Wednesday, October 12, 2011

ஆலய‌த‌ரிச‌ன‌ம்





ஈரோடு மாவட்ட கோவில்கள் ;

ஆலய தரிசனம் ;


மகாசக்தி திருக்கோவில், சித்தர்காடு, ஆதிரெட்டியூர் ,அந்தியூர் பவானி வட்டம் ,(mahasakthi thirukovil,sittharkadu, ahadireddiyur, anthiyur near , bhavani taluk )

அமைவிடம் ; அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் வழியில் 5 கி.மீ தொலைவில் உள்ளது. கொல்லபாளையம் ஏரி வழியாக செல்லவும்.


கோவில் உருவான வரலாறு ;



ஒரு ஏழ்மை குடும்பத்தில் பிறந்த அந்த பையன் ஆடு மேய்த்துக் கொண்டும் தனக்கு சொந்தமான காட்டில் தன் 18 வது வயதின் தை மாதத்தில் பெண் பணியாளர்களுடன் கொள்ளு அறுவடை செய்து கொண்டு இருக்கும் போது அப்பது தமக்கு சொந்தமான இடத்தில் முட்புதர்கள்


,பழமையான மரங்கள் அடங்கிய பாறை அருகில் சத்தம் கேட்க அங்கே வந்த அந்த பையன் பார்த்தபோது அங்கே தமக்கு சொந்தமான புதரின் அருகே உள்ள பாழியில்
(பாறையில் இயல்பாக தண்ணீர் தேங்கும் அமைப்பு . போட்டோ பாருங்க)




யாரோ ஒரு பெரியவர் பித்தன் போன்ற ஒருவர் குளித்து விட்டு நிற்க யாராக இருக்கும் என யோசித்தவாறு அந்தப்பையன் விழிக்க



சாப்பிட்டாயா..? என வினவி புதரை காட்டி இந்த "புதரில் பாம்பு இருக்கு தெரியுமா,..?
எனக்கேட்டு "போ" என அந்த பெரியவர் சொல்ல அந்தப்புதரில் இருந்து பாம்பு செல்லக்கூடிய சப்தம் உணர்ந்த அந்தப்பையன் அதிசயித்து நிற்க அப்போது அப்பெரியவர் போன்ற சித்தர் உருவம் கொண்ட அவர்


"இந்த இடத்தில் பறி எனச் சொல்ல அந்தப்பையனும் தன் அரிவாளால் மறுப்பு ஏதும் சொல்லாமல் தானும்

குனிந்தவாறு மெல்ல பறிக்க பின்னால் இருந்த பாழியில் இருந்து செம்மண் கலந்த பானையில் நீரை கலந்தவாறு தன்மேல் ஊற்ற திடுக்கிட்ட அந்தப் பையனிடம் இவ்விடத்தில்

"ஞான சித்தரும்,மகா சக்தியும் சிவனும் ஆட்சி செய்கிறார்கள் பூஜை செய்யப்பா"

...! எனக்கூற அந்தப்பையன் ஓடிச்சென்று பாழியில் தன் மேல் ஒட்டிய சேறை நீக்க குளித்து விட்டு வர அந்தப் பெரியவரை காணவில்லே,


சுற்றிலும் பார்த்து விட்டு அங்கே தன் பனைமரத்தில் மேல் இருந்த பனை தொழிலாளர்களிடமும், அங்கே இருந்த பெண்களிடமும் கேட்க அந்தப் பெரியவர் எங்கே சென்றார் என கூறிவிட்டனர்.


3 வருடம் கழித்து; அந்த சம்பவம் மனதை வருட ஒருநாள் தன் வயலின் அதே இடத்தில் தன் மதிய உணவை முடித்து தன் டிபன் பாக்ஸை மறந்த விட்டு வந்தவர் அடிக்கடி அவ்விடத்திற்கு செல்ல பையனக்கு மன நிலை சரியில்லை என கோவில்கள் .,மருத்துவமனை, போய் பார்த்தும் சரியாகமல்


அவரின் 22 வது வயதில் கோபியில் உள்ள சன்யாசியிடம் கூட்டிச்செல்ல இந்தப் பையன் நல்ல முறையில் உள்ளான் எனவும் இவர் காட்டில் ஒரு கோவில் உள்ளது அதற்கு ஒரு குடம் தண்ணீர் ஊற்றி பூஜை வெள்ளிக் கிழமை அன்று செய்யுங்கள் எனச்சொல்ல கூட்டி வந்த அந்த பையன் இஷ்டம் போல பூஜை செய்ய சொன்னார்கள்.


