Thursday, November 20, 2014

சைவ உணவின் மேன்மை

சித்தர்களும் மகான்களும் , உயிர்கொலையை அறவே வெறுத்தார்கள் . ஓர்
உயிரைக்கொன்று தின்பதால் அதன் உயிர்வலி அதை சாப்பிடும் மனிதர்களுக்கு
நோயாக தாக்குவதும் உண்மையே . உயிரைக்கொல்லாது சைவ உணவு சாப்பிடுபவர் பலர் நீண்ட ஆரோக்கியத்துடன் காண முடிகிறது . ஆனால் இன்றோ குடியும் அசைவ உணவும் மனிதனின் அன்றாட தேவையாகிவிட்டது .

45 வயதிற்குள்ளாகவே கொடிய நோய்கள் தாக்குவதற்கு அசைவ உணவை அதிகம் புசிப்பதே காரணமாகும் . அப்ப சைவம் சாப்பிட்டால் நோயே வராதா என விதண்டாவாதம் பேசக்கூடாது .சித்தர்கள் உப்பை வறுத்தும் புளியை சுட்டும் சாப்பிட சொன்னார்கள் . நவநாகரீக உலகில் நுழைந்து பழையன எல்லாம் தொலைத்து விட்டோம் .

 உண்ணும் உணவே விஷமென எல்லோரும் பேசுவதை கேட்க முடிகிறது . இன்றைய சூழலில்எல்லாமும் விஷமாகிவிட்டதென பழமையை தேடி ஓடுகிறார்கள் மக்கள் . இது நல்ல விஷயம் கி.பி 1500 முன் தொலைத்த நம் பாரம்பரியத்தை சித்தர்கள் எழுதிய புத்தகங்கள் , சித்தர்கள் தேடல் என இன்றைய மக்களின் சித்தர்களின் தேடல்மிக நல்ல விஷயம் .

 சித்தர்கள் கலையில் ஜோதிடம் ,மாந்திரிகம் ,மருத்துவம்
என எதைப்பயின்றாலும் அசைவ உணவு தவிர்த்தால் சித்தர்கள் கலையில்
மேன்மையுறுவது எளிது.




 கங்கையில் படிந்திட்டாலும் கடவுளை பூசித்தாலும்
மங்குற்போல் கோடிதானம் வள்ளலாய் வழங்கினாலும்.
சங்கையில்லாத ஞானசாத்திர முணர்ந்திட்டாலும் .
பொங்குறும் புலால் புசிப்போன் போய்நரகடைவானானன்றே .

 கலையொலாமுணர்ந்தானேனும் கரிசற தெரிந்தானேனும் ,
மலையெனஉயர்ந்தானேனும் மன இயல் அகன்றானேனும் ,
 உலகமெலாம் புகழ்ப் பல்லோர்க்குகுதவிய கையனேனும் ,
இலகிய இரக்கம் இன்றேல் எழுநரகடைவானற்றே ,


இத்திரனருள் கைப்பற்றி உயிர்க்கெலாம் இதத்தைச்செய்க ,
 சத்திய இரக்கம்இன்றேல் முத்தியை சார்கிலார் - சற் , பக்தியால்
 யோகம்சாரும் யோகத்தால் பரம் ஞானம் சித்தியாம் ,
 இதற்காதாரம் ஜீவகாருண்யம் அன்றே ,

                   
                                                                                                                                                                                                                                                                                                                                                       நன்றி

                                                               பஞ்சாட்சர பதி பசு பாச விளக்கம்


 பொல்லாப் புலாலை நுகரும் புலையரை,
எல்லாரும் காண இயமன்றன் தூதுவர் ,
செல்லாகப் பற்றி தீவாய் நரகத்தின்
மல்லாகத் தள்ளி மறித்து வைப்பாரே

                                                                        திருமூலர் திருமந்திரம்

 இந்த
பாடல்களுக்கு விளக்கம் தேவையில்லை ! இரண்டாம் பாடலில் அசைவம் தின்போரைபுலையன் என திட்டுகிற திருமூலர் மாமிசம் உண்போரை எமன் தூதுவர் வந்து அழைத்துச்செல்வர் என்கிறார் . இந்த காலத்தில் உண்மையான நரகம் என்பதுநோய்தான் ,

அசைவ உணவு , மசாலா உணவுகள் அஜினோ மோட்டா உணவுகள் ,
செரிக்காத புரோட்டா உணவுகள் தவிர்த்து காய்கறி ,கீரைகள் சாப்பிடுதல்
நலம் . அதே போல மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்கவேண்டாமென திருமூலர் சொல்கிறார் .

 மனம் செம்மையாக முதல் படியே அசைவ உணவு
தவிர்ப்பதுதான் . மிருகத்தை தின்றால் மிருக உணர்ச்சியே வரும் . மானிட
உணர்வும், மனம் செம்மையாக ஆகவேண்டுமெனில் சைவத்தில் இருங்கள் .


உயிரைக்கொல்லக்கூடாது , அதை சாப்பிடக்கூடாது என விரும்பிய மகான்
திருவள்ளுவர் புலால் மறுத்தல், கொல்லமை என இரு அதிகாரங்கள் திருக்குறளில்எழுதினார் .

 தன்ஊண் பெருக்கற்குத் தான்பிறிதூன் உண்பானை
எங்ஙனம்ஆளும் அருள்

                                                                26 அதிகாரம் புலால் மறுத்தல் 251

 தன் உடம்பைபெருக்க அசைவ உணவு உண்பவர்க்கு அருள் எங்கிருந்து கிட்டும் , அருள்என்பது இறையருளாகவும் அது அசைவ உணவு உண்போர்க்கு கிட்டாது என்றும்வினவுகிறார் 

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
 எல்லா உயிரும் தொழும் .

                                                         குறள் 260ல் 26வது அதிகாரம் புலால் மறுத்தல்

 பொருள்உயிர்க்கொலை செய்யாமல் , அதை கொன்று உண்ணாதவனை கை கூப்பி எல்லா உயிரும்தொழும் என்கிறார் . எல்லா உயிரும் தொழுமென்றால் உயர்ந்த யோகியாய் மனிதன் அசைவத்தை விட்டதும் மாறுகிறான் என்றே தோணுகிறது . திருவள்ளுவர் 33 வது அதிகாரத்தில் கொல்லாமை யின் அவசியத்தை பாடி இருக்கிறார் .

 ஓன்றாகநல்லது கொல்லாமை மற்றதன்
 பின்சாரப் பொய்யாமை நன்று

                                                                                                    குறள் 323

உயிரைக்கொல்லாது இருத்தலே உயர்ந்த அறம் இரண்டவதாக உண்மை பேசுதல் நல்அறம் என்கிறார் . உயர்ந்த அறம் உயிர் கொல்லாமை என்கிறார் .




தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறி
 தின்னுயிர் நீக்கும் வினை

                                                                                                  குறள் 327

பொருள் : தன் உயிரே போவதாக இருந்தாலும் மற்ற உயிரை போக்குதல் கூடாது அது கொடும் பாவம் என்கிறார் .


 இப்படி பல மேற்கோள்கள் சித்தர்
பெருமக்கள் பாடியுள்ளார்கள் . அதையெல்லாம் விட்டு அசைவத்தை உண்பதால் பல நோய்கள் உருவாகிறது .


 முடிவுரை :

 எல்லாவற்றிக்கும் ஓர் அதிகாரம் எழுதிய திருவள்ளுவரே 2 அதிகாரம் எழுதியுள்ளார் எனில் சைவத்தின் மேன்மையை
உணருங்கள் . கடைசியா வாழ்ந்த வள்ளலார் காட்டிய ஜீவகாருண்ய வழியில்
பயணியுங்கள் . நோயில்லாமல் வாழலாம் , அசைவம் உண்பதில்லை என மன உறுதிகொள்ளுங்கள் .

பல ஆலயங்கள் தரிசித்தும் ஒன்றும் ஜெயிக்க முடியவில்லை
என்பதற்கு காரணம் அசைவ உணவு உண்பதே . இது என் தனிப்பட்ட ஆய்வே தவிரவேதவாக்கு அல்ல . இறைவன் படைத்தது எல்லாம் சாப்பிடதானே என்கிறசமாதானத்தை ஏற்க முடியாது .

முட்டை அசைவமே 40நாளில் குஞ்சு பொறிக்கிற
ஒன்று எப்படி சைவமாகும் . சைவமாக மாறுவதெனில் முழுக்க மாறுங்கள் . அது தவிர்த்து அசைவம் உண்டு விட்டு யோக பள்ளிக்கு செல்கிறார்கள் .தியானம்கற்கிறேன் என்கிறார்கள் . தன்னை தானே ஏமாற்றி கொள்வது இது ..
உயிர்கொலை புரியாது , புலால் உண்ணாது சைவத்தில் இருங்கள் .

