Saturday, March 12, 2011

அருள்மிகு அந்தியூர் குருநாதசாமி வரலாறு பாகம் - 3 arul migu anthiyur gurunathasamy temple history part -3





அந்தியூர் குருநாதர்க்கு அண்ணன் முறையில் பெரிய குருநாதசுவாமி கோவிலாகும் .


(இக்கோவில் பற்றி மேலும் அறிய தனியாக ஒர் கட்டுரை இதே வலை தளத்தில் உள்ளது அதைப்படிக்கவும்)

இது அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூர் வழியாக 4கி.மீ ல் குருவரெட்டியூர் செல்லும் வழியில் உள்ளது.

இங்கு பில்லி,சூன்யம்,காற்று, கருப்பு,வைப்பு,பைத்தியம், என பல வியாதிகளைகளை குணப்படுத்தும் அழகிய ஆலயம்.இங்கு பிரதி வருடம் பங்குனி மாதம் 4 ஆம் வெள்ளிக்கிழமை நாள் ஒருநாள் திருவிழா ஆகும்.

அருள்மிகு கொன்னமரத்தய்யன் கோவில் வனம். இது சித்திரை மாதம் 4ஆம் வியாழக்கிழமை தேர்த்திருவிழாவாக உள்ளுர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. பிரதிவாரம் மாலை 6.00 மணிக்கு பூஜை நடைபெறும். இவ்விரண்டும் அந்தியூர் குருநாதசாமி சம்பந்தப்பட்ட உபகோவில்களாகும்.

வாரபூஜை விபரங்கள் :

செவ்வாய் மாலை வேளை- அந்தியூர் குருநாதசாமி வனத்தில் பூஜை.

புதன்மாலை வேளை-

கொன்னமரத்தி அம்மன் கோவில் அந்தியூர்.

வெள்ளி மாலை வேளை-

பெரிய குருநாதர் பொரவிபாளையம்.

சனிக்கிழமை மாலை வேளையில் -அந்தியூர் குருநாதசாமி கோவில் பூஜை,
(Anthiyur gurunathasamy temple ) மற்றும் அமாவசை,மார்கழி அதிகாலை பூஜை ஆகியனவாகும்.

மாட்டுச்சந்தை :

தமிழ்நாட்டில் (tamilnadu) கூடும் பெரிய மாட்டுச்சந்தையில் அந்தியூர் குருநாதசாமி கோவில் திருவிழாவின் போது கூடும் மாட்டுச்சந்தையும் ஓன்றாகும்.

ஆடிமாதம் 4 ஆம் புதன் கிழமை மாட்டுச்சந்தையுடன் குதிரைச்சந்தையும் தொடங்கி விடும். 4 நாட்கள் நடக்கும் இச்சந்தைக்கு இந்தியாவின் (INDIA) பல பகுதிகளில் இருந்து குதிரை,மாடுகள் ஆயிரக்கணக்கில் வந்து பிரமாண்டமாக வியாபாரம் நடக்கும். இது 1951முதல் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.

மாட்டுச்சந்தைக்கு தனியாக இடம் இல்லை எனினும் இப்பகுதி மக்கள் தங்கள் விவசாய நிலங்களை பலகாலமாக மாட்டுசந்தை நடைபெற உதவியாக உள்ளனர். தங்கள் நிலங்களில் ஆடிமாதம் மட்டும் பயிர் செய்யாமல் வைத்து மாடுகள்,குதிரைகள் கட்ட ஏக்கர் கணக்கில் உதவிசெய்வது சிறப்பு,


இந்த இடுகையை எழுத உதவியாக இருந்த "குருநாதசாமி திருக்கோவில் வரலாறு புத்தகம் " பி.ஜி பெருமாள் & சகோதர்கள் பரம்பரை அறங்காவலர் குடும்பம், குருநாதரின் வரலாற்றை எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை தெரிந்து கொண்டு குருநாதசாமி வரலாற்று புத்தகத்தை பரிசளித்த தற்போதைய அறங்காவலர் குழு திரு.சாந்தப்பன் என்கிற செல்வன் அவர்களுக்கும்,ஜீ.பி.ராஜன் எல்.ஐ.சி ஏஜென்ட் (G.p Rajan l.i.c agent. guruvareddiyur ) அவர்களுக்கும், கோவில் பற்றி கேட்ட இடத்தில் எல்லாம் குருநாதசாமியின் பழங்கதைகள் கூறி உதவியாக இருந்த அனைத்து ஆன்மீக செம்மல்களுக்கும் என் மனம் உவந்த நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.

நீங்களும் ஆடிமாதத்தில் நடைபெறும் அந்தியூர் குருநாதசாமியை ( ANTHIYUR ARULMIGU GURUNATHASAMY TEMPLE )தரிசனம் செய்து, குதிரை .மாட்டுச்சந்தைகளை தரிசித்து


அருள்மிகு குருநாதர் அருள் பெற்று எல்லா நலமும் வளமும் பெற

இறை துணை வேண்டுகிறேன்.

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...