Sunday, April 13, 2014

ஸ்ரீ பெரியநாயகி உடனமர் மகிழீஸ்வரர் திருக்கோவில் ,பெருந்தலையூர்,

                                    ஸ்ரீ மகிழீஸ்வரர் திருக்கோவில்    



அமைவிடம் :

 ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் பெருந்தலையூர் திருக்கோவில் அமைந்துள்ளது . இது ஈரோட்டிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் கவுந்தப்பாடியில் இருந்து 7 கி.மீட்டர் தொலைவில் பெருந்தலையூர் அமைந்துள்ளது .

 கொங்கு நாட்டின் புகழ் பெற்ற பவானி ஆறு சத்தியமங்கலத்தில் இருந்து பவானி கூடுதுறை வரைஆற்றுப்படுக்கையில் 5 புகழ்பெற்ற சிவாலயங்கள் அமைந்துள்ளது . பழங்கால சிறப்பு பெற்ற சுயம்பு லிங்கமான ஸ்ரீ மகிழீஸ்வரர் திருக்கோவில் 2000ஆண்டுகள் பழமையானது .



சங்ககால நூலான நற்றிணையின் ஆசிரியரான பெருந்தலை
சாத்தனால் இவ்வூரின் பெருமையை குறிப்பிட்டுள்ளது. சிவபெருமானுக்கு
திருமகிழ்வனமுடைய நாயனார் ,ஸ்ரீ பிரகன்நாயகி என்ற திருநாமங்கள் உண்டு .

பழங்காலத்தில் மகிழமரங்கள் அதிகமிருந்ததால் சிவபெருமானுக்கு இந்த
திருநாமம் அமைந்திருக்கிறது . பாண்டியர்காலத்தில் உருவான திருக்கோவில்பின் நாயக்கர்கள் காலத்தில் விரிவாக்கம் பெற்றுள்ளது .

 திருக்கோவில்அமைப்பு :

திருக்கோவில் முகப்பில் ஸ்ரீ விநாயகர் சன்னதியும் அதை கடந்து
சென்றால் கிழக்கு நோக்கிய நீண்ட பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய
சுயம்புலிங்கமாக ஸ்ரீ மகிழீஸ்வரபெருமான் அருள்பாலிக்கிறார் .
திருக்கோவில் எதிரில் அழகிய பவானி ஆறு ஒடுகிறது .

திருக்கோவில்உள்முகப்பில் முன்னே கொடிமரம் , ஸ்ரீ நந்தீசர் வலப்புறம்
ஸ்ரீதட்சிணாமூர்த்தி ,சண்டிகேசர் , நவகிரகங்கள் , காலபைரவர் என
திருக்கோவில் பழங்கால சிவாலய அமைப்பை பறைசாற்றுகிறது . அருகே அம்பிகைஸ்ரீ பெரியநாயகிக்கு தனி சன்னதி அமைந்துள்ளது .

 திருக்கோவில் அருகேஅருள்மிகு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஸ்ரீ பொன்னாச்சியம்மன் ஸ்ரீ கூத்தாண்டைமாரியம்மன் ஆகிய திருக்கோவில்கள் அமைந்துள்ளது.

முடிவரை :

பழங்கால சிவாலயங்களில் சிறப்பு பெற்ற ஸ்ரீ மகிழீஸ்வரர் திருக்கோவில் ஒருமுறேயேனும் தரிசிக்க வேண்டிய ஆலயம் .நன்றி

Friday, April 11, 2014

சித்தர்கள் அருளிய எண்ணைய் குளியல்

பழங்காலத்தில் மனிதன் நோயின்றி வாழ பல வழிகளை சித்தர்கள்
எடுத்துரைத்தார்கள். எண்ணைய் தேய்த்து குளித்தால் உடலுக்கு நல்லது என
அதற்கான வழிமுறைகளை உருவாக்கினார்கள் . அதனாலேயே அவ்வையார் சனி நீராடு என எடுத்துரைத்தார்கள் .