இறையருளும கிரகங்களும் உங்களுக்கு நல்லதையே செய்யும் என்பது என் கருத்து .சித்தர்கள் சொல்லிவிட்டு சென்ற சைவ உணவை உண்ணுங்கள் . மனம் செம்மையாகி மேன்மை அடைவீர்கள் . இது என் தனிப்பட்ட கருத்தே அன்றி இதில் பலருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம் .

 கடந்த 1 வருமாக அடியேன் அசைவத்தை விட்டு
விட்டேன் . மனது தெளிவாக உள்ளது . நல்ல விஷயமென உங்களுக்கு தோன்றினால்சைவத்திற்கு மாறிக்கொள்ளுங்கள் . ஏனெனில் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

. நன்றி .

 ஒம் சிவ சிவ ஓம் .

Monday, November 10, 2014

G.P இராஜன் எனும் விருட்ஷம்

என் வாழ்வில் தாங்கிக்கொள்ள முடியாத வெளியே வர வழியின்றி மிகக் கொடுரமான தருணத்தில் நிற்கிறேன் . 2014 ஆம் வருடம் மார்ச் மாத துவக்கத்தில் எனது அண்ணன் G.pஇராஜன் போன் செய்து எனக்கு இரத்தப்புற்று நோய் தாக்கியிருக்கிறது என சொன்ன நாளில் இருந்து இன்று வரை நடைப்பிணமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன் .

 எனது அண்ணன் எல்.ஐ.சி முகவராக பவானி கிளையில் கடந்த 13 வருடங்களாக பணியாற்றி வந்தார் . எனது குடும்பத்தின்
மூத்த சகோதரனாக என்னையும் என் குடும்பத்தையும் வழி நடத்திய ஆசான் .
அண்ணனின் நன்பர்கள் சென்னை ,கேரளம் ,வேலூர் , கர்நாடக என பல ஊர்
கூட்டிப்போய் ஆயுர்வேதம் முதல் அலோபதிவரை பார்த்தார்கள் .

 சென்னையிலுள்ள ஒர் தனியார் மருத்துவமனை 40லட்சம் செலவாகுமென பேசியது ! அடையாரில் 25லட்சம் செலவாகும் என்றார்கள் ! எங்கே போவது ? ஏழை எங்கே போவான் ?

எப்படியும் இந்த உயிரைக்காப்பாற்றி விட வேண்டுமென சென்னையிலுள்ள ஓர்மருத்துவமனையில் கீமோ தெரபி சிகிட்சை கொடுத்து ஏப்ரல் முதல் வாரத்தில்வீட்டிற்கு வந்தார் . அடுத்த இரண்டு நாளில் முகம் வீங்கிய நிலையில் வாய் உட்பகுதியில் புண் ஏற்பட எது சாப்பிட்டாலும் வாந்தி ஏற்பட வாந்திநிற்காமல் வரவும் என்ன செய்வதென புரியவில்லை !

 இந்த சூழலில் சத்தியமங்கலம் அருகில் புற்று நோய்க்கு ஒர் வைத்தியர் மருந்து கொடுப்பதாக கேள்விப்பட்டு கிளம்பினோம் . அத்தாணியில் இருந்து
சத்தியமங்கலம் செல்லும் வழியில் காளியூர் பிரிவு என்ற இடத்தில் சரவணா
சித்தவைத்திய சாலை கேள்விப்பட்டு அந்த வைத்தியரிடம் அனுப்பி வைத்தேன் .


எந்த மருந்திலும் 25 நாளாக நிற்காத வாந்தியை அந்த சித்த வைத்தியர்
1நாளில் நாளில் நிறுத்தி சாப்பிட வைத்தார் . 25 நாட்களாக சாப்பிடாத என்
அண்ணன் G.p இராஜன் அன்று முதல் 3 வேளை உணவு சாப்பிட்டார் .படிப்படியாக மருந்தும் சாப்பிட்டு படிப்படியாக குணமாக ஆரம்பித்தார் .

அந்தவைத்தியர்க்கு எனது நன்றிகள் . 


 பின் 6 மாதம் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை அந்த சித்த மருந்து சாப்பிட படிப்படியாக இரத்த வெள்ளணுக்கள் குறைந்து என குணமாக ஆரம்பித்தார் . ஹீமோதெரபில் கொட்டிய முடி வளர்ந்தது . அவரைப்பார்த்து ஆச்சர்யர்ப்பட்ட நன்பர்கள் பலரும் அப்போது உண்டு .மறுபடி தன் வேலையாக வெளியே கிளம்ப அக்டோபர் முதல் வாரத்தில் நோயின்தாக்கம் ஆரம்பித்தது .

முதல் உள்நாக்கில் புண் வந்து சாப்பிட முடியாமல்
செய்தது . மறுபடி உணவு சாப்பிட முடியாமல் போக சிவப்பணுக்கள் குறைந்து
வெள்ளையணுக்கள் மறுபடி அதிகமாக ஆரம்பிக்க பின் சித்த மருந்து கொடுத்து கேட்காமல் கடைசியாக 15 நாட்கள் சென்னை சென்று ஆங்கில வைத்தியம்பார்த்தும் சிகிட்சை பலன் இன்றி

கடந்த 18.10.14 அன்று காலை 4.15 மணிக்கூ

எனது அண்ணன் G.p இராஜன் இறைவனுடன் கலந்து விட்டார் .


 இரத்த புற்று நோயில் 40வகை இருப்பதாக சொல்கிறார்கள் . எனது அண்ணாவுக்கு இருந்தது அதிகம் பாதிக்ககூடிய புற்று நோய் வகையாம் . ஆங்கில மருத்துவத்தில் எலும்பு மஜ்சை ஆப்ரேசன் செய்து மாற்றுவதே சிகிட்சை என்கிறார்கள் . அந்த ஆப்ரேசன் செய்தாலும் சிலகாலமே உயிர்வாழ வாய்ப்பு உள்ளதாம் .


எப்படியாயினும் இரத்தப்புற்று நோயை தற்காலிகமாக தள்ளிப்போடவே மருந்து இருக்கிறது என் வாழ்வில் நேர்ந்த உண்மை . இந்த பதிவின் நோக்கமே
யாரையும் குறை சொல்ல அல்ல . என் வாழ்வில் என் அண்ணாவிற்கு
நேர்ந்தவற்றை உங்களுக்கு தெரிந்து கொள்ளவே இந்த பதிவு . இது போன்ற
குணப்படுத்த முடியாத நோய்களில் பலரும் தினம் செத்துப்போவது ஏற்க முடியாது


இதற்கெல்லாம் மருந்து கண்டுபிடிக்க யாரேனும் இந்த பூமியில் அவதரிக்கவேண்டும் . பல ஆய்வுக்கூடங்கள் நிறுவப்பட்டு மருந்தில்லா நோய்களைகுணப்படுத்த பல உயர்ந்த மனிதர்கள் இந்த பூமியில் பிறக்கவேண்டும் .நான்அன்றாடம் வேண்டி இறஞ்சுகிற சிவபெருமானும் , ஸ்ரீ வெங்கடாசலபதியும்சித்தர்களூம் இதைச்செய்யவேண்டும் .


வாழ்வின் எந்த சுகமும் அனுபவிக்காது, தினமும் காலையில் எழுந்து ஸ்ரீ செல்வ விநாயகரையும் ,ஸ்ரீ கக்குவாய்மாரியம்மனையும் வணங்கிவிட்டே சாப்பிட செல்கிற என் அண்ணன் ,புகை மது பழக்கம் இல்லாதவர் எப்படி இந்த நோய் தாக்கியது என ஆற்றாமை இன்று  வரை தொடர்கிறது . எப்படியும் என் தம்பி என்னைக்காப்பாற்றி விடுவான் என நம்பிய என் அண்ணாவின் ஆத்மாவிற்கு பதில் சொல்ல வழியின்றி வலியில்
தவித்துக்கொண்டிருக்கிறேன் .

 என் இப்போதைய வேண்டுதல் எல்லாம் அவர்விரும்பிச்செல்கிற திருப்பதியிலோ திருவண்ணாமலையிலோ இறைவனின் நிழலில் இளைப்பாறவேண்டும் என்பதே !

