Tuesday, September 3, 2013

ஸ்ரீ முத்துமரகதவல்லி உடனமர் ஸ்ரீ மூவேந்திரசாமி திருக்கோவில்

அமைவிடம் :

 சேலத்திலிருந்து சோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்
பவானியில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் நசியனூர் பிரிவில்
நசியனூரில் திருக்கோவில் அமைந்துள்ளது

 ஈரோட்டில் இருந்து நசியனூர் 8 வதுகி. மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது .

மூலவர் :ஸ்ரீ மூவேந்திர ஈஸ்வரர்

இறைவி :ஸ்ரீ முத்து மரகத வல்லி


 புராணமும் வரலாறும் :

சேர சோழ பாண்டியமன்னர்களால் ஆளப்பட்ட தமிழகத்தின் ஓர் பகுதியாக கொங்குநாடு விளங்கியது. அது 24 சிறிய நாடுகளை கொண்டதாக பழங்காலத்தில் விளங்கியது .

மூவேந்தர்களால் காவிரி கரையில் மேற்கரையில் கரூர் பசுபதீஷ்வரர் திருக்கோவில் கட்டி குடமுழுக்கு செய்ய கலசம் வைக்க முற்பட்டபோது கலசம் நிற்காமல் போக அப்போது எதிர்பட்ட சாதுவின் ஆலோசனைப்படி கொங்கு நாட்டு வேளாண் மக்களை அழைத்துச்சென்று கலசத்தை கொடுத்து நிற்க வைக்க அதுநின்றதாம் .

 ஆதலால் மூவேந்தர்கள்களை விடபூந்துறைநாடுமேன்மையுடையதெனக்கருதி மூவேந்தர்கள் யாத்திரையின் போது பூந்துறை,எழுமாத்தூர், வெள்ளோடு ,நசியனூர் ஆகிய இடங்களுக்கு வந்து பல சிவாலயங்கள்திருப்பணி செய்தும்

 பல வைணவத்திருக்கோவில்கள் பிரதிஷ்டை செய்தும்சேர.சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்களும் வணங்கி வந்ததாக வரலாற்று
இலக்கியங்கள் நமக்கு உணர்த்தும் உண்மையாகும் .


 பழங்காலத்தில் நசையாபுரி  என்றும் இன்று நசியனூர் என்றும் அழைக்கப்படுகிற நசியனூரிலே மூவேந்தர்களாலும் திருப்பணிகள் செய்து வணங்கப்பட்டதாக வரலாறு  இயம்புகின்ற ஸ்ரீ மூவேந்திர ஈஸ்வரர் திருக்கோவில் மிக பிரசித்தி பெற்றபெரிய ஆலயமாகும் .

சிவபெருமான் கொங்கு நாட்டில் பல இடங்களில்
வீற்றிருந்தாலும் இங்கே மேற்கு நோக்கிய லிங்கமாக வீற்றிருப்பது மிக
விஷேசமாக கூறப்படுகிறது.

 உப திருக்கோவில்களான ஆதிநாரயணப்பெருமாள்
திருக்கோவிலும் அமைந்துள்ளது . சற்று தூரத்தில் ஸ்ரீ மதுரகாளியம்மன்
மற்றும் ,மாகாளி அம்மன் திருக்கோவில் அமைப்பெற்றுள்ளது .

 இங்கே
சிவாலயத்தில் மேற்கு நோக்கிய நிலையில் அருள்பாலிக்கிற அம்பிகை முத்து
மரகதவல்லியின் கனிவான பார்வை கண்டு பெறும் பேறு பெறலாம்.

 ஸ்ரீ
மாகாளியம்மன் வடக்கு திசை நோக்கி அமைந்துள்ளது . கொங்கு
வேளார்ளர்களில் கண்ணன் ,பூச்சந்தை,கூறை,செம்பன் ,ஈஞ்சன் ,கீரை,பாண்டியன்ஆகிய ஏழு குலத்திற்கும் காக்கும் கடவுளாகவும் குலதெய்வமாகவும் வணங்கி வருகிறார்கள் .

திருக்கோவில் வளாகத்தில் தெய்வச்சேக்கிழார் ,நால்வர் ,
வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர் ,சூரிய,சந்திரர்கள் ஸ்ரீ தேவி
பூதேவி அம்பிகைகள் சன்னதீ ,ஸ்ரீ ஆதிநாராயணப்பெருமாள் சன்னதி . ஸ்ரீ
ஆஞ்சநேயர் சன்னதிகள் கருடாழ்வார்,நாகர் சன்னதிகள் மற்றும்
திருக்கோவில் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் செய்து பழமைமாறாமல்
புதுமையாக்கி இருக்கிறார்கள் .

 சைவ வைணவ ஒற்றுமை கலந்த
இத்திருக்கோவில்கள் கடந்த 15.7.13 மகா கும்பாபிஷேகம்
ஆன்மீகப்பெரீயோர்களால் நிகழ்த்தப்பெற்றது .

திருக்கோவில் பழங்காலத்தியஅரசமரம் ஸ்தலமரமாக விளங்கிவருகிறது .

முடிவுரை :

 ஸ்ரீ மூவேந்திரர்களால் வணங்கப்பெற்றதால் இது 1000வருடங்கள் கடந்த சிவாலயங்களில் ஒன்றாக பெருமையும் சிறப்பையும் பெறுகிறது . ஈரோடு மாவட்டத்தில் அமைந்த பழமையான சிவாலயங்களில் ஒன்றாகவும் ,சைவ,வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகவும்
விளங்குகின்ற இப்பகுதிமக்களால் விரும்பி வணங்கப்படுகிற

மேற்கு பார்த்தஅமைப்பில் நிறைய விஷேசங்கள் கொண்ட நசியனூர் ஸ்ரீ முத்து மரகதவல்லி உடனமர் ஸ்ரீ மூவேந்திர ஈஸ்வர சுவாமியை வணங்கி எல்லா வளங்களும் நலங்களும்
பெற விழைகிறேன் .

 ஓம் சிவ சிவ ஓம்

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...