அவ்விடம் பூஜை செய்ய நன்கு சுத்தம் செய்ய சுயம்பு லிங்கமாக சிவ லிங்கம் அங்கே தரிசனம் தருகிறது. தொடர்ந்து பூஜை நடை பெறுகிறது. அந்தப்பையன் தான் தற்போது பூசாரியாக ,ஞான சித்தர் அருள் பெற்றவராக பூஜை செய்து வருகின்றார் ,


அவ்விடத்தில் இடப் பற்றாக்குறையினால் மகா சக்திக்கு கோவில் தனி சன்னதியாக எழுப்பபட்டு திருப்பணிகள் நடை பெற்று வருகிறது.

ஆன்மீகப் பெரியோர்கள் ஆலோசனைப்படி மகாசக்தி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை வெள்ளி, அம்மாவசை,பெளர்ணமி நாட்களில் நடைபெறுகிறது.


இங்கு உள்ள சிலைகள் 1. மகாசக்தி சிலை சுதகையால் ஆனது,துவாரபாலகர்கள் நீலி,காளி 2. மகாசக்தி தனிபீடம் 3,துர்க்கை,பத்திரகாளி 4. சிவ லிங்க சுயம்பு சிலை (கோவில் வரலாறை சொல்லும் அமைதியான இடம் ) இங்கே மரங்களுக்கிடயே தியானம் செய்ய அமைதி யுடன் காணப்படுகிறது,


தரிசன நன்மைகள் 1. குழந்தை வரம். திருமணத்தடை நீங்கப் பெறுவதாக சொல்கிறார்கள்.


எம் அனுபவத்தில்; இங்கே அமைதி ஏற்படுவதை உணர்கிறேன்,


கோவில் சுவாமிகள் பற்றி;


முன்பு கதையில் அந்தப்பையன் தான் தற்போது வளர்ந்து 40 வயதை கடந்தவராக மாதப்பன், என்கிற முருகேச சுவாமிகள் ஆவார். அவர் மற்றும் புகைப்படங்கள் பாருங்கள்,நேரில் சென்று மகாசக்தியை யும் சுயம்பு சிவலிங்கத்தையும் பாருங்கள்.


உங்கள் மனம் அமைதி பெற வாழ்த்துக்கள் உங்கள்களின் ஆழமான கருத்துரைகளை எதிர்பார்க்கின்றேன்.

எம் இணையத்தை விஜயம் செய்தமைக்கு நன்றிகள் பல

கோட்டை முனியப்ப சாமி ஆலயம்





பெருந்துறை ஈரோடு மாவட்டம் (Kottai muniyappasamy temple, perundurai erode d.t) திருக்கோவில் அமைவிடம்:



பெருந்துறையில் இருந்து கோவை செல்லும் பெருந்துறை பஸ் நிலையம் அருகில். ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து 20கி.மீலும் பவானியில் இருந்து 30கி.மீலும் கோவில் உள்ளது.

மூலவர்: முனியப்ப சாமி.

வரலாறு:

திருக்கோவில் கீழ் பகுதியில் இடப்பகுதியில் விநாயகப்பெருமானை தரிசனம் செய்து வலப்பகுதியில் கருப்பராயரை தரிசனம் செய்து 25 படிக்கட்டுகளை ஏறி, (அக்காலத்தில் இந்த இடம் கோட்டையாக இருந்ததாம்.


அக்காலத்தில் விஜயநகரப் பேரரசு விஜயபுரி தற்போது விஜயமங்கலம் 10கி.மீ உள்ளது ) கோவில் உட்பிரகாரம் சென்று இடப்பக்கம் திரும்பினால் 3 முனியப்ப சாமிகள் பிரமாண்டமாய் வரவேற்க உற்றுப்பார்த்தால் பயமாய் நம்மை வரவேற்கிறார்கள்


அவர்களை தரிசனம் செய்து கோவிலை வலம் வந்தால் மூலவர் கோட்டை முனியப்பரை தரிசனம் செய்யலாம். மூலவர் குடமுழுக்கு செய்த மனதுக்கு அமைதி அளிக்கிறார்.