 இந்த முக்கிய தருணத்தில் எனக்கும் என்

குடும்பத்தினருக்கும் தோள் கொடுத்த நன்பர்கள் பலருக்கும் நன்றி.

 1.முதலில் திரு. செந்தில்குமார் M.S ராணிமருத்துவமனை ,அந்தியூர் 

 வேண்டும் போது மருத்துவ ஆலோசனைகள் மற்றும் கட்டணம் ஏதும் இன்றி அண்ணாவிற்கு பலமுறை இரத்தம் செலுத்தியும் வாழ வைத்தவர் அவர்க்கு என் நன்றிகள்

 2.
அண்ணாவிற்கு உடல் நிலை சரியில்லை என்றதும் ஒடி வந்து உதவிய அவரின்
நெருங்கிய நன்பர்கள்

 Tr. Murugan, Devolopment Officer, bhavani branch

Tr,palanisamy lic agent bhavani branch  

Tr,perumal lic agent bhavani branch 

Tr.kulandaisamy siddavaithiyar ,saravana sidda hospital ,kaliyur pirivu,sathyamamangalam,

உட்பட பல நன்பர்கள் பல்வேறு உதவிகள்

செய்தார்கள் ,

எனது நன்பர்கள் பார்த்திபன் நடராஜ் சீனிவாசன் என ஓர் பெரிய
பட்டியலே உள்ளது. அவர்களுக்கெல்லாம் என் சிரம் தாழ்ந்த நன்றிகள் . இந்த
பதிவை படித்ததும் இந்த பதிவு அவசியமா என பல நட்புகள் கேட்கக்கூடும் .
இரத்தப்புற்று நோய் எந்த அளவு ஓர் குடும்பத்தை பாதிக்குமென
விளக்கியிருக்கிறேன் .

 இன்றைய காலத்தில் புற்றுநோய் ஒர் கொடிய எமனாக
உருவாகி வருகிறது . மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் , அடுத்த வரும்
பதிவுகளில் நோயில்லாமல் மனிதன் வாழ புற்றுநோய் பற்றியும் ஆய்வு செய்துசமர்பிக்கிறேன்.

 இந்த பதிவை படிக்கும் நட்புகள் எனது அண்ணன் G.pஇராஜனுக்காக அவர் ஆத்மா இறையருளுடன் கலக்க ஓர் நொடி வேண்டி கொள்ளுங்கள்.

. நன்றி

Wednesday, September 24, 2014

ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர் ஜீவசமாதி

திருவண்ணாமலை சித்தர்கள் மகான் அடங்கிய புண்ணிய பூமி அத்தகைய
பெரியோர்களில் ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகரும் ஒருவர் . அவர் வாழ்ந்த காலம்
1750முதல் 1829 வரையாகும் . திருவண்ணாமலை ஈசான்ய திசையில் நெடுங்காலம் தங்கி இருந்து வாழ்ந்ததால் ஈசான்ய ஞான தேசிகர் என பெயர் பெற்றார் .


ஈசான்ய லிங்க குளக்கரை அருகில் ஈசான்ய ஞான தேசிகர் மடத்தில் சித்தரின்
ஜீவசமாதி அமைந்துள்ளது . ஈசான்ய ஞானதேசிகரின் தந்தையார் திருநீலகண்டர்என்பவராவார் . ராய வேலூரில் இளமைக்காலத்தில் கந்தப்பன் என்ற பெயரில்வாழ்ந்த ஞானதேசிகருக்கு 7வது வயதில் சிவதீட்சை செய்யபட்டு பின் தேசிகர் என பட்டம் சூட்டி மகிழ்ந்தனர் .

பின்னாளில் திருமண ஆசை விடுத்து
சிவாலயங்கள் மனம் தேடலில் ஈடுபட்டு தில்லையம்பதிலில் சிவபெருமானின் தரிசனம் ஞானதேசிகருக்கு கிட்டியது .அங்கு மெளனகுரு சுவாமிகளின் ஆசியும் குருவருளும் ஈசான்ய ஞானதேசிகருக்கு கிட்டியது .
பின் மெளனகுரு சுவாமிகள் மேல் குருபக்தி கொண்டு பஞ்சரத்தினம் என்ற பாமாலைபாடினார்,

குருவிடம் யோக ஞானம் கற்ற கந்தப்ப தேசிகர் யோகபட்டை .யோகதண்டு
ஆகியற்றை பெற்று ஜடாமுடி தரித்து ஸ்ரீ மெளனகுரு சுவாமிகளிடம்
விடைபெற்றுச்சென்றார் . பின் தில்லையம்பதி விட்டு புறப்பட்டு திருவாருர்
தியாகராஜசுவாமிகளை தரிசித்து பின் மடப்புறம் குரு தட்சணாமூர்த்தி
சுவாமிகளுடன் சிலகாலம் வாழ்ந்தார் கந்தப்பர் எனும் ஈசான்ய ஞான தேசிகர் .


பின் வடதிசை நோக்கி திருவண்ணாமலை அடுத்த வேட்டவலத்து அருகில்
பாக்காத்துமலையில் ஒரு குகையில் தங்கி தவம் புரியத்தொடங்கினார் .
ஞானதேசிகர் தவம் செய்வதை கண்ணுற்ற முத்துச்சாமி உடையார் தினம் தனது பசுமாடுகளின் பாலை தேசிகருக்கு கொடுத்து வந்தார் . உடையார் வீடு கட்டும் போது புதையல் கிட்ட உடையார் திடிரென பெரும் செல்வந்தராய் உயர்ந்தார் .


இதைக்கேள்விப்பட்ட மக்கள் தேசிகரிடம் பொருள் வேண்டி நிற்க மக்களின்
அறியாமை தொல்லையிலிருந்து விலகி,அங்கிருந்து கிளம்பி அண்ணாமலையில் கோரக்கநாதர் குளக்கரைக்கு வந்து தவமிருந்தார் . அருணாசலம் செட்டியார் என்பவர் குழந்தைப்பேருக்காக வந்து வேண்ட ஈசான்ய ஞான தேசிகர் அருளால்குழந்தைப்பேறு கிட்டியது .

 அக்குழந்தைக்கு முருகப்பர் என பெயர் சூட்டி
திருநீற்றுப்பையை கொடுத்து விட்டதாகவும் , அதை இன்று வரை வம்சாவழியாக வழிபட்டு வருகின்றனர் .

 ஞானதேசிகர் எங்கு சென்றார் பல பக்தர்கள் தேட அவர்களுக்கு அண்ணாமலையாரே காட்சி தந்து ஞானதேசிகரை திருவண்ணாமலை ஈசான்ய திசைக்கு வந்து பாருங்கள் . என கனவில் சொல்ல பின் ஞானதேசிகரிடம்

உம்பக்தர்களை ஈசான்ய திசைக்கு வரச்செய்துள்ளோம் நீவிரும் அங்கு செல்க என அண்ணாமலையார் சொல்ல ஞான தேசிகர் ஈசான்ய திசை வந்து தம்மை நாடிவருபவர்களுக்கு அருளாசி வழங்கினார் . 



 பின் அண்ணாமலையார் கருணையை வியந்து
ஞானதேசிகர் தோத்திரப்பாமாலை பாடினாராம் . ஈசான்ய திசையில் ஈசான்ய
குளத்தின் தென்கரையில் பெரிய ஆலமரத்தின் கீழ் சிவயோக சீடராய்
சமாதிநிலையில் அமர்ந்து தவமியற்றினார் .தேசிகரின் தவம் செய்யும் போது
இரண்டு புலிகள் எப்போதும் காவல் காக்குமாம் .


 தேசிகர் நிஷ்ட்டை கலைந்து அண்ணாமலையாரே நம்மை காத்து வருகிறார் என நினைத்து புலிகளை அண்ணாமலை அரசே என தடவி மகிழ்வாராம் . பக்தர்கள் வரும்போது புலிகள் வேறிடம் சென்று விடுமாம் . ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஜடன் துரை என்ற ஆட்சியர் கடும்
காசநோயினால் பாதிக்கப்பட ஞானதேசிகரின் விபரம் கேள்விப்பட்டு வந்து வணங்கி ஜடன் துரை குணமாகினாராம் .

