரகடைவானற்றே ,


இத்திரனருள் கைப்பற்றி உயிர்க்கெலாம் இதத்தைச்செய்க ,
 சத்திய இரக்கம்இன்றேல் முத்தியை சார்கிலார் - சற் , பக்தியால்
 யோகம்சாரும் யோகத்தால் பரம் ஞானம் சித்தியாம் ,
 இதற்காதாரம் ஜீவகாருண்யம் அன்றே ,

                   
                                                                                                                                                                                                                                                                                                                                                       நன்றி

                                                               பஞ்சாட்சர பதி பசு பாச விளக்கம்


 பொல்லாப் புலாலை நுகரும் புலையரை,
எல்லாரும் காண இயமன்றன் தூதுவர் ,
செல்லாகப் பற்றி தீவாய் நரகத்தின்
மல்லாகத் தள்ளி மறித்து வைப்பாரே

                                                                        திருமூலர் திருமந்திரம்

 இந்த
பாடல்களுக்கு விளக்கம் தேவையில்லை ! இரண்டாம் பாடலில் அசைவம் தின்போரைபுலையன் என திட்டுகிற திருமூலர் மாமிசம் உண்போரை எமன் தூதுவர் வந்து அழைத்துச்செல்வர் என்கிறார் . இந்த காலத்தில் உண்மையான நரகம் என்பதுநோய்தான் ,

அசைவ உணவு , மசாலா உணவுகள் அஜினோ மோட்டா உணவுகள் ,
செரிக்காத புரோட்டா உணவுகள் தவிர்த்து காய்கறி ,கீரைகள் சாப்பிடுதல்
நலம் . அதே போல மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்கவேண்டாமென திருமூலர் சொல்கிறார் .

 மனம் செம்மையாக முதல் படியே அசைவ உணவு
தவிர்ப்பதுதான் . மிருகத்தை தின்றால் மிருக உணர்ச்சியே வரும் . மானிட
உணர்வும், மனம் செம்மையாக ஆகவேண்டுமெனில் சைவத்தில் இருங்கள் .


உயிரைக்கொல்லக்கூடாது , அதை சாப்பிடக்கூடாது என விரும்பிய மகான்
திருவள்ளுவர் புலால் மறுத்தல், கொல்லமை என இரு அதிகாரங்கள் திருக்குறளில்எழுதினார் .

 தன்ஊண் பெருக்கற்குத் தான்பிறிதூன் உண்பானை
எங்ஙனம்ஆளும் அருள்

                                                                26 அதிகாரம் புலால் மறுத்தல் 251

 தன் உடம்பைபெருக்க அசைவ உணவு உண்பவர்க்கு அருள் எங்கிருந்து கிட்டும் , அருள்என்பது இறையருளாகவும் அது அசைவ உணவு உண்போர்க்கு கிட்டாது என்றும்வினவுகிறார் 

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
 எல்லா உயிரும் தொழும் .

                                                         குறள் 260ல் 26வது அதிகாரம் புலால் மறுத்தல்

 பொருள்உயிர்க்கொலை செய்யாமல் , அதை கொன்று உண்ணாதவனை கை கூப்பி எல்லா உயிரும்தொழும் என்கிறார் . எல்லா உயிரும் தொழுமென்றால் உயர்ந்த யோகியாய் மனிதன் அசைவத்தை விட்டதும் மாறுகிறான் என்றே தோணுகிறது . திருவள்ளுவர் 33 வது அதிகாரத்தில் கொல்லாமை யின் அவசியத்தை பாடி இருக்கிறார் .

 ஓன்றாகநல்லது கொல்லாமை மற்றதன்
 பின்சாரப் பொய்யாமை நன்று

                                                                                                    குறள் 323

உயிரைக்கொல்லாது இருத்தலே உயர்ந்த அறம் இரண்டவதாக உண்மை பேசுதல் நல்அறம் என்கிறார் . உயர்ந்த அறம் உயிர் கொல்லாமை என்கிறார் .




தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறி
 தின்னுயிர் நீக்கும் வினை

                                                                                                  குறள் 327

பொருள் : தன் உயிரே போவதாக இருந்தாலும் மற்ற உயிரை போக்குதல் கூடாது அது கொடும் பாவம் என்கிறார் .


 இப்படி பல மேற்கோள்கள் சித்தர்
பெருமக்கள் பாடியுள்ளார்கள் . அதையெல்லாம் விட்டு அசைவத்தை உண்பதால் பல நோய்கள் உருவாகிறது .


 முடிவுரை :

 எல்லாவற்றிக்கும் ஓர் அதிகாரம் எழுதிய திருவள்ளுவரே 2 அதிகாரம் எழுதியுள்ளார் எனில் சைவத்தின் மேன்மையை
உணருங்கள் . கடைசியா வாழ்ந்த வள்ளலார் காட்டிய ஜீவகாருண்ய வழியில்
பயணியுங்கள் . நோயில்லாமல் வாழலாம் , அசைவம் உண்பதில்லை என மன உறுதிகொள்ளுங்கள் .

பல ஆலயங்கள் தரிசித்தும் ஒன்றும் ஜெயிக்க முடியவில்லை
என்பதற்கு காரணம் அசைவ உணவு உண்பதே . இது என் தனிப்பட்ட ஆய்வே தவிரவேதவாக்கு அல்ல . இறைவன் படைத்தது எல்லாம் சாப்பிடதானே என்கிறசமாதானத்தை ஏற்க முடியாது .

முட்டை அசைவமே 40நாளில் குஞ்சு பொறிக்கிற
ஒன்று எப்படி சைவமாகும் . சைவமாக மாறுவதெனில் முழுக்க மாறுங்கள் . அது தவிர்த்து அசைவம் உண்டு விட்டு யோக பள்ளிக்கு செல்கிறார்கள் .தியானம்கற்கிறேன் என்கிறார்கள் . தன்னை தானே ஏமாற்றி கொள்வது இது ..
உயிர்கொலை புரியாது , புலால் உண்ணாது சைவத்தில் இருங்கள் .

இறையருளும கிரகங்களும் உங்களுக்கு நல்லதையே செய்யும் என்பது என் கருத்து .சித்தர்கள் சொல்லிவிட்டு சென்ற சைவ உணவை உண்ணுங்கள் . மனம் செம்மையாகி மேன்மை அடைவீர்கள் . இது என் தனிப்பட்ட கருத்தே அன்றி இதில் பலருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம் .

 கடந்த 1 வருமாக அடியேன் அசைவத்தை விட்டு
விட்டேன் . மனது தெளிவாக உள்ளது . நல்ல விஷயமென உங்களுக்கு தோன்றினால்சைவத்திற்கு மாறிக்கொள்ளுங்கள் . ஏனெனில் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

. நன்றி .

 ஒம் சிவ சிவ ஓம் .

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...