பழைய கோவில் மூலவர் கற்சிலையை பஸ்நிலையம் எதிரில் உள்ள கிணற்றில் பழங்காலத்தில் இருந்த எடுத்து வந்ததாகவும் அப்போது அக் கிணற்றில் அருகே அருள் வாக்கு சொல்லி வந்ததாகவும் அப்போது அருள் வந்த ஒருவர் அக்கிணற்றில் குதித்து ஒரு சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்ததாகவும் செவிவழிச்செய்திகள் கூறுகின்றன.



விழாக்காலம்: வருடத்தோறும் ஐப்பசி முதல் வாரத்தில்.

எம் அனுபவம் ; இங்கே சுற்றிப்பார்த்தில் பழங்காலங்கால கோவில் உணர்வும் மன அமைதியும் தென்படுகிறது.


சேலம், ஈரோட்டில்இருந்து கோவை செல்லும் போது

பெருந்துறை பஸ் நிலையம் அருகில் உள்ள இக்கோவிலை தரிசனம் செய்து

இக்கோவில் பற்றிய உங்கள் அனுபவங்களை

எமக்கு கருத்துரை இடுங்கள், நன்றி.

: அருள்மிகு பாலமலை சித்தேஸ்வர மலை.








கொளத்தூர், மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம். செல்லும் வழி: 1. மேட்டூரில் இருந்து கண்ணாமூச்சீ சென்று அங்கிருந்து மலை ஏறவேண்டும்.


வழி : 2. மேட்டூரில் இருந்து பவானி செல்லும் வழியில் நெரிச்சிப் பேட்டையில் இறங்கி அங்கிருந்து மலை ஏற வேண்டும்

வழி:3. பவானில் இருந்து குருவரெட்டியூர் வழியில் ஊமாரெடியூரில் இறங்கி செல்லலாம்.

சிறப்பான வழி :4 பவானியில் இருந்து குருவரெட்டியூர் பஸ் ( B5 , B10 ஜெயகிருஷ்ணா, முருகன்) ஏறி குருவரெட்டியூர் வந்தடந்து 2 கி.மீ கரடிப்பட்டியூர் (அ ) கொளத்தூர் வழியில் வலது பக்கம் மலை அடிவாரம் சென்று வினாயகரை தரிசனம் செய்து மலை ஏற வேண்டும்.


முக்கியமாக கவனிக்க வேண்டியது வேண்டியது:

1. மலைப்பாதைக்கு பஸ் வசதி கிடையாது, நடந்து தான் செல்ல வேண்டும்..

ஏற வேண்டிய மலைகள் 7 மலைகள்...

கொண்டு செல்ல வேண்டியது : டார்ச் லைட், கம்பளி.,

3 வேளை உணவு, தண்ணீர், அவசியம் ..

சிறப்புபலன்கள்:


1.சித்தேஸ்வரர் தரிசனம்
2.இயற்கை யான மலைப்பாதை

3.மலைவாழ் மக்களின் பலா, கொய்யா ,மாதுளை, நெல்லி பெறலாம்
4. சுத்தமான காற்று..

ஓய்வெடுக்க இடங்கள் :

வெற்றிலைப்பாறை, தும்பம்பதி . பெரியகுளம்,

மேல்மலை அடிவார விநாயகர் கோவில்.

அன்பான உங்களுக்கு :மலைப்பாதை 10 முதல் 15 கி.மீ அல்லது 7 மலைகள் இருக்கும், நல்ல உடற் தகுதி உடையவர்கள் மட்டும் செல்லாம் ..

செல்ல வேண்டிய மாதங்கள் : புரட்டாசி , சித்திரை (எல்லா சனிக்கிழமைகளும் ) மக்கள் கூட்டம் இருக்கும் மற்ற நாட்களில் செல்ல வேண்டாம்..

மலையில் 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மருத்துவ வசதி கிடையாது..! மற்றபடி விபரங்களுக்கு எமக்கு மெயில் செய்யுங்கள்.