 ஜடன்துரை உங்களுக்கு எவ்வளவு நிலம் வேண்டுமென
கேட்க

 "அப்பா எனக்கு எதுவும் வேண்டாம் . அதோ இரண்டு குழந்தைகளுடன் ஒர்குடும்பஸ்தர் இருக்கிறார் ,அவருக்கு எழுதி வையுங்கள் என அண்ணாமலையாரைநோக்கி கை நீட்டினாராம


'நான் யோகி எனக்கு எதுவும் வேண்டாமென சொல்ல .
அதன்படி அண்ணாமலையார்க்கு ஜடன்துரை நிலபுலன்கள் எழுதிக்க கொடுத்ததாக வரலாறு . இப்படி பல அற்புதங்கள் நிகழ்தியவர் ஈசான்ய ஞானதேசிகர். பக்தர்கள் ஞானக்கட்டளை என்ற நூலை இயற்றி அதனைப்பாடமாக நடத்தினர் . பின்ஈசான்ய குளக்கரையில் பர்ணசாலை அமைத்து அதுவே இன்று ஈசான்ய மடமாக
சமயத்தொண்டு புரிகிறது .

 ஈசான்ய ஞான தேசிகர் அண்ணாமலையார் தரிசனம்
பெற்று பிற்காலத்தில் அருளிய
 தோத்திரப்பாமாலை .
அண்ணாமலைவெண்பா ,
அண்ணாமலையார் வெண்பா ,
அண்ணாமலையார் கன்றி ஆகிய பாக்களை இயற்றினார் .


ஜீவசமாதி : 


தம் சீடர்கள் பலருக்கும் வேதபாடங்கள் கற்றுத்தந்து தம்
இறுதிகாலம் உணர்ந்து தாம் பரிபூரணமாகும் காலத்தை ஓலையில் எழுதி தமது ஆசனத்தின் கீழ் வைத்திருந்தாராம் .

குறித்த நாளில் ஸ்ரீ ஈசான்ய ஞானதேசிகர் தமது சீடர்களை அழைத்து ஸ்ரீ நடராஜப்பெருமானின் அறைக்கட்டுக்கு செல்கிறார் ,யாமும் அங்கு செல்ல வேண்டுமென முகமலர்ச்சியுடன் கூறினார் .பின் தேசிகர் பத்மாஷனத்தில் சின்முத்திரை தரித்து உட்கார முதன்மை சீடரான முத்துச்சாம் உடையார் சுவாமி அடியேன்களின் கதியோதோ என கேட்க

 உங்கள்குடும்பமே பழுத்த பழமாகி விட்டதே என திருவாய் மலந்தருளி பரிபூரணம்அடைந்தார் .

 ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிக சுவாமிகள் பரிபூரண பக்குவ காலம்
கலியுகம் 4930. சரியான சாலிவாகன சகாப்தம் 1751 கி.பி1829 விரோதி வருடம்
மார்கழி மாதம் 26 ஆம் நாள் குருவாரம் மிருக சீரிட நட்சத்திர நன்நாளாகும்


. ஈசான்ய ஞானதேசிகர் தினமும் ஆசிரமம் பக்கத்திலுள்ள வில்வமரத்தடி நின்றுஅண்ணாமலையாரை தரிசிப்பது வழக்கம் . சுவாமிகளை அதே இடத்தில் சமாதி வைத்தனர் . விவ்வமரத்தடியில் ஞானதேசிகர் சாமாதி கொண்ட இடமே ஜீவசமாதியாக தற்போதும் வழிபட்டு வரப்படுகிறது . தினந்தோறும் காலை முதல் இரவு வரை பூஜை வழிபாடுகள் காண ஆயிரக்கணக்காண பக்தர்கள் வருகிறார்கள் .

 முடிவுரை :


வேண்டுவோர் வேண்டும் வண்ணம் வழங்கும் வள்ளலாக ஞான தேசிகர் விளங்கி வருகிறார் . கோவிலூர் முத்துராமலிங்க சுவாமிகள் ஞானதேசிகர் சமாதியை அனைவரும் வழிபட விரும்பி ஈசான்ய மடாலயம் தோன்ற ஆவண செய்தார்கள் . ஈசான்ய மடம் 150 வருடம் கழித்து பிரமாண்டமாய் நிற்கிறது . திருவண்ணாமலை வந்து ஈசான்ய ஞான தேசிகரின் அருள் பெற்று செல்லுங்கள் .

Saturday, August 23, 2014

ஸ்ரீ சுரராஜ் சித்தர் ஜீவசமாதி ,பாரியூர்

சிவ தேடலும் சித்தர்களை தேடிய பயணமும் இனிமையானது . தம்மை காட்டிக்கொள்ள வேண்டும் என்ற எந்த அலட்டலும் இல்லாத ஜீவன் முக்தர்கள் பலரும் வாழ்ந்த புண்ணிய பூமி இது . நவகோடி சித்தர்கள் நம் பாரத மண்ணில் வாழ்த்தார்களென்ற குறிப்புகள் சித்தர்கள் புத்தகங்களில் காண்கிறோம் .

                   
                        ஸ்ரீசுரராஜ் சித்தர்

ஈரோடு மாவட்டம் கோபி செட்டியபாளையத்திலிருந்து அத்தாணி செல்லும்
வழியில் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீ கொண்டத்து காளியம்மன்
திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது .

 இத்திருக்கோவில் 1500
ஆண்டுகால பழமையானது என புராணங்கள் கூறுகின்றது . பழங்கால திருக்கோவிலை வடிவமைத்து ஸ்ரீ சுரராஜ் சித்தர் என்பவர் வாழ்ந்து வந்ததாராம் , மந்திர சாஸ்திரங்களில் பல அற்புதம் செய்து காட்டிய சித்தராவார் .

 இவருக்கு ஸ்ரீகொண்டத்துக்காளி அம்மன் காட்சி கொடுத்ததாக ஓர் குறிப்பு உண்டு .திருக்கோவில் அருகில் பட்டாரி என்னுமிடத்தில் ஸ்ரீ சுரராஜ் சித்தர்
ஜீவசமாதி அமைந்துள்ளது . சித்தர் பழங்காலத்தியவர் என்பதால் அவர் பற்றிய
அதிக குறிப்புகளோ வம்சவழிச்செய்திகளோ இல்லை என்பது வருத்தமே . இப்பகுதியைசேர்ந்த விபரமறிந்த நன்பர்கள் கருத்துரையில் விளக்கலாம் .

செல்லும் வழி: 


பாரியூர் கொண்டத்து காளியம் திருக்கோவில் பூக்கடை பகுதி கடைகளுக்கு
பின்புறம் ஸ்ரீ சுரராஜ் சித்தர் திருக்கோவில் சிறிய அளவில் அமைந்துள்ளது
. பூக்கடையில் சித்தர் கோவில் என கேட்டால் சொல்வார்கள் .

 சித்தர்ஜீவசமாதி அருகே நாகலிங்கமரம் பெரிய அளவில் பூத்துக்குலுங்க,
நெற்பயிர்கள் சூழ்ந்த அழகிய இடத்திலுள்ள ஸ்ரீ சுரராஜ் சித்தர் ஜீவசமாதி
காண வேண்டிய ஜீவசமாதிகளில் ஒன்று . பிரிதொரு சித்தருடன் உங்களை
சந்திக்கிறேன் .

 நன்றி

Friday, August 1, 2014

ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவில் .சத்தியமங்கலம்

அண்மையில் சத்தியமங்கலம் சென்றிருந்தேன் . எண்ணிடலங்கா சிவாலயங்கள் இருப்பினும் அவைகள் நம்மால் கண்டு செல்ல முடிவதில்லை என்றோர் வருத்தம் எப்போதும் நாம் இப்போது பகிர்கிற சத்தியமங்கலம் ஸ்ரீ பவானீஷ்வரர் ஆலயம்  தேடிப்பார்த்த போது கூட பதிவாக இல்லையே என வருத்தப்பட்டேன் .


சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1கி.மீ அத்தாணி சாலையில்
பவானி ஆற்றுப்பாலத்தை கடந்ததும் அழகிய ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலைஅடையலாம் . பவானி ஆற்றுப்படுகையில் அமைந்த அழகிய சிவாலயங்களில் ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவில் ஒன்றாகும் . கிழக்கு நோக்கிய அழகிய சிவாலயஅமைப்பு மற்றும் எப்போதும் வற்றாது ஓடுகிற பவானி ஆறும் அழகுக்கு அழகுசேர்க்கிற ஒன்றாகும் .

சுயம்புவாக அன்றி ரிசிகளால் தேவர்களால் பிரதிஷ்டைசெய்யப்பட்ட சிவலிங்கமாகவே தோன்றுகிறது .
 அம்பிகைக்கு ஸ்ரீ சங்கரிஎன்பதே திருநாமம் .

