Friday, July 29, 2011

Arulmigu gurunathaswamy temple anthiyur


குருநாதசாமி திருக்கோவில் அந்தியூர் திருப்பணி துவக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் அந்தியூருக்கு வடக்கே 2 வது கி.மீட்டரில் அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் வழியில் உள்ள புதுப்பாளையத்தில் உள்ள 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த குருநாதசாமி திருக்கோவிலுக்கு மகாமண்டபம்,சபாமண்டபம்.




பிரகார மண்டபம் கட்ட 50,50,000/ ரூபாய் ஐம்பது லட்சத்து ஐம்பதாயிரம் மதிப்பீட்டில் கட்ட இறை அருள்வாக்கின் படி துவங்க இருப்பதால் நன்கொடைகளை மக்களிடம் எதிர்பார்க்கும் கோவில் நிர்வாகத்தால் எதிர்பார்க்கப்படுகிறது.



நன்கொடைகள் செக், D.D M.O அனுப்ப வேண்டிய முகவரி THE EXCUTIVE OFFICER AND THE HERIDITARY TRUSTEE, ARULMIGU GURUNATHASWAMY THIRUKKOIL THIRUPPANI, PUDUPPALAYAM, ANTHIYUR -638501


உங்களால் முடிந்த தொகையை அனுப்பி அருள்மிகு குருநாத சாமி அருள் பெற அன்புடன் அழைக்கப்படுகிறது. இந்த 2010 ஆண்டு ஆடி மாத இறுதியில் 10.8.2011 அன்று புதன் கிழமை தொடங்கி 4 நாட்கள் பிரமாண்டமாக மாட்டுச்சந்தை,குதிரைச்சந்தையுடன் அருள்மிகு குருநாதசாமி பண்டிகை தொடங்குகிறது.

நம் இணைய பிளாக்கர்களையும்,வாசகர்களையும் வருக வருக என வரவேற்கிறேன். வந்து விட்டு முடிந்தால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். வாய்ப்பு இருந்தால் சந்திப்போம். திருவிழா முடித்ததும் திருப்பணி துவங்கும்.

இந்த வருட குருநாத சாமி பண்டிகைய பார்த்து விட்டு நல்ல தகவல்களை பகிரலாம்.அந்தியூர் குருநாதசாமியை பற்றி மேலும் அறிய இதே பிளாக்கில் உள்ள குருநாதசாமி வரலாறு பாகம் 1,2,3, இடுகைகளை பார்க்கவும் நட்புடன் குரு.பழ.மாதேசு.

Wednesday, July 27, 2011

அருள்மிகு தங்கம்மன் திருக்கோவில் ஆலயம் கொடுமணல்,தம்மரெட்டி பாளையம் கிராமம் ARULMIGU THANGAMMAN KOVIL ,KODUMANAL, THAMMAREDDIYUR VILLAGE ,KANGAYAM TALUK, THIRUPPUR D.T




அருள்மிகு தங்கம்மன் திருக்கோவில்

வரலாற்று அகழ்வராய்ச்சிக்கு புகழ் பெற்ற குறிப்பு நாடு கொடுமணல் பகுதில் நொய்யல் ஆற்றங்கரையில் அமர்ந்துள்ளது.


திருக்கோவில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் தம்மரெட்டிபாளையத்தில் குடி கொண்டு கொங்கு வேளாளர் இனத்தில் சேரன்,பாண்டியன்,பனங்காடை குலத்தவர்களுக்கும், தேவர் குலத்தவரில் கணக்கன் கூட்டத்தாருக்கும் குலதெய்வமாகிய அருள் மிகு தங்கம்மன் கோவில் வரும் பக்தர்களின் குறை தீர்க்கும் அம்பிகையாக விளங்கி வருகிறது.


மூலவராக தங்கம்மன் சப்த கன்னிமார் வடிவில் அழகாக அமர்ந்திருக்கிறது.அருகிலேயே பிரமாண்டமான அக்கினீஷ்வரர் சன்னதியும் அலங்கரிக்கிறது. வெண்நாகப்புற்று சன்னதி தங்கம்மன் ஆலயத்தின் பின்புறம் அமைந்துள்ளது.


