Monday, April 8, 2013

"சிவ" லிங்கமாகிய இறைவனின் வகைகள்

                          Type of sivalingam's

சிவபெருமான் சைவ உலகின் நின்று உலகின் படைத்தல் ,காத்தல் , அழித்தல்
என்கிற முத்தொழிலையும் கொண்டு சைவர்களால் விரும்பி இறைஞ்சி வேண்டுகிறவர். சிவன் எங்கும் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார் . சிவ லிங்கத்தில்  இரண்டு வகையுண்டு.

 அது பரார்த்த லிங்கம் மற்றும் இட்டலிங்கமாகும் .
பரார்த்த லிங்கத்தில் ஐந்து வகையுண்டு . அவைகள் பின் வருமாறு
குறிப்பிடப்படுகிறது.

 சுயம்பு லிங்கம் ( இருக்கும் நிலை ) : தாமாக

தோன்றிய திருவுருவங்களே சுயம்பு லிங்கங்கள் என அழைக்கப்படுகிறது.
சுயம்பாக தோன்றுகிற லிங்கத்தை சுயம்பு லிங்கமென சிவனடியார்களால் தேடி விரும்பி வணங்கப்படுகிறது.

 பல ஸ்தல புராணங்கள் காராம் பசு குறிப்பிட்ட இடத்தில் பால் செரிய அங்கே தோண்டினால் சுயம்பு லிங்கம் இருக்கும் .அதுபோல லிங்கம் சுயமாக தோன்றி மக்களால் கண்டு வணங்கப்படுகிறது . சுயம்பு லிங்கங்கள் விசேசமானதாகும்


 கணலிங்கம் :


 சிவகணங்களான ஸ்ரீவிநாயகர் ,ஸ்ரீ முருகர், ஆகியோரால்
பூஜிக்கப்பட்டு வணங்கப்படுகிற லிங்கங்கமாகும் .

 தெய்வீகலிங்கம் : (நடக்கும் நிலை ) 


விஷ்ணு முதலிய தேவாதி தேவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு
வணங்கப்பட்ட லிங்களாகும் .

 ஆரிடலிங்கம் :

அசுரர்கள் ,இருடிகள்,ராட்ஷசர்களால உருவாக்கப்பட்டு வணங்கப் பெற்ற லிங்கமாகும் 

 .

மானிடலிங்கம் : 


சித்தர்களால் ,அடியார்களால் ,இறைநிலையில் வாழ்ந்த
பெரியோர்களால் உருவாக்கம் செய்யப்பட்டு வணங்கி வந்த லிங்கம்மாகும்..

விஷேசமாக

உயர்வான லிங்கம் : 


 மானிட லிங்கத்தை விட உயர்ந்தது ஆரிடலிங்கம் ,
அதனிலும் உயர்ந்தது தெய்வீக லிங்கம் அதனினும் உயர்ந்தது கணலிங்கம்
அதனினும் உயர்ந்தது சுயம்புலிங்கமாகும் .

 இட்டலிங்கங்கள் :


 வாணலிங்கம்
.படிகலிங்கம் ,
இரத்தினலிங்கம் ,
லோக்ஜலிங்கம் ,சைல லிங்கம்
ஆகிய
ஐந்தாகும் .

 முடிவுரை :

 சிவ லிங்கமாகிய சிவபெருமானின் இந்தபதிவு என்
அளவில் சேர்த்துள்ளேன் . குறைகள் இருப்பின் ஆன்மீகப் பெரியோர்கள்
சுட்டிக்காட்டலில் திருத்தப்படும் . மற்றபடி எம் பதிவை படிக்க வந்த
உங்களுக்கு சிவனருள் கிட்ட வேண்டுகிறேன் .

 நன்றிகளாயிரம் .

 ஓம் சிவசிவ
ஓம்

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...