திருக்கோவில் முகப்பில் உள்ள பஞ்சமுக விநாயகர்
சன்னதி இதுவரை காணாத சிவாலய அமைப்பிலுள்ள விநாயகராவார் . வில்வ வனமாகஇருந்த அமைப்பே பிற்காலத்தில் சிவாலயமாக மாறியுள்ளதோ என ஓர் அமைப்பு .


வள்ளி தெய்வானை உடனமர் ஸ்ரீ முருகப்பெருமானின் சன்னதியும் பார்க்க
வேண்டிய அமைப்பாகும் . புதிய சிவாலயங்கள் தேடி வழிபடுபவர்கள் கண்டிப்பாக செல்ல வேண்டிய சிறப்பு மிகு ஆலயமாகும் . வாய்ப்பு கிடைக்கையில் வந்து தரிசித்து செல்லுங்கள் .


 ஸ்ரீ சங்கரி உடனமர் பவானீஷ்வரர் அருள் பெற
விழைகிறேன் . ஓம் சிவ சிவ ஓம்

Thursday, June 19, 2014

Fwd: ஸ்ரீ கற்பகாம்பாள் உடனமர் ஸ்ரீ கபாலீஷ்வரர் திருக்கோவில் ,மயிலாப்பூர் , சென்னை

 ஸ்ரீ கற்பகாம்பாள் உடனமர் ஸ்ரீ கபாலீஷ்வரர் திருக்கோவில்

                           ,மயிலாப்பூர் ,

 இறைவன் : ஸ்ரீகபாலீஷ்வரர் 

அம்பிகை :கற்பகாம்பாள் 


 தமிழகத்தின் தேவாரப் புகழ் பெற்ற
திருத்தலங்களில் திருமயிலையில் அமைந்துள்ள ஸ்ரீ கபாலீஷ்வரர்
திருக்கோவிலும் ஒன்று .

திருக்கோவில் ஸ்தலமரமாக புன்னை மரமும் கோவில்
முன்னே அழகிய கபாலி தீர்த்தமும் அழகே அமைந்துள்ளன . சுமார் 2000
வருடங்கள் பழமையான கபாலீச்சரம் என்றும் ,திரு மயிலாப்பூர் எனஅழைக்கபடும் கபாலீஸ்வரர் திருக்கோவில் மூலவர் சுயம்பு லிங்கமாக
அருள்பாலிக்கிறார் .

 திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசர் ,சுந்தரர்
ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலம் . தேவாரப் புகழ் பெற்ற தொண்டை
நாட்டின் சிவஸ்தலங்களில் 34 ஸ்தலமாக போற்றப்படுகிறது .

 திருக்கோவில்
திறப்பு காலை 05.00 மணிமுதல் 12. 30வரையிலும் ,
மாலை 04.00மணி முதல் இரவு
09.00மணி வரையிலும் திறந்திருக்கிறது .

 இங்குள்ள நர்த்தன விநாயகரும்
சிங்கார வேலரும் தரிசிக்க வேண்டிய சன்னதிகளாகும் .

 மூலவராகிய
சிவபெருமானை வணங்கினால் பிறப்பற்ற நிலை ஏற்படுமென்பது ஐதீகம் .

மானிடருக்கு மனநிம்மதி அளிப்பவராக சிவபெருமானும் , உடல் நோய்
நீக்குபவராக அம்பிகையும் விளங்குகிறார். அம்பிகை மயில் உருவம் கொண்டு
சிவனை பூஜித்த ஸ்தலமாகாகவும் ,முருகப்பெருமான் வேல் பெற்ற ஸ்தலமாகவும் ,பிரம்மா படைக்கும் ஆற்றல் பெற்ற ஸ்தலமாகவும் விளங்குவது தனிச்சிறப்பாகும்'.

 2000ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்த கிரேக்கர் தாலமி மல்லிதர்பா
என்றும் மயில் ஆர்க்கின்ற இடம் மயிலாப்பூர் என குறிப்பிடுவதிலேயே
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் மேன்மை நமக்கு புரிகிறது . இறந்த பூம்பாவையை
திருஞானசம்பந்தர் உயிருடன் எழுப்பினார் என்பது வரவாறு.

 முடிவுரை :


மேற்கு நோக்கிய சிவனை வழிபடுவது .1000 சிவனை வழிபடுவதற்கு சமமாகும் ,அவ்வகையில் திருமயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோவில் வந்து வணங்கி சிவபெருமானின் அருள்பெற்று உய்யுங்கள் ,நன்றி

Wednesday, June 18, 2014

ஸ்ரீ கொங்கணர் சித்தர் திருக்கோவில் . அலைவாய்மலை , அத்தனூர்புதூர்

அன்மையில் கொல்லிமலை சென்றுவிட்டு வருகையில் அழகியதோர் சித்தர் ஆலயம் கண்டேன் ,சித்தர்கள் கோவில்கள் ஜீவசமாதிகள் பல இருந்தும் பதிவுகளாக பிளாக்கில் இல்லாததால் நிறைய பேர்க்கு தெரியாமல் போய்விடுகிறது .


ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் அருகில் அலைவாய்மலை அடிவாரத்தில் ஸ்ரீ கொங்கணசித்தருக்கு தனிக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது . ராசிபுரம் அடுத்த பொன்மலை .உலைவாய்மலை .அலைவாய் மலையில் ஸ்ரீ சித்தேஸ்வரர் திருக்கோவில் ஒன்றும் அதில் உள்ள சித்தர்சுவாமிக்கு 4 கரங்கள் உள்ளதாம். இத்திருக்கோவில் கொங்கணசித்தர் ,போகரால் உருவாக்கப்பட்டதாக வரலாறு .


இதன் அருகே கூனவேலம் பட்டி அருகில் இராவணன் சகோதரி சூர்பனகைக்கு
திருக்கோவில் உலகிலேயே ஒரே கோவில் தனிக்கோவிலாக அமையப்பெற்றுள்ளதென அப்பகுதி நன்பர் சொன்ன தகவல் ஆச்சர்யத்தின் உச்சம் , ஸ்ரீ கொங்கணர் சித்தர் கோவில் இராசிபுரம் வெண்ணந்தூர் சாலையிலேயே இருப்பதால் எளிதில்
தரிசிக்கலாம் .

 மூலவராக ஸ்ரீ கொங்கணசித்தர் இருப்பதால் இங்கு வழிபடுவோர்க்கு ஸ்ரீ கொங்கணரின் அருள் முழுமையாக கிட்டும் . 



திருக்கோவில் சுற்றி போகர் ,அகத்தியர் சிலைகளும் அமைந்துள்ளது . ஸ்ரீ கொங்கணர் வாழ்ந்த திருப்பூர் மாவட்டம் ஊதியூர் மலை அடுத்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அலைவாய் மலை என ஸ்ரீ கொங்கணரின் வாழ்வியல் தொடர்ச்சி தமிழகத்தில் கொங்கணர் பலகாலம் வாழ்ந்து ,சித்தமருத்துவம்
,பாஷாணக்கட்டுகள்,ரசவாதம் ஆகிய துறைகளில் உயர்ந்து நின்று திருப்பதி
திருமலையில் ஜீவசமாதியாகியுள்ளார் என்பது புலானாகிறது .

 மேலும் இங்கு உலைவைத்து ஊதியதிற்கான சான்றுகளும் சித்தர்கள் குகைகளும் உள்ளதாக கூறுவது ஆய்வுக்குரியது . அதனாலேயே உலைவாய்மலை என அழைக்கப்படுகிறதாம் .எப்படியோ புதிய சித்தர் ஆலயம் கண்டதில் மகிழ்ச்சியே . அப்பகுதிக்கு செல்லும் வாய்பிருப்பின் ஸ்ரீ கொங்கண சித்தர் அருள் பெற்றுச்செவ்லுங்கள். நன்றி

 முடிவுரை : 


அலைவாய் மலை ராசிபுரம் பகுதிகள் நமக்கு புதிது ,குறை
இருப்பின் சுட்டிக்காட்டவும் . இப்பகுதி சித்தர் ஆலயங்கள் ,பதிவுகள்
இருப்பின் லிங்க் கொடுங்கள் , மறுபடியும் ஓர் புதிய பதிவுகளுடன்
சந்திக்கிறேன் .நன்றி

ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி கொல்லிமலை

கொல்லிமலை ஸ்ரீ அறப்பளிஸ்வரர் திருக்கோவில் நேர் எதிரே சுமார் 720
படிக்கட்டுகள் செங்குத்தாக இறங்கிச் சென்றால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியை
தரிசிக்கலாம் .திருக்கோவில் வடபுறத்தில் 5 நதிகள் ஒன்றாக கூடி வருவதால்
பஞ்ச நதி என அழைக்கப்படுகிறது .