சித்தேஸ்வரர் அருள் பெற்று வாழ்வாங்கு வாழ

இறை துணை வேண்டி குரு.பழ. மாதேசு,
குருவரெட்டியூர்


எமக்கு தெரித்த சிவாலய ஆலோசனைகள்

1.சிவாலயம் மற்றும் எவ்வாலயம் செல்லும் போதும் முதலில் முழுமுதற்கடவுள்
விநாயகரையும் பின் நந்தீஷ்வரரை வணங்கி விட்டே செல்ல வேண்டும்

2. சிவனுக்கு உகந்தது வில்வம் திங்கட்கிழமை. பிரதோஷ நாட்கள்

3. ஏதேனும் சிவநாமம் உச்சரிப்பது(ஓம் சிவாய நமஹ, ஓம் நமச்சிவாய ) அல்லது தேவரம்

திருவாசக பாடல் பாடுவது சிறப்பு

4.விநாயகருக்கு பிடித்து எருக்கன்., அருகம்பூ மாலை

5. வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை,மஞ்சள் ஆடை, முல்லை
மலர். குருவை நேருக்கு நேராக நின்று கும்பிடவும்

6 .செவ்வாய் கிழமை முருகருக்கு நெய் தீபம் செவ்வரளி

7. துர்க்கைக்கு வெள்ளிக்கிழமை எலுமிச்சை தீபம்

8. சனிஷ்வரர்க்கு சனிக்கிழமை .எள்.எள்தீபம். எள்முடிச்சு நல்லெண்ணெய் ,பக்க வாட்டில்
நின்றவாறு கும்பிட வேண்டும் என்பர் சிலர். கருங்குவளை பூ உகந்தது


9. இறைவனை நன்கு கைகளை மேல் உயர்த்தியே வணங்க வேண்டும்

10. கோவில் வலம் வந்த பின் கொடிமரத்தின் முன் நெடுசாண்கிடையாக விழுந்து வணங்கினால்
நம் ஊழ்வினைகள் தீர்ந்து நல்வினைகள் உருவாகும்.

நன்றி மேலும் தகவல்கள் ஞாபகம் வரும் போது இப்பகுதி நீட்டிக்கப்படும்,

ஆன்மீக நன்பர்களுக்கு இப்பகுதியில் தவறுகள் இருப்பின்
மன்னித்து சுட்டிக்காட்டவும்.
நன்றி


ஆலய தரிசனம்:

சோழீஸ்வரர் திருக்கோவில் பெருந்துறை ஈரோடு மாவட்டம் SOLIESWARAR temple perundurai erode district

திருக்கோவில் பெயர்:

அருள்மிகு சோழீஸ்வரர் மூலவர்: சிவன் அம்பாள் :வேதநாயகி

அமைவிடம் :

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பெருந்துறை 20கி.மீ பயணம் செய்து பெருந்துறை புதிய பஸ் நிலையத்தில் இருந்து 100மீட்டர் தொலைவில்.

திருக்கோவில் சிறப்பு:

அழகான உருவமாய் நகரின் மத்தியப் பகுதியில் உள்ள சோழீஸ்வரர் ஆலயத்தின் முன் பகுதியில் நம்மை வரவேற்பது கொடிமரம் இங்கே நின்று சிவ நினைப்பில் உள்ளே செல்ல அரசமரத்தின் கீழே அழகிய உருவில் விநாயகர் உடன் ராகு கேது களை தரிசித்து உள்நுழை வாயிலில் சென்றால் அங்கே நந்தீஸ்வரர் தரிசனம் செய்து மூலவர் தரிசனம் செய்ய உள்ளே சென்றால் அங்கே சோழீஸ்வரர் தரிசனம் அருமையாகவும் நல் சிவ தரிசனமும் பெற்ற உணர்வு நமக்கு கிடைக்கின்றது.

பின்னர் இடப்பக்கம் திரும்பினால் நால்வரையும் தரிசனம் செய்து அருகே வேதநாயகி அம்மன் சன்னதியில் வேதநாயகி அழகாகவும் அன்பாகவும் நமக்கு தரிசனம் தருகிறார்.

