Thursday, April 5, 2012

சதுரகிரியில் அருளாட்சி புரியும் ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் சன்னதி


ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் சன்னதி


சதுரகிரியில் அமைந்துள்ள மூலவர் சன்னதியாகும் . திருக்கோவில் பகுதியில் வலப்புறம் திரும்பி திருக்கோவில் முகப்பில் உள்ள ஸ்ரீ சுந்தர மூர்த்தி சுவாமிகளை வணங்கி பின் நாம் காண வேண்டிய சன்னதி ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் ஆகும் .

நீண்டு வளர்ந்த தென்னை மரங்களுக்கிடையில் எதிரே உயரமான மலை ஆரம்பிக்குமிடமும் சிறிய ஓடையும் எதிரே ஒட நந்தீசரை வணங்கி உள்ளே சென்றால் ஸ்ரீ சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்கலாம் .

சதுரகிரியின் சுயம்பு மூர்த்தியான பெருமான் இடப்புறம் சற்றே சாய்ந்தவாறு இருக்க சிவலிங்கமாக சிவபெருமான் வரும் பக்தர்களை கவருகிறார் . முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் அருகே அமர்ந்துள்ளார் .

திருக்கோவில் அலங்காரமும் மணமும் சுகந்தம் தரும் வாசனையும் இறைவன் இங்கே அருள்பாலிப்பதை இயம்புவதாக அமைந்துள்ளது .பூஜை நேரத்திற்கு சரியாக இங்கே நேர்த்திக்கடனாக விடப்பட்ட பசுக்கள் மக்களோடு மக்களாக கலந்து ஸ்ரீ சுந்தரமகாலிங்கத்தை தரிசிப்பது ஆச்சர்யங்களில் ஒன்றாகும் .

வரும் பக்தர்களிடம் அன்பாக பழகுகின்ற பசுக்களை பக்தர்கள் நந்தீசர் பசுவாக நேரில் தரிசனம் செய்வதை கண்டு பழங்கள் உணவாக தருகிறார்கள் . சதுர கிரி சித்தர்கள் பலர் வந்து ஸ்ரீ சுந்தர மகாலிங்கத்த தரிசிப்பதாக ஐதீகம் .

திருக்கோவில் அமைதியான சூழலில் காணப்படுகிது.வாழ்நாளில் ஒரு முறையேனும் சதுரகிரி வந்து ஸ்ரீ சுந்தரமகாலிங்கத்தை வந்து வணங்குங்கள் .

மிக மேன்மையான சதுரகிரியில் அருள்பாலிக்கும்
ஸ்ரீ சுந்தரமகாலிங்கம் உங்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவார் .
நன்றி

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...