பூஜை விபரங்கள் ; பிரதி அமாவசை காலை 11.00 மணிக்கும் பிரதி பெளர்ணமி அன்று மாலை 06.00மணிக்கும் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். இந்த நாட்களில் வழிபாட்டுக்கு வரும் பக்தர்களுக்காக ஆலயத்தில் அன்னதானம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


அருகிலுள்ள அக்கினீஷ்வரருக்கு பிரதோஷ நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

போக்குவரத்து வசதி ;

தினமும் தங்கம்மன் கோவில் வழியாக செல்லும் பேருந்துகள் திருப்பூர் பழைய பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் நேரங்கள் ;


காலை 8.20 SRRBS பஸ் ஈரோடு ,8.45 ஆனந்த் பஸ் கொடிமுடி 0945 பஸ் நெம்பர் 47 கீரனூர் 10. 50 மணிக்கு 4B/47Bபஸ் படியூர்

மதிய நேரத்தில் திருப்பூரில் இருந்து செல்லும் பஸ்கள் 1.20 ஆனந்த் பஸ் கொடுமுடி 3.00 மணிக்கு 4B/47B படியூர் 3.15 SRRBS ஈரோடு ஆகியவையும்


மாலையில் திருப்பூரில் இருந்து தங்கம்மன் கோவிலுக்கு வர 6.20 ஆனந்த்பஸ் கொடுமுடி 6.50 பஸ் நெ 20 நால்ரோடு இரவு 9.10க்கு பஸ் நெ 20 நால்ரோடு ஆகிய பஸ் வசதிகள் உள்ளன.

வருடாந்திர பூஜை ; தமிழ்மாதம் ஆடிமாதக்கடைசியிலும் ஆகஸ்ட் முதல் வாரத்திலும் சிறப்பாக நடைபெறும். அது வருகிற கர வருடம் ஆடிமாதம் 25 ஆம் நாள் 10.08.2011 புதன் கிழமை அன்று சிறப்பாக பொங்கல் விழா நடைபெறும்.



அருள்மிகு தங்கம்மன் கோவிலுக்கு பூஜை, அன்னதானத்திற்கு நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும் ; கொடுமணல் அருள்மிகு தங்கம்மன் ஆலய நற்பணி சங்கத்தினர்,, தம்மரெட்டிபாளையம் அஞ்சல், காங்கேயம் வட்டம் திருப்பூர் வட்டம் .


தொலை தொடர்புக்கு ;-STD 04294

திருக்கோவில் 258252,293278,
செயலாளர் வீடு 258224 258101

செயலாளர் அழைபேசி -;9486047324

பொருளார் அழைபேசி -9360194485.

காங்கேயம் நால்ரோட்டில் இருந்து 10கி.மீட்டர் தொலைவில்
உள்ள அருள்மிகு தங்கம்மன் கோவிலுக்கு வாருங்கள்.

நம்பிக்கையுடன் வழிபடுங்கள்.
வாழ்வில் எல்லா உயர்வுகளும் பெறுங்கள் .

திரக்கோவில் ஸ்தல வரலாற்றுடன் இடுகை விரிவாக்கப்படும்.
நட்புடன் குரு.பழ.மாதேசு.
குருவரெட்டியூர்

Monday, July 25, 2011

Arulmigu balathantayuthapani temple,kanjikovil,perundurai


அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் காஞ்சிக்கோவிலில் இருந்து நசியனூர் செல்லும் வழியில் 1 கி.மீட்டரிலும் நசியனூரில் இருந்து சுமார் 5 கி.மீட்டர் தொலைவில் கனககிரி குமரன் மலை என்னும் இடத்தில் அழகிய குன்றில் அமர்ந்துள்ள அற்புதமான முருகர் ஆலயமாகும்.



அருகில் கொங்கு வேளாளர் மெட்குலேசன் பள்ளி அமைந்துள்ளது.

திருக்கோவில் அடிவாரத்தில் வைத்திய விநாயகர் சன்னதியும் ஸ்தலமரமாக 500 வருட பழமை வாய்ந்த நகப்பழமரமும் அதன் அடியே நாகர் அமர்ந்திருக்க அருகில் இடும்பன் சன்னதியும் யோகி அருளானந்த சுவாமிகளின் ஜீவசமாதியும் அவர்கென சன்னதியும் அதை "ஓம் கார மண்டபம் " என்று அழைகிறார்கள்.



இச்சன்னதியில் அமையாய் அமர்ந்து கேட்க ஓம் எனும் ஒலி கேட்பதை உணரலாம் .பின் சுமார் 50 நுட்பமாய் கருங்கல் மலையில் செதுக்கிய படிக்கட்டுகள் ஏறிச்சென்றால் திருமுருகப்பெருமான் பாலதண்டாயுதபாணியாக வரும் பக்தர்கள் குறைதீர்க்கும் குமரனாக அருள் புரிகிறார்.



முருகர் அழகுடன் அமர்ந்து அருள் தரும் அற்புதத்தை காண காஞ்சிக் கோவில் அருகிலுள்ள கனககிரி குமரன்மலை மலைக்கு வாருங்கள் .