 பின் ஆகாய கங்கையாக மாறி 150 அடி
உயரத்திலிருந்து அழகாக நீர்வீழ்ச்சியாக விழுகிறது . அறப்பளீஸ்வர் மீன்
உருவமாக உள்ளார் என்பது புராணம் உணர்த்தும் உண்மையாகும் . ஆடி 18 அன்றுபெருங்கூட்டம் இங்கே வந்து சந்தோஷமாக குளித்து ஸ்ரீ அறப்பளிஸ்வரரை வணங்கி
மகிழ்கிறார்கள் .

ஏப்ரல் மே ,ஜீன் மாதங்கள் குறைந்த அளவே நீர் வருகிறது
. ஜுலை மாதங்களில் மழைக்காலங்களில் சீசன் ஆரம்பிக்கிறது .ஆகாயகங்கைநீர்வீழ்ச்சி துறையூர் முசிறி சென்று காவிரியுடன் கலக்கிறது . 5 ரூபாய்டிக்கெட் கொடுத்து படிகளில் செங்குத்தாக இறங்கி சென்றால் பல மூலிகைகள்,இதமான குளிர்ச்சி , நீண்டு உயர்ந்த சுற்றிலும் மலை என ஏதோ குகைக்குள்செல்வது போன்ற உணர்வு நமக்கு .

 இங்குள்ள 720 படிகள் தாண்டியதும் உயர்ந்த இடத்திலிருந்து அருவி கொட்டுவது காணற்கரிய காட்சி . இங்குள்ள பாறைகளில் வழுக்கி விழுபவர் பலருண்டு , ஆகவே குளிக்க செல்பவர்கள் ஆல்கஹால்களை அளவே உபயோகிப்பது நன்று . இரண்டு நாள் பயணமாக வருவது நல்லது. இங்கே சில ரிசார்ட்டுகள் தங்கவும் அமைந்துள்ளது .

 படகு இல்லம் ,மூலிகைப்பண்ணை என பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. மலையில் விளையும்தாணியங்கள் இரண்டு இடங்களில் விற்கப்படுகிறது . திடிரென வரும் வாகனங்கள்
70 கொண்டை ஊசி வளைவுகள் என சில ஆபத்தும் உள்ள இடம் கவனமாக செல்வது நலம். சீசன் உள்ள நாட்களில் சென்றால் குளித்து மகிழ உகந்த இடமாககொல்லிமலை ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது .

 பார்க்க வேண்டிய இடம். ரசித்து கருத்திடுங்கள். நன்றி

ஸ்ரீ அறப்பளிஸ்வரர் திருக்கோவில் ஸ்தல வரலாறு

"அடியவர்கு அமுதமே ! மோழை பூபதி பெற்ற அதிபன் ,
 எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைத்தரு
சதுரகிரி வளர் அறப்பளிஸ்வர தேவனே !

                                                                                                          (அறப்பளிஸ்வர சதகம் )


 ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனமர் அறப்பளிஸ்வரர்                                              திருக்கோவில் ஸ்தலம் ,


            பெரிய கயிலூர் ,வளப்பூர் நாடு , கொல்லிமலை ,



அழகிய இத்திருக்கோவில் நாமக்கல் வட்டம் ,நாமக்கல் மாவட்டத்தில்
அமைந்துள்ளது .


 மூலவர் : 

ஸ்ரீ அறப்பளீஷ்வரர் (சுயம்பு )

 அம்பிகை :

அறம் வளர்த்த நாயகி

 வழி :


சேலத்தில் இருந்து ராசிபுரம் வழியாக 90கி.மீ
தொலைவிலும் நாமக்கல்லில் இருந்து 65 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள்ளது .சுமார் 70 கொண்டை ஊசி வளைவுகள கொண்ட ஆன்மீக மற்றும் சுற்றுலா தலமாக அமைப்பெற்றது கொல்லி மலையாகும் . இராசிபுரம் நாமக்கல் மாவட்டத்தில் 17மைல் நீளம் உடையதாக பரந்து விரிந்த பரப்பளவில் அமையப்பெற்ற மலையாகும் .


2000ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்திய புலவர்களால் பாடல் பெற்ற
ஸ்தலம்."கொல்லி ஆண்ட குடவர் கோவே " என சிலப்பதிகார வரிகளால் இது சேரர்கள் வம்சத்திய காலத்திலேயே புகழ் பெற்றதென அறியலாம்.

அறப்பளிஸ்வரர் :

 வள்ளல்வல்வில் ஓரி ஆண்ட கொல்லிமலையின் ஒர் பகுதியே அறப்பள்ளி என்பதாகும் .அறப்பள்ளியில் சுயம்புவாக எழுந்தருளிய சிவபெருமானுக்கு அறப்பளிஸ்வரர்எனப்பெயர் பெற்றது .

 1300ஆண்டுகளுக்கு முன்னர் தேவாரத்தில்
திருஞானசம்பந்தரும் ,திருநாவூக்கரசர் பெருமானும் பாடல் பெற்ற ஸ்தலமாகும். அறப்பள்ளி என்கிற தேவாரத்தில் காணலாம்.

புராணப்பெருமை : 


அறைப்பள்ளி திருக்கோவில் அமைந்துள்ள இடத்தில் விவசாயி
ஒருவர் கலப்பையினால் உழுதபோது சிவலிங்கம் சுயம்புவாக தோன்ற பின்
திருக்கோவில் கட்டி பூஜைகள் ஆரம்பிக்கபட்டதாக வரலாறு . தற்போதும்
சிவலிங்கத்தின் உச்சியில் காயம்பட்ட தழும்பு உள்ளது . ஆலயத்தின்
அருகிலுள்ள பஞ்சநதியில் மீனைப்பிடித்து மூக்கு குத்தி விளையாடுகிறனர்
அதற்கு ஓர் பழங்கால கதையும் உண்டு .

 ஒருவர் மீன் சமைக்கும் போது கொதிக்கிற குழம்பிலிருந்து உயிருடன் மீன்கள் தாவி ஓடியதாக குறிப்புகளுண்டு " அறுத்த மீனைப் பொருத்தி உயிர்பித்த அறப்பளீஷ்வரர் என பெயர் வழங்கப்படுகிறது .

 அம்பிகையும் தலச்சிறப்பும் : 


 தாயம்மை என்றும்,அறம் வளர்த்த நாயகி என்றும் அம்பிகைக்கு பெயருண்டு . மூர்த்தி,ஸ்தலம்,தீர்த்தச்சிறப்புகளை கொண்ட ஸ்தலமாகும் . ஓர் அழகிய சிவாலய அமைப்புடன்விளங்குகிற ஸ்ரீ கொல்லிமலை அறப்பளிஸ்வரரை இராஜராஜ சோழனின் பாட்டியார்செம்பியன் மாதேவியார் ,கண்டராத்தித சோழர் ஆகியோர் வந்து வணக்கியதாககல்வெட்டு குறிப்புள்ளது .

 ஆடி 17,18,19 ஆகிய 3 நாட்களும் ஆண்டு
திருவிழாவாக கொண்டாடப்படுகிறது .

 திருக்கோவில் திறப்பு நேரம் : 


காலை 7.00மணி முதல் மதியம் 1.00மணிவரை
 பிற்பகல் 2.30மணி முதல் இரவு 7.00மணி
வரை திறந்திருக்கும் . திருவிழா காலங்களில் காலை 6.00மணி முதல் இரவு
10.00மணி வரை திறந்திருக்கும் .

 முடிவுரை : 


 அருணகிரி நாதர் ,திருநாவுக்கரசர் ,திருஞான சம்பந்தர் ஆகியோரால் பாடல் பெற்றதேவாரத்திருத்தலங்களில் ஒன்று .பல்வேறு மூலிகைகளை கொண்ட அற்புத மலை ,உடன் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி என எங்கும் பசுமையை போர்த்திக்கிடக்கிற கொல்லிமலை ஓர் அரிய பொக்கிசம் , சுயம்புவான அறப்பளீஷ்வரரை வணங்கி இன்புருங்கள் .நன்றி

Sunday, April 13, 2014

ஸ்ரீ பெரியநாயகி உடனமர் மகிழீஸ்வரர் திருக்கோவில் ,பெருந்தலையூர்,

                                    ஸ்ரீ மகிழீஸ்வரர் திருக்கோவில்    



அமைவிடம் :

 ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் பெருந்தலையூர் திருக்கோவில் அமைந்துள்ளது . இது ஈரோட்டிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் கவுந்தப்பாடியில் இருந்து 7 கி.மீட்டர் தொலைவில் பெருந்தலையூர் அமைந்துள்ளது .