 சரி சனி நீராடு என சொல்லிவிட்டால் போதுமா ?
அதற்கான சித்தர்கள் கூறிய வழி என்ன என்பதை விளக்கவே இந்த பதிவு !


தயாரிப்பு முறை :

 முதலில் நல்லெண்ணெய் 200 மில்லியில் 20 கிராம்
சீரகத்தை போட்டு லேசாக சூடாக்கவும் . பின் இளஞ்சூடானதும் எடுத்து
சீரகத்தை வடிகட்டி ஆற வைத்து உடலின் தலையில் ஆரம்பித்து எல்லா
இடங்களிலும் தேய்த்து நிழலில் உட்காரவும் .

 வெயிலுக்கு வந்தால் உடலில் எண்ணைய் உள்ளே இறங்காமல் வெளியேறி எண்ணெய் குளியலை பயனில்லாமல் போகும் .காலை சூரிய உதயமான 6 மணிமுதல் 8 மணிக்குள் நமக்கு உகந்த ஒரு மணிநேரம்
எண்ணையில் உடலை ஊறவைக்கவேண்டும் .

பின் பெரிய அண்டாவில் சுடுதண்ணீர் இளஞ்சூடாக காய்ச்சி குளிக்க வேண்டும். அரப்பு ,சீயக்காய் தலைக்கு தேய்த்து குளிக்க உடல் குளிர்ச்சியாகும் . குளித்த பின்பு 200 மில்லி இளஞ்சூடான தண்ணீர் அருந்த உள்சூடு சமப்படும்.

எண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நாட்கள்

ஆண்கள் :புதன் ,சனி

 பெண்கள்  :செவ்வாய் ,வெள்ளி

 எண்ணெய் தேய்த்து குளித்த அன்று ஆகாதவை : பழைய சாதம்
, மோர் ,தயிர் ,இளநீர் போன்ற உடலை குளிர்ச்சி ஊட்டம் பொருட்கள் ஆகாது .
இவைகளை சாப்பிட்டால் சளி காய்ச்சல் வர வாய்ப்புகளுண்டு ..

சரி எண்ணைய் குளியல் அன்று என்ன சாப்பிடலாம் ?

 சூடான உணவு வகைகள் , மட்டும் சாப்பிடவும் , அன்றைய தினம் உடலுறவு கொள்வதால் உடல் தளர்ச்சியுறும் .ஆக அதையும் தவிர்த்து உடலை மேன்மையுடையதாய் ஆக்குங்கள் .

 எண்ணெய்  தேய்த்து குளிப்பதால் உண்டாகும் நன்மைகள் :

உள்சூடு கணச்சூடு சமனாகிறது .அல்சர் போன்ற வயிற்று புண்கள் மெல்ல சரியாகிறது . சரிரம் எண்ணெய் படுவதால் மூலம் போன்ற கொடிய நோய்கள் உருவாகாது. பொதுவாக சூட்டினால்உண்டாகும் நோய்கள் உருவாகமல் உடலை பாதுகாக்கிறது .

யார் எண்ணெய்தேய்த்து குளிக்ககூடாது :

சைனஸ் , ஆஸ்துமா , காசநோயளிகள் சித்த
மருத்துவர்களின் ஆலோசனைப்படு எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்

முடிவுரை :

சித்தர்கள் சொல்லிச்சென்ற எண்ணெய் தேய்த்து குளிக்கும் முறையில் நான்
அறித்தவற்றை உங்களுக்கு கூறியிருக்கிறேன் . மேலும் தகவல்கள் விட்டு
இருப்பின் விரிவாக்கப்படும் ,நீங்களும் பின்னூட்டத்தில்
கருத்துரையிடுங்கள் . மனிதன் நோயில்லாமல் வாழ வேண்டும் .

எண்ணெய் குளியல் தானே என அலட்சிய படுத்து பலர் பைல்ஸ் போன்ற நோய்களில் சிக்கி அவதிப்படுகின்றனர் . 48 சனிக்கிழமைகள் நீங்களும் எண்ணெய் தேய்த்துகுளியுங்கள் , தேகம் தங்கமாக மின்னும் . நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
நன்றி

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...