வந்து தரீசனம் செய்து புதுப்பொலிவுடன் உருவாகிக் கொண்டிருக்கும் திருப்பணிக்கு தங்களால் இயன்ற உதவிகள் தாருங்கள்.

ஓம் முருகா சரணம் முருகா ...


நட்புடன் ஆன்மீகத்தேடலில்

குரு.பழ.மாதேசு

Sunday, July 24, 2011

அழகாய் முடிந்த கக்குவாய் மாரியம்மன் கும்பாபிஷேக விழா



கக்குவாய் மாரீயம்மன் கும்பாபிஷேகம் :




ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் குருவரெட்டியூர் (guruvareddiyur ) அரசமர வீதியில் அமர்ந்து ஆட்சி செய்யும்


அருள் நிறை கக்குவாய் மாரியம்மன் திருக்கோவில் (kakkuvai marriamman temple guruvareddiyur),அருள் நிறை சக்தி விநாயகர் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா நிகழும் கர ஆண்டு ஆனித்திங்கள் 25 ஆம் நாள் (10.07.2011) ஞாயிற்றுக்கிழமை நாளில் விடியல் காலை 5.30 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் சரியாக 6.07 மணிக்கு மிதுன லக்கினத்தில் அமரர் திரு .G.G குருமூர்த்தி EX.MLA அவர்களின் ஆசியாலும்



ஊராட்சி மன்றத் தலைவர் திரு .தாயகம் சிவ நடராசன் அவர்கள் மற்றும் கொமராபாளையம் அங்கப்பன் சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகிக்க திருக்குட நன்னீராட்டு விழா தமிழ்வேதம் முழங்க வேள்விப்பணியில் பவானியை சேர்ந்த சிவ .மாரியப்பன் மற்றும் சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம் முழங்க சிறப்பாக நடைபெற்றது.


பல சிவனடியார்கள் அடியார் பெருமக்களும், குருவரெட்டியூர் (guruvareddiyur) சுற்று வட்டார பெருமக்களும் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை கண்டுகளித்தனர்.

விழா நாள் இரவு ஆடுதுறை அழகு பன்னீர் செல்வம் அவர்களின் பட்டி மன்றம் சிறப்பாக நடந்தது. அதில் பேசிய அனைவரும் நன்றாக பேசினார்கள் . தாரமங்கலம் செந்தில் அவர்கனின் சிரிப்பில் மயங்க வைத்த பேச்சு அனைவரையும் கவர்ந்தது.


சிறியதாய் இருத்த கக்குவாய் மாரியம்மன் கோவிலை நேர்த்தியாக வடிவமைத்து கொடுத்த பொறியாளர் திரு. துரை.செல்வக்குமார் மற்றும் ஆலய சிற்பிகள் திரு.அத்தியப்பன்,திரு.வேலாயுதம், மற்றும் மங்கள இசை அமைத்த கொளத்தூர் அப்பு குழுவினர் அவர்களுக்கு கக்குவாய் மாரீயம்மன் அருள் கிடைக்கும் என்பது திண்ணம்.


எல்லா வற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல திருக்கோவில் கட்ட தன் ஒரு வருட உழைப்பை அற்பணம் செய்த திரு. அருள்சண்முகம் ஜோதிடர்,ப.அர்ச்சுணன், செ.முத்துராமலிங்கம். ஆசிரியர் தங்கவேல் ,தனசேகர் மற்றும் பலருக்கும் வாழ்த்துக்கள் கூறி


குருவரெட்டியூர் (guruvareddiyur) என்னும் சிற்றூரில் கட்டப்பட்டிருக்கும் அருள் நிறை கக்குவாய் மாரீயம்மன் திருக்கோவிலுக்கு வந்து அன்னையின் அருள் பெற்றுச் செல்ல அன்புடன் அழைக்கும்


குரு.பழ.மாதேசு, (guru.pala.mathesu)

குருவரெட்டியூர். (guruvareddiyur)

Tuesday, July 12, 2011

சிவாலயத்தை வழிபட வேண்டிய முறைகள்




சிவாலயத்தை வழிபட வேண்டிய முறைகள் :

1.ஆலயத்தின் உள்ளே சென்று கை கால் முகம் கழுவி அல்லது ஆலயம் அருகிலுள்ள நதிகளிகளில் நீராடி முதலில் கோபுர தரிசனம் செய்ய வேண்டும்
2. பின் கொடிமரத்தை வணங்கி ஆண்கள் அஷ்டாங்கமாகவும்(நெடுசாண் கிடையாக கை,கால்கள் நீட்டி படுத்து வணங்குவது) பெண்கள் பஞ்சாங்கமாகவும் (முட்டியிட்டு வணங்குவது)விழுந்து வணங்க வேண்டும் ,பின்னர் பலிபீடத்தை வணங்கி ஆசை.காமம் ,குரோதம் ,கோபம் போன்ற தீய குணங்களை அற்பணிக்க வேண்டும்