 கொங்கு நாட்டின் புகழ் பெற்ற பவானி ஆறு சத்தியமங்கலத்தில் இருந்து பவானி கூடுதுறை வரைஆற்றுப்படுக்கையில் 5 புகழ்பெற்ற சிவாலயங்கள் அமைந்துள்ளது . பழங்கால சிறப்பு பெற்ற சுயம்பு லிங்கமான ஸ்ரீ மகிழீஸ்வரர் திருக்கோவில் 2000ஆண்டுகள் பழமையானது .



சங்ககால நூலான நற்றிணையின் ஆசிரியரான பெருந்தலை
சாத்தனால் இவ்வூரின் பெருமையை குறிப்பிட்டுள்ளது. சிவபெருமானுக்கு
திருமகிழ்வனமுடைய நாயனார் ,ஸ்ரீ பிரகன்நாயகி என்ற திருநாமங்கள் உண்டு .

பழங்காலத்தில் மகிழமரங்கள் அதிகமிருந்ததால் சிவபெருமானுக்கு இந்த
திருநாமம் அமைந்திருக்கிறது . பாண்டியர்காலத்தில் உருவான திருக்கோவில்பின் நாயக்கர்கள் காலத்தில் விரிவாக்கம் பெற்றுள்ளது .

 திருக்கோவில்அமைப்பு :

திருக்கோவில் முகப்பில் ஸ்ரீ விநாயகர் சன்னதியும் அதை கடந்து
சென்றால் கிழக்கு நோக்கிய நீண்ட பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய
சுயம்புலிங்கமாக ஸ்ரீ மகிழீஸ்வரபெருமான் அருள்பாலிக்கிறார் .
திருக்கோவில் எதிரில் அழகிய பவானி ஆறு ஒடுகிறது .

திருக்கோவில்உள்முகப்பில் முன்னே கொடிமரம் , ஸ்ரீ நந்தீசர் வலப்புறம்
ஸ்ரீதட்சிணாமூர்த்தி ,சண்டிகேசர் , நவகிரகங்கள் , காலபைரவர் என
திருக்கோவில் பழங்கால சிவாலய அமைப்பை பறைசாற்றுகிறது . அருகே அம்பிகைஸ்ரீ பெரியநாயகிக்கு தனி சன்னதி அமைந்துள்ளது .

 திருக்கோவில் அருகேஅருள்மிகு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஸ்ரீ பொன்னாச்சியம்மன் ஸ்ரீ கூத்தாண்டைமாரியம்மன் ஆகிய திருக்கோவில்கள் அமைந்துள்ளது.

முடிவரை :

பழங்கால சிவாலயங்களில் சிறப்பு பெற்ற ஸ்ரீ மகிழீஸ்வரர் திருக்கோவில் ஒருமுறேயேனும் தரிசிக்க வேண்டிய ஆலயம் .நன்றி

Friday, April 11, 2014

சித்தர்கள் அருளிய எண்ணைய் குளியல்

பழங்காலத்தில் மனிதன் நோயின்றி வாழ பல வழிகளை சித்தர்கள்
எடுத்துரைத்தார்கள். எண்ணைய் தேய்த்து குளித்தால் உடலுக்கு நல்லது என
அதற்கான வழிமுறைகளை உருவாக்கினார்கள் . அதனாலேயே அவ்வையார் சனி நீராடு என எடுத்துரைத்தார்கள் .

 சரி சனி நீராடு என சொல்லிவிட்டால் போதுமா ?
அதற்கான சித்தர்கள் கூறிய வழி என்ன என்பதை விளக்கவே இந்த பதிவு !


தயாரிப்பு முறை :

 முதலில் நல்லெண்ணெய் 200 மில்லியில் 20 கிராம்
சீரகத்தை போட்டு லேசாக சூடாக்கவும் . பின் இளஞ்சூடானதும் எடுத்து
சீரகத்தை வடிகட்டி ஆற வைத்து உடலின் தலையில் ஆரம்பித்து எல்லா
இடங்களிலும் தேய்த்து நிழலில் உட்காரவும் .

 வெயிலுக்கு வந்தால் உடலில் எண்ணைய் உள்ளே இறங்காமல் வெளியேறி எண்ணெய் குளியலை பயனில்லாமல் போகும் .காலை சூரிய உதயமான 6 மணிமுதல் 8 மணிக்குள் நமக்கு உகந்த ஒரு மணிநேரம்
எண்ணையில் உடலை ஊறவைக்கவேண்டும் .

பின் பெரிய அண்டாவில் சுடுதண்ணீர் இளஞ்சூடாக காய்ச்சி குளிக்க வேண்டும். அரப்பு ,சீயக்காய் தலைக்கு தேய்த்து குளிக்க உடல் குளிர்ச்சியாகும் . குளித்த பின்பு 200 மில்லி இளஞ்சூடான தண்ணீர் அருந்த உள்சூடு சமப்படும்.

எண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நாட்கள்

ஆண்கள் :புதன் ,சனி

 பெண்கள்  :செவ்வாய் ,வெள்ளி

 எண்ணெய் தேய்த்து குளித்த அன்று ஆகாதவை : பழைய சாதம்
, மோர் ,தயிர் ,இளநீர் போன்ற உடலை குளிர்ச்சி ஊட்டம் பொருட்கள் ஆகாது .
இவைகளை சாப்பிட்டால் சளி காய்ச்சல் வர வாய்ப்புகளுண்டு ..

சரி எண்ணைய் குளியல் அன்று என்ன சாப்பிடலாம் ?

 சூடான உணவு வகைகள் , மட்டும் சாப்பிடவும் , அன்றைய தினம் உடலுறவு கொள்வதால் உடல் தளர்ச்சியுறும் .ஆக அதையும் தவிர்த்து உடலை மேன்மையுடையதாய் ஆக்குங்கள் .

 எண்ணெய்  தேய்த்து குளிப்பதால் உண்டாகும் நன்மைகள் :

உள்சூடு கணச்சூடு சமனாகிறது .அல்சர் போன்ற வயிற்று புண்கள் மெல்ல சரியாகிறது . சரிரம் எண்ணெய் படுவதால் மூலம் போன்ற கொடிய நோய்கள் உருவாகாது. பொதுவாக சூட்டினால்உண்டாகும் நோய்கள் உருவாகமல் உடலை பாதுகாக்கிறது .

யார் எண்ணெய்தேய்த்து குளிக்ககூடாது :

சைனஸ் , ஆஸ்துமா , காசநோயளிகள் சித்த
மருத்துவர்களின் ஆலோசனைப்படு எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்

முடிவுரை :

சித்தர்கள் சொல்லிச்சென்ற எண்ணெய் தேய்த்து குளிக்கும் முறையில் நான்
அறித்தவற்றை உங்களுக்கு கூறியிருக்கிறேன் . மேலும் தகவல்கள் விட்டு
இருப்பின் விரிவாக்கப்படும் ,நீங்களும் பின்னூட்டத்தில்
கருத்துரையிடுங்கள் . மனிதன் நோயில்லாமல் வாழ வேண்டும் .

எண்ணெய் குளியல் தானே என அலட்சிய படுத்து பலர் பைல்ஸ் போன்ற நோய்களில் சிக்கி அவதிப்படுகின்றனர் . 48 சனிக்கிழமைகள் நீங்களும் எண்ணெய் தேய்த்துகுளியுங்கள் , தேகம் தங்கமாக மின்னும் . நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
நன்றி

Tuesday, January 28, 2014

அழகிய கொடிவேரி

                                                    kodiveri dam 

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலாத்தலங்கள் இருப்பினும் அழகிய
அணைக்கட்டாக கொடிவேரி அணைக்கட்டு அமைந்துள்ளது .

 அமைப்பு :

பவானி ஆறுபவானி சாகர் அணைக்கட்டில் இருந்து வருகிற ஆற்றின் தடுப்பணையே பவானி சாகர் அணைக்கட்டாகும் .

 ஈரோட்டில் இருந்து சத்திய மங்கலம் செல்லும்
வழியில் 45 வது கி.மீ தொலைவிலும் கோபி செட்டிபாளையத்திலிருந்து 15 கி.மீ
தொலைவிலும் கொடிவேரி அமைந்துள்ளது . 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதடுப்பணையாகும் .

