Sunday, November 3, 2013

அன்பில் கரைத்த பயணம்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தீபாவளிக்காக சொந்த ஊர் செல்ல பயணத்தை துவங்கினேன் .

பேஸ்புக்கில் பகிர்ந்ததைப்போல ஏதேனும் மாற்றுத்திறனாளிகள் மையத்தில் பண்டிகை நாளில் கழிக்க வேண்டும் என்ற ஆவலுடன் தீபாவளிக்கு முந்தைய நாள் மதியம் பயணித்து 2 கிலோ ஜிலேபியுடன்

 கொமராபாளையத்தில் இருந்து எடப்பாடி வழியில் அமைந்துள்ள கண்பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை தொழிற்பயிற்சி மையம் சென்று அவர்களுக்கு இனிப்பைக் கொடுத்து தீபாவளி வாழ்த்துக்கள் சொன்னது நெகிழ்வான நிமிடங்கள்.

 பெரிய அளவில் 25 வருடமாக நடந்து வருகிற இந்த மையம் 165 மனித இதயங்களுடன் நடந்து வருகிறது . ஆறு விதமான பிரிவினர்கள் இங்கு பாதுகாக்கப்படுகிறார்கள் ,


 உதவ விரும்புகிறவர்கள்=


 k.கோவிந்தராஜன் 1/285
பரிசல்துறை ,புளியம்பட்டி ,
புள்ளாக்கவுண்டன்பட்டி அக்ரஹாரம் அஞ்சல்
சங்ககிரி வட்டம் சேலம் மாவட்டம்

 தொடர்புக்கு : 04288260157 ,
9362060157, 9842295560
 web :www.bfdc-trust.in

mait i.d : bftc.trusu@gamail.com

என்ற தொடர்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 மன நிறைவான சிறு உதவி . முதல் தடவையாக இப்படி ஓர் இடத்தில் நேரம் கழித்ததும் இனிப்பு தந்ததும் அவர்களுக்கு வாழ்வில் உறவுகளாக யாரோ ஒருவர் இருக்கிறார்களென்ற அர்த்தம் புரிய வைத்திருக்கும்,
 நமக்கும் கூட

முடிவுரை :

நீண்ட பயணத்தில் முக்கிய தருணமாக இதைக் கருதுகிறேன் , இனி
இவ்விடம் அடிக்கடி செல்வேன் .

 வாய்ப்பும் வளமையும் கிட்டும் வரை

நன்றி

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...