இடப்பக்க பின்புறம் வரசித்தி விநாயகரும் அருகே பழைய கோவிலில் இருந்த லிங்கமும் அருகே தட்சிணாமூர்த்தி சன்னதியில் நேராய் நின்று தரிசித்து


கோவில் இடப்பக்கம் சன்டிகேஸ்வரர் அருகே துர்க்கை ,முருகர் வள்ளி., தெய்வானை ,ஐய்யப்பன் ,பின்னர் சனிஷ்வரர் சன்னதியில் தரிசனம் செய்து காலபைரவர் கும்பிட்டு நவகிரகங்களை சுற்றி சந்திர சூரியர்களை வணங்கி வந்தால் நாம் முதலில் தரிசித்த நந்தீஷ்வரர் பின் வந்து நின்று தூரத்தில் உள்ள மூலவரை மறுபடி வணங்கி நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி நம் வேண்டுதல்களை நியாபகபடுத்தி வேண்டுகையில் சோழீஸ்வரர் தரிசனம் செய்த திருப்தி நமக்கு நன்றாய் கிடைக்கிறது .
உப தகவல்: சிதிலமடைந்து இருந்த இக்கோவில் மக்களின் பேருதவியாலும் .சிவனடியார்களாலும்,

பெருந்துறை வேதநாயகி அம்மன் நற்பணி மன்றத்தாலும் ஒரு கோடி ரூபாய் செலவில் கடந்த சில வருடங்களுக்க முன் புதிப்பிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு; முடிந்தால் ஒரு முறை வந்து
சிவனருள் பெற்றுச் செல்லுங்கள்.

ஓம் நமச்சிவாய நமஹ்



விநாயகர் அகவல் ;

இயற்றியது அவ்வையார் (தொடங்கும் செயல் வெற்றி பெற இப்பதிகத்தை ஒரு முறை விநாயகர் ஆலயத்தில் படித்து விட்டு தொடங்குங்கள் உங்கள் காரியத்தில் வெற்றி கிடைக்கும்)



'சீதக் களம்பச் செந்தா மரைப்பூம்
பாதச்சிலம்பு பலவிசைப் பாட
பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிரும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்

நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும்
திரண்ட முப்பரிநூல் திரளொழி மார்பும்

சொற்பதங் கடந்த துரிதமெய் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரு மூஷிக வாகன
இப்பொழு தென்னை ஆட்கொள்ள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயப்பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைத் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென துளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திரம் இது பொருளென

வாடா வகைதான் வந்தெனக் கருளிக்
கோட யுதத்தாற் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்

இன்புறு கருணை இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங் கருத்தினை அறிவித்து
இருவின தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்குந் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் மறுத்தே

ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத் தங்குச நிலையும்
பேரா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் கழுமுனைக் கபாலமுங் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவி லுணர்த்திக்

குண்டலி யதற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலா லெழுப்புங் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பயும் காட்டி

சணமுக தூலமுஞ் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனிதெனக் கருளிப் புரியட்ட
காயம் புலப்பட எனககுத் தெரிஎட்டு நிலையுங்
கெரிசனப் படுத்திக் கருத்தினிற் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி இனிதெனக்கருளி
என்னை அறிவித் தெனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கு மனமு மில்லா மனோலயந்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி யிரண்டுங் கொன்றிட மென்ன
அருள் தரும் ஆனந்தத் தழுத்தியென் செவியில்
எல்லையில்லா ஆனந்தம் அளித்து

அல்லல் களைந்தே அருள் வழிக்காட்டிச்
சத்தத்தி னுள்ளே சதாசிவங் காட்டிச்
சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி
அணுவிற் கணுவா யப்பாலுக் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமு நீறும் விளக்க நிறுத்திக்
கூடுமெயத்தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சுக் கரத்தினரும் பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே....

விநாயக அகவல் முற்றிற்று...
பதிகம் பற்றி; விநாயகருக்காக அவ்வையார் அருளிய
இப்பதிகம் மிகவும் பிரசித்தி பெற்றது..

பலன்; நாம் செய்யும் பல செயல்கள் இடையூருகள் ஏற்படுவது இயல்பு
ஆனால் தொடங்கும் செயல் இனிதே நடைபெற
இப்பதிகத்தை விநாயகர் கோவில் அல்லது விநாயகர் படம் முன்பு விளக்கேற்றி படியுங்கள் தொடங்கும்
உங்கள் நற் செயல்கள் வெற்றிபெற என் வாழ்த்துக்கள் .
இப்பதிகத்தின் கதை

பின்நாளிழ் வெளியிடப்படும்.

2 comments:

''இறைவனடி யுவராஜா'' said...

வாழ்க வளமுடன் !!
ஜீ உங்களின் பதிவிற்கு நன்றி !!

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

thanks yuva

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...