3.தூய மனதுடன் துவார வினாயகர் துவார முருகர் ஆகியோரை வணங்கி பின் உள்ளே சென்று சூரிய சந்திரர்களை வணங்கி அடுத்து நந்தீஷ்வரரை (வில்வம் வைத்து )வணங்க வேண்டும் .

4.சிவனுக்கு பிடித்த வில்வம்,மற்றும் பூக்கள் கொண்டு சென்று அடுத்து மூலவரான சிவபெருமானை பார்த்து நம " பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா " எனச்சொல்லி வணங்கி வணங்குதல் வேண்டும்

5. இறைவனை நினைத்து தேவாரம் திருவாசகம் பாடல் பாடுதல் ,பாடல் பாடுவதன் இறைவன் அருகில் செல்லலாம்


6.அடுத்து குரு 63 மூவர் வள்ளி தெய்வானை ,துர்க்கை, நடராஜப்பெருமானை வணங்கி வரவும்

7. அடுத்து சிவாலயத்தின் அம்பிகையை அபிராமி அந்தாதி பாடி வணங்கவும்

8.நிறைவாக சண்டிகேஸ்வரர் காலபைரவர் நவகிரகங்களை வணங்குதல் வேண்டும்

9.அதன் பின் கொடி மரத்தை அடைந்து 1,3,5,7,9 என முறைப்படுத்தி பிரதக்ஷிணம் செய்ய வேண்டும் .பிரதக்ஷிணம் என்பது மெதுவாக நடத்தல் அடி அடியாக எனக்கொள்ளலாம் .அப்படி செய்தால் அஷ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும் என சாஸ்திரங்கள் சொல்லப்படுகின்றன.

10. பிரதட்க்ஷிணம் முடித்து 108 ,54,27 என்ற முறையில் ஜபம் செய்தால் மோட்சம் கிட்டும் 11.நிறைவாக நமஷ்காரம் செய்ய வேண்டும்.அப்படி செய்யும் போது நாம் செய்த பிழைகளும் விழுகின்றன. எழுப்போது பிழைகள் கூடவே வருவதில்லை. அப்போது எத்தனை தூசிகள் உடலில் ஓட்டி உள்ளனவோ அத்தனை வருடங்கள் மேலோகத்தில் சிறப்பாக விளங்குவான் (எழும்போது தூசிகள் தட்டக்கூடாது)


11. த்திரயங்க நமஷ்காரம் கைகளை தூக்கி தலையின் மேல் வைத்து வணங்குவது இதற்கு அஞ்சலி வந்தனம் என்று பெயர் 1,3,5,7,9 என்ற எண்ணிக்கையில் நமஸ்காரம் செய்ய வேண்டும்

12. சிவப்பிரசாதம் வாங்கி இடக்கையில் போடாமல் அப்படியே இட்டுக்கொள்ள வேண்டும் . திருக்கோவிலில் எங்காவது வைத்து அசுத்தப்படுத்தக்கூடாது.அர்சகர் கொடுக்கும் திருநீரு இறைவனே அளித்ததாக எண்ணி வீட்டில் அனைவருக்கும் தரவும்.


இம்முறை பின்பற்றி இறைவன வணங்குங்கள் .

எல்லா வளமும் நலமும் பெறுங்கள்.

இந்த இடுகையை பாராயணம் செய்த

உங்களுக்கு சிவனருள் கிட்ட வேண்டி விரும்பும்

குரு.பழ.மாதேசு

Friday, July 1, 2011





அருள்மிகு கக்குவாய் மாரியம்மன் அருள்மிகு செல்வவிநாயகர் திருக்கோவில் கும்பாபிஷேகத் திருவிழா நிகழும் கர ஆண்டு ஆனித்திங்கள் 25 ஆம் நாள் 10.07.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று விடியற்காலை 05.30 மணி முதல் 06.30 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு விழா தமிழ்வேதம் முழங்க நடைபெற உள்ளது .

அனைத்து ஆன்மிக பெருமக்களும் ,பொது மக்களும் வருகை தருமாறு அழைக்கப்படுகிறது. விழா அன்று காலை 09.00
மணிக்கு அன்னதானம் நடைபெறும். அனைவரும் வருக

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...