Thursday, June 19, 2014

Fwd: ஸ்ரீ கற்பகாம்பாள் உடனமர் ஸ்ரீ கபாலீஷ்வரர் திருக்கோவில் ,மயிலாப்பூர் , சென்னை

 ஸ்ரீ கற்பகாம்பாள் உடனமர் ஸ்ரீ கபாலீஷ்வரர் திருக்கோவில்

                           ,மயிலாப்பூர் ,

 இறைவன் : ஸ்ரீகபாலீஷ்வரர் 

அம்பிகை :கற்பகாம்பாள் 


 தமிழகத்தின் தேவாரப் புகழ் பெற்ற
திருத்தலங்களில் திருமயிலையில் அமைந்துள்ள ஸ்ரீ கபாலீஷ்வரர்
திருக்கோவிலும் ஒன்று .

திருக்கோவில் ஸ்தலமரமாக புன்னை மரமும் கோவில்
முன்னே அழகிய கபாலி தீர்த்தமும் அழகே அமைந்துள்ளன . சுமார் 2000
வருடங்கள் பழமையான கபாலீச்சரம் என்றும் ,திரு மயிலாப்பூர் எனஅழைக்கபடும் கபாலீஸ்வரர் திருக்கோவில் மூலவர் சுயம்பு லிங்கமாக
அருள்பாலிக்கிறார் .

 திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர் ,சுந்தரர்
ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலம் . தேவாரப் புகழ் பெற்ற தொண்டை
நாட்டின் சிவஸ்தலங்களில் 34 ஸ்தலமாக போற்றப்படுகிறது .

 திருக்கோவில்
திறப்பு காலை 05.00 மணிமுதல் 12. 30வரையிலும் ,
மாலை 04.00மணி முதல் இரவு
09.00மணி வரையிலும் திறந்திருக்கிறது .

 இங்குள்ள நர்த்தன விநாயகரும்
சிங்கார வேலரும் தரிசிக்க வேண்டிய சன்னதிகளாகும் .

 மூலவராகிய
சிவபெருமானை வணங்கினால் பிறப்பற்ற நிலை ஏற்படுமென்பது ஐதீகம் .

மானிடருக்கு மனநிம்மதி அளிப்பவராக சிவபெருமானும் , உடல் நோய்
நீக்குபவராக அம்பிகையும் விளங்குகிறார். அம்பிகை மயில் உருவம் கொண்டு
சிவனை பூஜித்த ஸ்தலமாகாகவும் ,முருகப்பெருமான் வேல் பெற்ற ஸ்தலமாகவும் ,பிரம்மா படைக்கும் ஆற்றல் பெற்ற ஸ்தலமாகவும் விளங்குவது தனிச்சிறப்பாகும்'.

 2000ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்த கிரேக்கர் தாலமி மல்லிதர்பா
என்றும் மயில் ஆர்க்கின்ற இடம் மயிலாப்பூர் என குறிப்பிடுவதிலேயே
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் மேன்மை நமக்கு புரிகிறது . இறந்த பூம்பாவையை
திருஞானசம்பந்தர் உயிருடன் எழுப்பினார் என்பது வரவாறு.

 முடிவுரை :


மேற்கு நோக்கிய சிவனை வழிபடுவது .1000 சிவனை வழிபடுவதற்கு சமமாகும் ,அவ்வகையில் திருமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவில் வந்து வணங்கி சிவபெருமானின் அருள்பெற்று உய்யுங்கள் ,நன்றி

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...