Friday, August 5, 2011

சாலை விபத்தில்லா பயணத்தை உறுதி செய்வோம்


வாகனம் ஓட்டும்போது கவனிக்க வேண்டிய விதிகள் :


அவசர உலகம் ., வாகனத்தின் பெருக்கம், இப்படி பல தடைகளை தாண்டி நாம் வீட்டை விட்டுச் சென்றால் திரும்பி வந்தால் போதும் என்கிற அளவில் சாலை விபத்துக்கள் நம் மனதை கரைக்கின்றன.



எத்தனையோ படித்த இளைஞர்களை சாலை விபத்துக்களில் பறிகொடுத்து மனித வளத்தை இழக்கலாமா?

சரி தனிமனிதனாக நம்மால் விபத்து ஏற்படுத்தாமல் எப்படிச் செல்வது ...?

செய்ய வேண்டியது :

1. வாகனத்தை எடுக்கும் போது டயரில் போதுமான காற்று ,எரிபொருள் உள்ளதா என பரிசோதிப்பது

2.ஹெல்மெட் போட்டுக்கொண்டு ஓட்டுவது

3.வாகனத்தின் இடப்புறம் வலப்புறம் திருப்பும் போது இன்டிக்கேட்டர்,கை சிக்னல் பயன்படுத்துவது.

4.முன்னால் செல்லும் வாகனத்தை முந்த நினைக்கும் போது நம் பின்னால் வரும் வாகனத்தை கண்ணாடியில் (side mirror ) கவனித்து முந்துவது

5.தரமான டயர் ,பிரேக் ஷுக்களை பயன்படுத்தல்

6.நல்ல தரமான ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் ஓட்டிப் பழகி ஓட்டுநர் உரிமம் வைத்துக்கொள்வது

7.சாலைவிதிகள் போக்குவரத்து காவலர் சைகை சிக்னல்களை மதிப்பது, அறிந்து கொள்வது
8.மிதவேகம்

9.இன்சூரன்ஸ் எப்போதும் நடப்பில் இருக்குமாறு வைத்துக்கொள்வது

10.இரவு பயணத்திற்கு ஏற்றவாறு நல்ல தரமான வெளிச்சம் தரும்
பல்புகள்,பேட்டரிகளை பயன் படுத்துதல்


செய்யக்கூடாதது :

1.செல்போன் பேசியபடி பணிப்பது நம் கவனத்தை சிதறவைக்கும்

2 மதுபோதையில் பயணம் செய்வது

3. அதிகப்படியான எடை,நிர்ணயிக்கப்பட்ட நபர்களை விட அதிகமான நபர்களை ஏற்றிக்கொண்டி செல்வது அல்லது இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்வது

4.வாகன ஓட்டும்போது சாகசம் செய்வது

5.நிர்ணயிக்கப்பட்ட வேகத்திற்கு மேல் செல்வது

6.அதிக ஒலி,ஒளியை பயன்படுத்துவது

7. சரியான தூக்கம் இல்லாமல் பயணிப்பது

8. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டுமென எண்ணுவது

9.நீண்ட பயணம் ஓய்வு எடுத்துக்கொள்ளாத பயணம்

10.வாகனத்தை நிறுத்தும் போது இடப்பக்கம் ஒரமாக நிறுத்தாமல் நடுரோட்டில் நிறுத்துவது இப்படி செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும் நிறைய இருந்தாலும் முக்கியமான வற்றை மற்றும் உங்களிடம் பகிர்ந்துள்ளேன்.


ஓரே அடிப்படையான விஷயம் என்ன வென்றால் 40கி.மீட்டர் வேகத்தில் மிதமான வேகத்தில் பயணித்தால் கண்டிப்பாக சாலை விபத்து ஏற்படாது.

மெடிக்கிளைம், மெடிக்கேர் பாலிசிகளை எடுத்து வைத்துக்கொள்வதும், அறிந்து கொள்வதும் சாலச்சிறந்தது. நாம் பயணிக்கும் சாலையில் விபத்து ஏற்பட்டால் எல்லோரையும் போல் வேடிக்கை பார்க்காமல் 108 க்கோ ,அவசர உதவி ஆம்புலன்ஸ்க்கும் முடிந்தால் அடிபட்டவரின் வீட்டிற்கும் தகவல் தாருங்கள்.


எத்தனையோ மனித உயிர்கள் உரிய நேரத்தில் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இறக்கிறார்கள்.

தனிமனிதனாக விபத்தில்லாமல் வாகனம் ஓட்ட உறுதி கொள்வோம்.

வாழ்க்கை பயணத்தை இனிதே தொடர்வோம்.

குத்தம் குறையிருந்தா குட்டி சொல்லுங்க.
நன்றி

4 comments:

FOREX . STOCK MARKET . COMMODITY said...

சிறப்பான இடுகை தொடர்ந்து இது மாதிரி எழுதினால் சிறப்பாக இருக்கும்

பிரகாஷ்

Samantha said...

gud post..keep postin

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

samantha @ சமந்தாவின் கருத்துரைக்கு நன்றிகள்

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

நன்பர் பிரகாஷ் அவர்களே தரமாக என் இடுகைகள் தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்நன்பர் பிரகாஷ் அவர்களே தரமாக என் இடுகைகள் தொடர்ந்து வர முயற்சிக்கிறேன்

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...