 அணையின் முகப்பில் நுழைவுச்சீட்டை வாங்கி பின் உள்ளே சென்றால் கிளை வாய்க்காலும் அழகிய மரங்களும் ரசித்து சென்றால் ஸ்ரீ அணை முனியப்பன் திருக்கோவிலை தரிசித்து அருகே சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க கோபுரம் உள்ளது அதில் மேல் ஏறி கொடிவேரி அணையின் முழு அழகும் கரும்பு தோட்டங்கள் நெல் வயல்கள் எங்கும் பசுமையை வாரி இறைத்திருக்கிறது இயற்கை .

அங்கே அணைக்குள் உள்ளே கூட்டிச்செல்ல பரிசல்கள் தயாராக உள்ளது . சிலர்அதில் ஏறி உலா வருகிறார்கள் . அங்கே இருந்து சற்றே கீழ் இறங்கி சுற்றி
வந்தால் சிறிய பூங்காவும் குளிக்குமிடம் வருகிறது . ஆனந்த மான குளியல்
ஆர்பரிக்கும் நீர் என கண்கவர் காட்சியாக கொடிவேரி அணை அமைந்துள்ளது

பாதுகாப்பு தடுப்பு கம்பி தாண்டி செல்வது விபரீதம், சேட்டை செய்யாமல்
அமைதியாக குளித்து வருதல் நல்லது . கொடிவேரி அணைக்கட்டில் பிடிக்கிற
மீன்கள் இங்கேயே வறுத்தும் ,பொறித்தும் கொடுக்கிறார்கள் . அசைவ
பிரியர்களுக்கு கொண்டாட்டமான இடம் .

 அழகிய அணைக்கட்டும் ஆனந்தக்குளியலும் அனுபவிக்க வேண்டுமெனில் கொடிவேரி வந்தால் கிட்டும் .பவானி ஆறு பவானி கூடுதுறை வந்து காவிரியுடன் இணைத்துக் கொள்கிறது .வாய்ப்பு கிடைக்கும் போது வந்து மனதை இதமாக்கி செல்லுங்கள் .

 நன்றி

Monday, January 20, 2014

அருள்மிகு பாபநாசசுவாமி திருக்கோவில் ,பாபநாசம் அம்பாசமுத்திரம் , திருநெல்வேலி

         sribapanasaswamy temple history,bapanasam,

                   Ampasamuthiram thirunelveli



சுயம்பு லிங்கங்கள் பலவினு மாதியாய்த் தொல்லோ,
ரியம்ப வாய்ந்ததுபாவநாசப்பெயரி லிங்கம்,
 வியந்தி ருப்பது தமிழ் வரைச் சாரலில் வெங்கட்,
கயந்தி ரைக்கரத் தலைத்தெழும் பொருநை மேல்கரையில்


 திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் பாபநாசம் என்னுமிடத்தில் பொதிகைமலை அடிவாரத்தில் தாமிரபரணி அழகிய சாரலில் அமைந்த 274 சிவாலயங்களில் பழமையானதும் அகத்தியரால் வணங்கப்பட்ட அற்புத சிவாலயமாகும் .



தன்னிடம்வந்து வழிபட்டவர்களின் பாவங்களை நாசம் செய்து விடுவதால் பாபநாசமாக்கிற அற்புற சிவஸ்தலம் .பழங்காலத்திய சுயம்பு லிங்கம் எல்லா சிவலிங்கத்திற்கு முந்தையது என மேற்கண்ட பாட்டில் அறியலாம் .

 அம்பா சமுத்திரத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலும் , திருநெல்வேலியில் இருந்து 1. 30 மணி நேர பயண  தூரத்தில் அமைந்துள்ளது .

 திருக்கோவில் அமைப்பு :


 பொதிகைமலையிலிருந்து தென் வடலாக ஓட அதன் கரையில் கிழக்கு பார்த்த வகையில் பாபநாசசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது . திருக்கோவில் 2000ஆண்டுகள் பழமையானதென்றும் விக்கிரமசிங்க பாண்டியன் ஆட்சிக்காலத்தில் உருவானது என ஆய்வுகள் கூறுகின்றது . 


பாவநாசலிங்கர் மூர்த்திகளின் வேறு பெயர்கள்=

பாவநாசலிங்கர் ,வைராசலிங்கர் ,பழ மறை நாயகர் ,முக்காளமூர்த்தி
.பரஞ்சோதிலிங்கர் ,ஆகியனவாகும்

 ஸ்தல சிறப்புகள் : 


மனிதன் அறிந்தும் அறியாமையாலும் செய்கிற பாவங்களை அகற்றுகிற ஸ்தலமாக இருப்பதால் பாவ நாசம் ஆகிவிடுவதே மருவி பாபநாசமாகி சிறப்பு பெற்று விளங்குகிறது .

ஸ்ரீ அகத்திய சித்தருக்கு சிவபெருமான் திருமணக்காட்சியை தந்தருளிய ஸ்தலமாகும் .அம்மாவசை காலங்களில் பாபநாசம் எதிருள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க பலநற்பேறுகள் கிட்டும் . இத்தலம் பாடல் பெற்ற ஸ்தலமாகும் .

 ஸ்தலவிருட்ஷம் : 

முக்களா விருட்ஷம்

 தீர்த்தங்கள் : 


தாமிரபரணி எதிரே ஓடுகிறது. இது அகத்தியரால் உருவாக்கப்பட்டது . கல்யாண தீர்த்தம்,வைரவத்தீர்த்தம் ,வானதீர்த்தம் கோவிலுக்கு தென் மேற்கில் உள்ளது .கலியாண தீர்த்தம் அகத்தியர் திருமணக்காட்சி தந்த இடமாகும் . வான தீர்த்தம் ஆடி அமாவசையில் மக்கள் நீராடுவதாகும் . தாமரை தடாகத்தில் சித்திரை விசுத் திருநாளில் தெப்பத்திருவிழா நடைபெறும் .

 ஸ்ரீ அகத்தியர்ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் :


 பாபநாசம் ஸ்ரீ பாபநாசசுவாமி கோவிலுக்கு மேற்கே 2 கி.மீ தொலைவில் பொதிகை மலை அடிவாரத்தில்அமைந்துள்ளது . பாபநாசம் செல்பவர்கள் முடிந்தால் இத்திருக்கோவிலையும் தரிசித்து ஸ்ரீ முருகப்பெருமான் அகத்திய சித்தர் ஆகியோரது ஆசிர்வாதம்பெற்று வரலாம் .இங்கு அழகிய நீர்வீழ்ச்சி ஒன்றும் அமைந்துள்ளது .


திருக்கோவில் நடைதிறப்பு =

 காலை 0630 முதல் 0100 வரையிலும் மாலை 0430
முதல் 0800 வரை திறந்திருக்கும் . விஷேச நாட்களில் காலை 06. 00 முதல்
இரவு 08.00வரை திறந்திருக்கும் . தினமும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது .
பங்குனிமாத தேர்த்திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.

அகத்தியர்திருமணக்காட்சி பெறுதல் :


சிவபெருமான் பார்வதியை திருமணம் செய்ய கைலாயமான
இமயமலையில் தேவர்களும் முனிவர்களும் கூடியதால் பூமியின் வடபுறம் தாழ தென்புறம் உயர்ந்தது.

உடனே அகத்தியரை அழைத்த சிவன் உடனே நீவீர் சென்று பொதிகை மலையில் தங்குங்கள் பூமி சமமாகும் எனக்கூற ஸ்ரீ அகத்தியர் சிவபெருமானிடம் தாங்கள் திருமண கோலத்தை எப்படி நான் காண்பேன் எனக்கூறஅப்போது  சிவன்

''பொதிகை மலையில் அகத்தியருக்காக சித்திரை முதல் நாள் காட்சிஅளிப்பேன் ''


எனக்கூற அதுபோல அகத்தியர் பொதிகை மலை வந்ததும் பூமி சமமானது.இறைவன் திருமணக்கோலத்தில் பாபநாசத்தில் அகத்தியர் கண்டுகளித்தார் .


நமச்சிவாயக்கவிராயர் : 


இவர் அம்பிகை உலகம்மையின் அடியாராக அம்பிகையை
பாடி வழிபட்டவர் . அம்பிகையை நேரில் தரிசித்த அருளாளர் .

 முடிவுரை :

சிவபெருமானின் 274 தேவராத்திருத்தலங்களில் பாபநாசமும் ஓன்று .
பாபநாசத்தில் வந்து வழிபடுவோருக்கு பாவங்கள் நீங்கி சிவனின் திருமண
கோலம் காண்போர்கள் இல்லத்தில் எந்நாளும் மங்கலங்கள் பெறுவர் என்பதில்
ஐயமில்லை .

ஓம் சிவ சிவ ஓம்

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...