Wednesday, August 8, 2012

ஸ்ரீ கொன்னைமரத்தையன் திருக்கோவில், அந்தியூர்


SRI KONNAMARATHI AYYAN TIRUKKOVIL ANTHIYUR


அந்தியூர் ஸ்ரீ குருநாத சாமி (SRI GURUNATHA SAMY TEMPLE ., ANTHIYUR திருக்கோவிலின் உப கோவிலான ஸ்ரீ கொன்னைமரத்தையன் திருக்கோவில் விஷேசமானது . இத்திருக்கோவில் அந்தியூர் இருந்து பர்கூர் செல்லும் வழியில் புதுப்பாளையம் குருநாதசாமி திருக்கோவில் அருகில் சிறிய வனத்தில் அமைந்து உள்ளது.

திருக்கோவில் மூலவர் :

கொன்ன மரத்தையன்

பெயர் விளக்கம் ;

கொன்னை மரத்தையன் ,கொன்ன மரத்தய்யன் என அழைக்கப்பட்ட போதிலும் சுவாமி புன்னை மரத்தடியில் இருந்ததால் புன்னை மரத்தையன் என்பதே காலப்போக்கில் மருவி கொன்னை மரத்தையன் ஆனதாக கூறுவதுண்டு .

திருக்கோவிலைச் சுற்றிலும் வேப்ப மரங்கள் ,ஊஞ்சல் மரங்கள் நிறைந்த அமைதியான இடம் .தியானம் செய்ய ஏற்ற இடம் .

திருக்கோவில் முகப்பில் காவல்காரன் எனும் காவல் தெய்வமும் சற்று தூரம் நடந்தால் திருக்கோவில் முகப்பில் பல்வேறு வேல்கள் குத்தப்பட்டு இருக்க

வலப்புறம் ஸ்ரீவீரகாரன் ,
ஸ்ரீகொன்னை மரத்தையன்,
மற்றும் ஸ்ரீபெருமாளின் அம்சமாக பெருமாள் சாமியும்

திருக்கோவிலில் அமர்ந்திருக்க அழகான திருக்கோவிலாக காணப்படுகிறது.

வார பூஜை புதன் கிழமை அன்று நடைபெறுகிறது.

அருள்மிகு ஸ்ரீ குருநாத சாமியை பற்றிய முழு விபரங்களும் இந்த வலைப்பூவில் உள்ளது.

முடிவுரை:

ஆடி மாதம் வந்தாலே ஈரோடு மாவட்டம் கல கலப்பாகிவிடும் . ஈரோடு மாவட்டத்தின் முக்கிய பண்டிகையான அந்தியூர் ஸ்ரீ குருநாதசாமி பண்டிகை

இன்று 8.8.12 துவங்கியது. 5 நாட்கள் நடைபெறுகிற அந்தியூர் குருநாதசாமியின் வரலாறு, தோற்றம், ஆன்மீக நிகழ்வுகள் முன்பே இதே வலைப்பூவில் பகிர்ந்துள்ளேன் .

படியுங்கள் முடிந்தால் வந்துவிட்டு செல்லுங்கள் மிகப்பெரிய குதிரைச்சந்தையும் மாட்டுச்சந்தையுடன் ஸ்ரீ குருநாதசுவாமி அருள்பெற்றுச்செல்லுங்கள் .நன்றி

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...